சென்னை ஐஐடி மாணவர்களுக்கு, கரோனா தொற்று டிசம்பர் 9ஆம் தேதிக்கு மேல் அதிகளவில் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி நிர்வாகம், ஐஐடி வளாகத்தில் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
![சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஐஐடி வளாகத்தில்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9906518_iitcc.jpeg)
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் கரோனா வைரஸ் கண்டறியும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
![கரோனா தடுப்புப் பணி தீவிரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9906518_iitc.jpg)
தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா
சென்னை ஐஐடியில் நேற்று முன்தினம் வரை (டிச.15) 1,104 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 191 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
![கரோனா தடுப்புப் பணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9906518_iitccc.jpeg)
நேற்று (டிச.16) 92 நபர்களுக்கு, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில், ஐஐடி குடியிருப்பில் இருந்த ஒருவர் உட்பட மூவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
![அண்ணா பல்கலைக்கழகத்தில் கரோனா நிலை?](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9906518_annauniversity.jpg)
அண்ணா பல்கலைக்கழகத்தில் கரோனா நிலை?
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று (டிச.16 ) 251 பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ததில் மாணவர்கள் யாருக்கும் புதிதாக நோய் தொற்று கண்டறியப்படவில்லை என, சென்னை மாநகராட்சி மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.