ETV Bharat / state

எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை

author img

By

Published : Mar 19, 2020, 10:26 PM IST

சென்னை: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளை ரயில்வே காவல் துறையினர் தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர்.

Corona railway protect கரோனா பரிசோதனை எழும்பூர் ரயில் நிலையம் சென்னை கரோனா பரிசோதனை ரயில் நிலையம் கரோனா பரிசோதனை Corona Test At Egmore Railway Station Corona Test Corona Test at Railway Station Chennai Corona Test at Railway Station
Corona Test at Railway Station

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நேற்று டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்த மாணவர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதனால், ரயில்வே உயர் அலுவலர்கள் உத்தரவின் பேரில் ரயில் நிலையங்களில் கரோனா குறித்த விழிப்புணர்வு மருத்துவ முகாம் அமைத்து பொதுமக்களைப் பரிசோதிக்க எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று செவிலியருடன் இணைந்து ரயில்வே காவல் துறையினர் பயணிகளை தெர்மல் ஸ்கீரினிங் கருவியைக் கொண்டு கரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளதா எனப் பரிசோதனை செய்து வருகின்றனர்.

மேலும் கரோனா குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை ரயில் பயணிகளுக்கு அளித்தனர். பின்னர் ரயில்வே காவல் துணைக் கண்காணிப்பாளர் எட்வர்ட் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளைப் பரிசோதிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்று எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளைப் பரிசோதித்து வருகிறோம். எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ஏழு நுழைவுவாயில்கள் நான்கு வாயில்களாகக் குறைக்கப்பட்டு முழுவதுமாகப் பரிசோதித்த பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுவர்" என்றார்.

பயணிகளை பரிசோதனை செய்யும் ரயில்வே காவலர்கள்

தொடர்ந்து அவர் கூறுகையில், "65 ரயில்வே காவலர்கள், 25 ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்கள், செவிலியருடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பரிசோதனையானது வரும் 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரோனா தொற்று - வெறிச்சோடிய தி.நகரில் கிரிக்கெட் ஆடும் இளைஞர்கள்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நேற்று டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்த மாணவர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதனால், ரயில்வே உயர் அலுவலர்கள் உத்தரவின் பேரில் ரயில் நிலையங்களில் கரோனா குறித்த விழிப்புணர்வு மருத்துவ முகாம் அமைத்து பொதுமக்களைப் பரிசோதிக்க எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று செவிலியருடன் இணைந்து ரயில்வே காவல் துறையினர் பயணிகளை தெர்மல் ஸ்கீரினிங் கருவியைக் கொண்டு கரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளதா எனப் பரிசோதனை செய்து வருகின்றனர்.

மேலும் கரோனா குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை ரயில் பயணிகளுக்கு அளித்தனர். பின்னர் ரயில்வே காவல் துணைக் கண்காணிப்பாளர் எட்வர்ட் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளைப் பரிசோதிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்று எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளைப் பரிசோதித்து வருகிறோம். எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ஏழு நுழைவுவாயில்கள் நான்கு வாயில்களாகக் குறைக்கப்பட்டு முழுவதுமாகப் பரிசோதித்த பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுவர்" என்றார்.

பயணிகளை பரிசோதனை செய்யும் ரயில்வே காவலர்கள்

தொடர்ந்து அவர் கூறுகையில், "65 ரயில்வே காவலர்கள், 25 ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்கள், செவிலியருடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பரிசோதனையானது வரும் 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரோனா தொற்று - வெறிச்சோடிய தி.நகரில் கிரிக்கெட் ஆடும் இளைஞர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.