ETV Bharat / state

இன்றைய நிலையில் எங்கு இருக்கிறது கரோனா? - முழு விபரம்

author img

By

Published : Apr 16, 2020, 11:51 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கத்தின் நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

govt
govt

அதன்படி, தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 94 ஆயிரத்து 450 பேர் நேற்று வரை வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். அவர்களில் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பினை இன்று 75,970 பேர் முடித்துள்ளனர்.

தற்போது ஒரு லட்சத்து 31 பேர் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். மேலும் தொற்று அதிக அளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 41 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப் படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் விமான நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் தனி வார்டில் ஆயிரத்து 882 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

26 ஆயிரத்து 5 பேரின் ரத்தப் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டன. இவர்களில் 1,267 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 18,743 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது . 1,400 நபர்களின் ரத்தம், சளி பரிசோதனை ஆய்வகங்களில் செய்யப்பட்டு வருகிறது. 4,595 பேருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 180 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் நேற்று வரை 1,242 பேருக்கும், இன்று 25 பேருக்கும் என 1,267 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.

சிகிச்சை பலன் அளிக்காமல் 15 பேர் இறந்துள்ளனர். மேலும் தீவிர செயற்கை சுவாசம் அளிப்பதற்கான வெண்டிலேட்டர் 3,371ம், 29,074 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகளும் தயார் நிலையில் உள்ளன.

மேலும் இன்று நடத்தப்பட்ட ரத்த பரிசோதனை முடிவுகளில் விழுப்புரம் மாவட்டத்தில் ஒருவருக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருவருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் ஒருவருக்கும், சேலம் மாவட்டத்தில் இரண்டு, நாமக்கல் மாவட்டத்தில் ஐந்து பேருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருவருக்கும், மதுரை மாவட்டத்தில் மூன்று பேருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் மூன்று பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருவருக்கும், சென்னை மாவட்டத்தில் மூன்று பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனா தொற்று உறுதியாகியுள்ள 34 மாவட்டங்களின் நிலவரம்:

  • சென்னை - 217
  • கோயம்புத்தூர் - 127
  • திருப்பூர் - 80
  • ஈரோடு - 70
  • திண்டுக்கல் - 65
  • திருநெல்வேலி - 58
  • செங்கல்பட்டு - 50
  • நாமக்கல் - 50
  • மதுரை - 44
  • திருச்சிராப்பள்ளி - 43
  • கரூர் - 41
  • தேனி - 41
  • திருவள்ளூர் - 41
  • ராணிப்பேட்டை - 39
  • நாகப்பட்டினம் - 38
  • தூத்துக்குடி - 26
  • விழுப்புரம் - 24
  • சேலம் - 24
  • கடலூர் - 20
  • வேலூர் - 19
  • தஞ்சாவூர் - 18
  • விருதுநகர் - 17
  • திருப்பத்தூர் - 17
  • திருவாரூர் - 17
  • கன்னியாகுமரி - 16
  • திருவண்ணாமலை - 12
  • சிவகங்கை - 11
  • ராமநாதபுரம் - 10
  • நீலகிரி - 9
  • தென்காசி - 9
  • காஞ்சிபுரம் - 8
  • கள்ளக்குறிச்சி - 3
  • அரியலூர் - 2
  • பெரம்பலூர் - 1

அதன்படி, தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 94 ஆயிரத்து 450 பேர் நேற்று வரை வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். அவர்களில் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பினை இன்று 75,970 பேர் முடித்துள்ளனர்.

தற்போது ஒரு லட்சத்து 31 பேர் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். மேலும் தொற்று அதிக அளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 41 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப் படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் விமான நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் தனி வார்டில் ஆயிரத்து 882 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

26 ஆயிரத்து 5 பேரின் ரத்தப் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டன. இவர்களில் 1,267 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 18,743 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது . 1,400 நபர்களின் ரத்தம், சளி பரிசோதனை ஆய்வகங்களில் செய்யப்பட்டு வருகிறது. 4,595 பேருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 180 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் நேற்று வரை 1,242 பேருக்கும், இன்று 25 பேருக்கும் என 1,267 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.

சிகிச்சை பலன் அளிக்காமல் 15 பேர் இறந்துள்ளனர். மேலும் தீவிர செயற்கை சுவாசம் அளிப்பதற்கான வெண்டிலேட்டர் 3,371ம், 29,074 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகளும் தயார் நிலையில் உள்ளன.

மேலும் இன்று நடத்தப்பட்ட ரத்த பரிசோதனை முடிவுகளில் விழுப்புரம் மாவட்டத்தில் ஒருவருக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருவருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் ஒருவருக்கும், சேலம் மாவட்டத்தில் இரண்டு, நாமக்கல் மாவட்டத்தில் ஐந்து பேருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருவருக்கும், மதுரை மாவட்டத்தில் மூன்று பேருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் மூன்று பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருவருக்கும், சென்னை மாவட்டத்தில் மூன்று பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனா தொற்று உறுதியாகியுள்ள 34 மாவட்டங்களின் நிலவரம்:

  • சென்னை - 217
  • கோயம்புத்தூர் - 127
  • திருப்பூர் - 80
  • ஈரோடு - 70
  • திண்டுக்கல் - 65
  • திருநெல்வேலி - 58
  • செங்கல்பட்டு - 50
  • நாமக்கல் - 50
  • மதுரை - 44
  • திருச்சிராப்பள்ளி - 43
  • கரூர் - 41
  • தேனி - 41
  • திருவள்ளூர் - 41
  • ராணிப்பேட்டை - 39
  • நாகப்பட்டினம் - 38
  • தூத்துக்குடி - 26
  • விழுப்புரம் - 24
  • சேலம் - 24
  • கடலூர் - 20
  • வேலூர் - 19
  • தஞ்சாவூர் - 18
  • விருதுநகர் - 17
  • திருப்பத்தூர் - 17
  • திருவாரூர் - 17
  • கன்னியாகுமரி - 16
  • திருவண்ணாமலை - 12
  • சிவகங்கை - 11
  • ராமநாதபுரம் - 10
  • நீலகிரி - 9
  • தென்காசி - 9
  • காஞ்சிபுரம் - 8
  • கள்ளக்குறிச்சி - 3
  • அரியலூர் - 2
  • பெரம்பலூர் - 1
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.