ETV Bharat / state

சென்னையில் 10 மண்டலங்களில் ஆயிரத்தைத் தாண்டிய கரோனா!

author img

By

Published : Jun 15, 2020, 2:20 PM IST

சென்னை: சென்னையில் 10 மண்டலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஆயிரத்தைத் தாண்டியது எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ்
கரோனா வைரஸ்

சென்னையில் கரோனா வைரஸ் (தீநுண்மி) வேகமாகப் பரவிவருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மட்டும் 1,415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தீநுண்மிப் பரவலைத் தடுக்க மாநகராட்சியும், மாநில அரசும் புதிய புதிய யுக்தியைக் கையாளுகிறது. இருப்பினும் கரோனா தொற்று பரவல் குறையாமல் உள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களில் 10இல் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தீநுண்மி உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையானது மண்டல வாரியாகப் பட்டியல் ஒன்றினை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,

ராயபுரம்5216 பேர்
திரு.வி.க. நகர் 2922 பேர்
வளசரவாக்கம்1395 பேர்
தண்டையார்பேட்டை4082 பேர்
தேனாம்பேட்டை 3844 பேர்
அம்பத்தூர் 1105 பேர்
கோடம்பாக்கம்3409 பேர்
திருவொற்றியூர்1171 பேர்
அடையாறு 1809 பேர்
அண்ணா நகர்3150 பேர்
மாதவரம்854 பேர்
மணலி 448 பேர்
சோழிங்கநல்லூர்586 பேர்
பெருங்குடி594 பேர்
ஆலந்தூர்624 பேர்

என 15 மண்டலங்களில் 31,896 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16,671 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது மக்களுக்கு ஆறுதல் தருகிறது.

மேலும் இந்த 31,896 நபர்களில் 59.96 விழுக்காட்டினர் ஆண்களும் 40.03 விழுக்காட்டினர் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 44 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு!

சென்னையில் கரோனா வைரஸ் (தீநுண்மி) வேகமாகப் பரவிவருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மட்டும் 1,415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தீநுண்மிப் பரவலைத் தடுக்க மாநகராட்சியும், மாநில அரசும் புதிய புதிய யுக்தியைக் கையாளுகிறது. இருப்பினும் கரோனா தொற்று பரவல் குறையாமல் உள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களில் 10இல் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தீநுண்மி உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையானது மண்டல வாரியாகப் பட்டியல் ஒன்றினை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,

ராயபுரம்5216 பேர்
திரு.வி.க. நகர் 2922 பேர்
வளசரவாக்கம்1395 பேர்
தண்டையார்பேட்டை4082 பேர்
தேனாம்பேட்டை 3844 பேர்
அம்பத்தூர் 1105 பேர்
கோடம்பாக்கம்3409 பேர்
திருவொற்றியூர்1171 பேர்
அடையாறு 1809 பேர்
அண்ணா நகர்3150 பேர்
மாதவரம்854 பேர்
மணலி 448 பேர்
சோழிங்கநல்லூர்586 பேர்
பெருங்குடி594 பேர்
ஆலந்தூர்624 பேர்

என 15 மண்டலங்களில் 31,896 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16,671 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது மக்களுக்கு ஆறுதல் தருகிறது.

மேலும் இந்த 31,896 நபர்களில் 59.96 விழுக்காட்டினர் ஆண்களும் 40.03 விழுக்காட்டினர் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 44 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.