ETV Bharat / state

தளர்வு பகுதிகளாகிய 730 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்!

author img

By

Published : May 26, 2020, 9:30 PM IST

சென்னை: சென்னையில் இதுவரை 730 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தளர்வுப் பகுதிகளாக மாறியுள்ளன என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

containment_zone
containment_zone

தமிழ்நாட்டில் நான்காம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்கிறது.

நேற்று மட்டும் சென்னையில் கரோனா பாதிப்பு 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் கிருமி நாசினி தெளிப்பது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, மருத்துவ ஊழியர்கள், அத்தியாவசிய பணியாளர்கள் தவிர அங்கு யாரும் நுழையக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது மாநகரில் 420 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:

ராயபுரம் - 108 பகுதிகள், திரு.வி.க. நகர் - 65 பகுதிகள், வளசரவாக்கம் - 7 பகுதிகள், தண்டையார்பேட்டை - 3 பகுதிகள், தேனாம்பேட்டை - 36 பகுதிகள், அம்பத்தூர் - 38 பகுதிகள், கோடம்பாக்கம் - 13 பகுதிகள், திருவொற்றியூர் - 27 பகுதிகள், அடையாறு - 13 பகுதிகள், அண்ணா நகர் - 3 பகுதிகள், மாதவரம் - 51 பகுதிகள், மணலி - 23 பகுதிகள், சோழிங்கநல்லூர் - 12 பகுதிகள், பெருங்குடி - 11 பகுதிகள், ஆலந்தூர் - 10 பகுதிகள். இதுவரையிலும் 730 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், தளர்வு பகுதிகளாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 84 விழுக்காட்டினர் பிற நோய்களின் தாக்கத்தால் இறப்பு

தமிழ்நாட்டில் நான்காம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்கிறது.

நேற்று மட்டும் சென்னையில் கரோனா பாதிப்பு 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் கிருமி நாசினி தெளிப்பது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, மருத்துவ ஊழியர்கள், அத்தியாவசிய பணியாளர்கள் தவிர அங்கு யாரும் நுழையக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது மாநகரில் 420 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:

ராயபுரம் - 108 பகுதிகள், திரு.வி.க. நகர் - 65 பகுதிகள், வளசரவாக்கம் - 7 பகுதிகள், தண்டையார்பேட்டை - 3 பகுதிகள், தேனாம்பேட்டை - 36 பகுதிகள், அம்பத்தூர் - 38 பகுதிகள், கோடம்பாக்கம் - 13 பகுதிகள், திருவொற்றியூர் - 27 பகுதிகள், அடையாறு - 13 பகுதிகள், அண்ணா நகர் - 3 பகுதிகள், மாதவரம் - 51 பகுதிகள், மணலி - 23 பகுதிகள், சோழிங்கநல்லூர் - 12 பகுதிகள், பெருங்குடி - 11 பகுதிகள், ஆலந்தூர் - 10 பகுதிகள். இதுவரையிலும் 730 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், தளர்வு பகுதிகளாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 84 விழுக்காட்டினர் பிற நோய்களின் தாக்கத்தால் இறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.