ETV Bharat / state

கொரோனா வைரஸ் எதிரொலி: தமிழ்நாடு முழுவதும்  2003 பயணிகள் வீட்டுக்காவலில் கண்காணிப்பு! - தமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா வைரஸ் இல்லை

சென்னை: தமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா வைரஸ் இல்லையெனவும், 2003 பயணிகள் பொது சுகாதாரத் துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

Surveillance in 2003 Passenger Home Guard!
Surveillance in 2003 Passenger Home Guard!
author img

By

Published : Feb 12, 2020, 10:59 PM IST

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள கொரோனா வைரஸ் கண்காணிப்புத் தகவலில், உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்புகள் 25 நாடுகளில் உள்ளது என அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு இந்த நோய் வராமல், தடுப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் வரும் அனைத்துப் பயணிகளும் விமான நிலையத்தில் தெர்மல் சோதனை செய்யப்படுகின்றனர். இந்தியாவிலுள்ள 22 விமான நிலையங்களிலும் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய 4 விமான நிலையங்களில் தற்போது (12ஆம் தேதி) வரை 32 ஆயிரத்து 993 பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 2003 பயணிகள் வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் என ஒரு பயணி, தனி வார்டில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், 42 பயணிகளின் ரத்தப்பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டன. அவற்றில் சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலையத்தில் 38 பயணிகளின் ரத்த மாதிரிகளும், பூனேவிலுள்ள தேசிய வைரல் நோய் தடுப்பு நிறுவனத்தில் நான்கு பயணிகளின் ரத்த மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அனைத்துப் பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை மற்றும் வீட்டிலுள்ள பயணிகள் அனைவரும் நலமாக உள்ளனர். சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்தவர்கள் தொடர்ந்து 28 நாட்களுக்கு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல் - இரு இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு!

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள கொரோனா வைரஸ் கண்காணிப்புத் தகவலில், உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்புகள் 25 நாடுகளில் உள்ளது என அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு இந்த நோய் வராமல், தடுப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் வரும் அனைத்துப் பயணிகளும் விமான நிலையத்தில் தெர்மல் சோதனை செய்யப்படுகின்றனர். இந்தியாவிலுள்ள 22 விமான நிலையங்களிலும் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய 4 விமான நிலையங்களில் தற்போது (12ஆம் தேதி) வரை 32 ஆயிரத்து 993 பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 2003 பயணிகள் வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் என ஒரு பயணி, தனி வார்டில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், 42 பயணிகளின் ரத்தப்பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டன. அவற்றில் சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலையத்தில் 38 பயணிகளின் ரத்த மாதிரிகளும், பூனேவிலுள்ள தேசிய வைரல் நோய் தடுப்பு நிறுவனத்தில் நான்கு பயணிகளின் ரத்த மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அனைத்துப் பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை மற்றும் வீட்டிலுள்ள பயணிகள் அனைவரும் நலமாக உள்ளனர். சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்தவர்கள் தொடர்ந்து 28 நாட்களுக்கு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல் - இரு இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.