ETV Bharat / state

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மாயம்!

author img

By

Published : Jan 8, 2022, 12:29 PM IST

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி திடீரென மாயமானார். அவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கர்ப்பிணி திடீர் மாயம்
கர்ப்பிணி திடீர் மாயம்

சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவர் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்குக் கடந்த 4 ஆம் தேதி உடல் நிலை சரியில்லாமல் போனதால் ஆவடியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்த போது கரோனா பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, நேற்று (ஜன.7) இளம்பெண்ணிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒமைக்ரான் தொற்று உள்ளதா எனப் பரிசோதனை செய்ய வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கீழ்பாக்கம் மருத்துவமனை
கீழ்பாக்கம் மருத்துவமனை

இந்நிலையில் இன்று (ஜன. 8) அதிகாலை வார்டிலிருந்த இளம்பெண் திடீரென காணாமல் போயுள்ளார். இதனிடையே, காணாமல் போன இளம்பெண்ணை மருத்துவ ஊழியர்கள் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் கீழ்பாக்கம் மருத்துவமனை காவல்துறையினரிடம் தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, தகவலின் பேரில் முகவரியை வைத்து இளம்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நடிகை குஷ்பூ, பொன்னார் உள்பட 153 பேர் வழக்குப்பதிவு

சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவர் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்குக் கடந்த 4 ஆம் தேதி உடல் நிலை சரியில்லாமல் போனதால் ஆவடியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்த போது கரோனா பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, நேற்று (ஜன.7) இளம்பெண்ணிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒமைக்ரான் தொற்று உள்ளதா எனப் பரிசோதனை செய்ய வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கீழ்பாக்கம் மருத்துவமனை
கீழ்பாக்கம் மருத்துவமனை

இந்நிலையில் இன்று (ஜன. 8) அதிகாலை வார்டிலிருந்த இளம்பெண் திடீரென காணாமல் போயுள்ளார். இதனிடையே, காணாமல் போன இளம்பெண்ணை மருத்துவ ஊழியர்கள் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் கீழ்பாக்கம் மருத்துவமனை காவல்துறையினரிடம் தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, தகவலின் பேரில் முகவரியை வைத்து இளம்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நடிகை குஷ்பூ, பொன்னார் உள்பட 153 பேர் வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.