மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று (மே. 7) வெளியிட்டுள்ள புள்ளி விபர தகவலில், தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 352 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 20 நபர்கள் உட்பட 26 ஆயிரத்து 465 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 32 லட்சத்து 69 ஆயிரத்து 987 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 13 லட்சத்து 23 ஆயிரத்து 965 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தல் மையங்களில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 355 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 22 ஆயிரத்து 381 பேர் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 73 ஆயிரத்து 439 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வந்த 197 பேர் இறந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு :
சென்னை - 3,77,042
செங்கல்பட்டு - 92,476
கோயம்புத்தூர் - 90,454
திருவள்ளூர் - 68,121
சேலம் - 45,709
காஞ்சிபுரம் - 42,519
கடலூர் - 32,662
மதுரை - 36,716
வேலூர் - 30,333
தஞ்சாவூர் - 27,890
திருவண்ணாமலை - 25,603
திருப்பூர் - 29,865
கன்னியாகுமரி - 24,547
திருச்சிராப்பள்ளி - 27,740
தூத்துக்குடி - 28,200
திருநெல்வேலி - 29,181
தேனி - 22,713
விருதுநகர் - 21,801
ராணிப்பேட்டை - 23,405
விழுப்புரம் - 21,703
ஈரோடு - 25,240
நாமக்கல் - 18,299
திருவாரூர் - 16,750
திண்டுக்கல் - 17,547
புதுக்கோட்டை - 14,751
கள்ளக்குறிச்சி - 13,547
நாகப்பட்டினம் - 15,556
தென்காசி - 13,340
நீலகிரி - 10,633
கிருஷ்ணகிரி - 17,434
திருப்பத்தூர் - 11,158
சிவகங்கை - 9,441
தருமபுரி - 10,943
ராமநாதபுரம் - 9,768
கரூர் - 9,219
அரியலூர் - 6,095
பெரம்பலூர் - 3,057
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,004
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் அசுரன்