ETV Bharat / state

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

author img

By

Published : Mar 8, 2021, 4:49 PM IST

Updated : Mar 8, 2021, 5:36 PM IST

சென்னை: கரோனா தொற்று சென்னையில் மீண்டும் அதிகரித்து வருவதால், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அமைக்கப்படுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை
சென்னை

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகே தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடங்கி வைத்த மாநகரட்சி ஆணையர் பிரகாஷ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "சென்னையில் நாள்தோறும் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது, இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் பணியில் 35 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபடவுள்ளனர், அவர்களுக்கு 1 வாரத்திற்குள் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

சென்னையில் மீண்டும் கரோனா
சென்னையில் மீண்டும் கரோனா
கரோனாவில் இருந்து மீண்டு வர தடுப்பூசி தான் அறிவியல் பூர்வமாக கை குடுக்கும். மேலும், சென்னையில் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. சென்னையில் கரோனா பாதிப்பு சற்று அதிகரித்திருப்பதால், அடுத்த 2 மாதங்களுக்கு பொது மக்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.இ-பாஸ் கட்டாயம்

கேரளா, பஞ்சாப், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் இருந்து சென்னை வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம். இ-பாஸ் முறை நாளுக்கு நாள் மாறுபடும், இதற்காக சோதனைச்சாவடிகள் தனியாக அமைக்கப்படாது. கரோனா தொற்று சிறிது அதிகரித்திருப்பதால் கட்டுபடுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் 39 ஆயிரம் தெருக்கள் இருக்கும் நிலையில், 10 தெருக்களில் தான், கட்டுபாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.

மாஸ்க் ப்ளீஸ்
கரோனா தடுப்பு மருந்தால் நோய் பரவல் குறையும். அதேவேளையில், மக்கள் தொடர்ந்து மாஸ்க் அணிய வேண்டும். இதுவரை, மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து 4 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. " என தெரிவித்தார்.

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகே தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடங்கி வைத்த மாநகரட்சி ஆணையர் பிரகாஷ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "சென்னையில் நாள்தோறும் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது, இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் பணியில் 35 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபடவுள்ளனர், அவர்களுக்கு 1 வாரத்திற்குள் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

சென்னையில் மீண்டும் கரோனா
சென்னையில் மீண்டும் கரோனா
கரோனாவில் இருந்து மீண்டு வர தடுப்பூசி தான் அறிவியல் பூர்வமாக கை குடுக்கும். மேலும், சென்னையில் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. சென்னையில் கரோனா பாதிப்பு சற்று அதிகரித்திருப்பதால், அடுத்த 2 மாதங்களுக்கு பொது மக்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.இ-பாஸ் கட்டாயம்

கேரளா, பஞ்சாப், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் இருந்து சென்னை வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம். இ-பாஸ் முறை நாளுக்கு நாள் மாறுபடும், இதற்காக சோதனைச்சாவடிகள் தனியாக அமைக்கப்படாது. கரோனா தொற்று சிறிது அதிகரித்திருப்பதால் கட்டுபடுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் 39 ஆயிரம் தெருக்கள் இருக்கும் நிலையில், 10 தெருக்களில் தான், கட்டுபாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.

மாஸ்க் ப்ளீஸ்
கரோனா தடுப்பு மருந்தால் நோய் பரவல் குறையும். அதேவேளையில், மக்கள் தொடர்ந்து மாஸ்க் அணிய வேண்டும். இதுவரை, மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து 4 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. " என தெரிவித்தார்.

Last Updated : Mar 8, 2021, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.