ETV Bharat / state

அனைவரும் முறையாக மாஸ்க் அணிந்தால் மூன்று வாரத்தில் கரோனா குறையும் - விஜயபாஸ்கர்

author img

By

Published : Dec 6, 2020, 12:11 PM IST

சென்னை: கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. அனைவரும் முறையாக மாஸ்க் அணிந்தால் மூன்று வாரத்தில் குறைந்துவிடும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளை தடுக்கும் வகையில், நடமாடும் மருத்துவக் குழுக்கள் அடங்கிய வாகனங்களை பன்நோக்கு மருத்துவமனை வளாகத்திலிருந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிப்பதற்கான இயந்திரங்களையும் அமைச்சர் தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "மழைக்காலங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் சென்னை மாநகராட்சியில் மட்டும் 65 நடமாடும் மருத்துவ குழுக்கள், அடுக்குமாடி கட்டடங்களிலும் கொசு மருந்து அடிக்கும் 21 புகை தெளிப்பு வாகனங்கள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.

மருத்துவக் குழு அடங்கிய வாகனங்களை ஆய்வு செய்யும் அமைச்சர் விஜயபாஸ்கர்
மருத்துவக் குழு அடங்கிய வாகனங்களை ஆய்வுசெய்யும் அமைச்சர் விஜயபாஸ்கர்

குடிநீரில் குளோரினேசன் செய்வதை முழுமையாக கண்காணிக்க வேண்டியது அவசியம். அவ்வாறு குளோரினேசன் சரியாக கலக்காவிட்டால் மழைக்காலத்தில் வரக்கூடிய மலேரியா, காய்ச்சல் போன்றவை வரும் என்பதால் அதனை பரிசோதனை செய்ய 15 குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெள்ளம், புயல் பாதிப்பில்லாத பிற மாவட்டங்களில் இருந்தும் மருத்துவ குழுக்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 240 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதலாக மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும்.

நடமாடும் மருத்துவக் குழுக்களை தொடங்கிவைத்த அமைச்சர்

டெங்கு கடந்த காலங்களை விட தற்போது 15 மடங்குவரை குறைவாகத்தான் இருக்கிறது. மழை நீர் தேங்குவது சுகாதாரத்துறைக்கு பெரிய சவாலாகத்தான் இருக்கும். நோய் தொற்று வராமல் தடுப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு

கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. அனைவரும் முறையாக மாஸ்க் அணிந்தால் மூன்று வாரத்தில் குறைந்துவிடும். கரோனா வைரஸ் தொற்று குறைந்துவிட்டது என யாரும் சாதாரணமாக இருந்துவிடக்கூடாது” என்றார்.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைக்குமா? பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதில்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளை தடுக்கும் வகையில், நடமாடும் மருத்துவக் குழுக்கள் அடங்கிய வாகனங்களை பன்நோக்கு மருத்துவமனை வளாகத்திலிருந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிப்பதற்கான இயந்திரங்களையும் அமைச்சர் தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "மழைக்காலங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் சென்னை மாநகராட்சியில் மட்டும் 65 நடமாடும் மருத்துவ குழுக்கள், அடுக்குமாடி கட்டடங்களிலும் கொசு மருந்து அடிக்கும் 21 புகை தெளிப்பு வாகனங்கள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.

மருத்துவக் குழு அடங்கிய வாகனங்களை ஆய்வு செய்யும் அமைச்சர் விஜயபாஸ்கர்
மருத்துவக் குழு அடங்கிய வாகனங்களை ஆய்வுசெய்யும் அமைச்சர் விஜயபாஸ்கர்

குடிநீரில் குளோரினேசன் செய்வதை முழுமையாக கண்காணிக்க வேண்டியது அவசியம். அவ்வாறு குளோரினேசன் சரியாக கலக்காவிட்டால் மழைக்காலத்தில் வரக்கூடிய மலேரியா, காய்ச்சல் போன்றவை வரும் என்பதால் அதனை பரிசோதனை செய்ய 15 குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெள்ளம், புயல் பாதிப்பில்லாத பிற மாவட்டங்களில் இருந்தும் மருத்துவ குழுக்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 240 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதலாக மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும்.

நடமாடும் மருத்துவக் குழுக்களை தொடங்கிவைத்த அமைச்சர்

டெங்கு கடந்த காலங்களை விட தற்போது 15 மடங்குவரை குறைவாகத்தான் இருக்கிறது. மழை நீர் தேங்குவது சுகாதாரத்துறைக்கு பெரிய சவாலாகத்தான் இருக்கும். நோய் தொற்று வராமல் தடுப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு

கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. அனைவரும் முறையாக மாஸ்க் அணிந்தால் மூன்று வாரத்தில் குறைந்துவிடும். கரோனா வைரஸ் தொற்று குறைந்துவிட்டது என யாரும் சாதாரணமாக இருந்துவிடக்கூடாது” என்றார்.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைக்குமா? பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.