ETV Bharat / state

'ருத்ர தாண்டவம்' திரைப்பட இயக்குநரைக் கைது செய்யக்கோரி புகார்!

author img

By

Published : Sep 1, 2021, 7:52 PM IST

கிறிஸ்தவர்களை அச்சுறுத்தி, மதக்கலவரங்களைத் தூண்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ள 'ருத்ர தாண்டவம்' திரைப்படத்தைத் தடை செய்து, திரைப்பட இயக்குநரைக் கைது செய்ய வேண்டும் என சிறுபான்மை மக்கள் நலக் கட்சி சார்பில் காவல் துறைத் தலைவர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

'ருத்ரதாண்டவம்' திரைப்பட இயக்குநரைக் கைது செய்யக்கோரி புகார்!
'ருத்ரதாண்டவம்' திரைப்பட இயக்குநரைக் கைது செய்யக்கோரி புகார்!

சென்னை: ஆதிக்க சமூகத்தினருக்குச் சார்பாக எடுக்கப்பட்ட திரைப்படம் என விமர்சிக்கப்பட்ட "திரௌபதி" திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்றவர், இயக்குநர் மோகன் ஜி. இவர் தற்போது அதே பெரும்பாலான படக்குழுவினருடன் 'ருத்ர தாண்டவம்' எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி 'ருத்ர தாண்டவம்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, பல்வேறு தரப்பிலும் விமர்சிக்கப்பட்டது.

மதக்கலவரங்கள் வெடிக்க வாய்ப்பு

இந்நிலையில் காவல் துறைத் தலைவர் அலுவலகத்தில் சிறுபான்மை மக்கள் நலக் கட்சி சார்பில், "ருத்ர தாண்டவம்" திரைப்படத்தை தடை செய்யக்கோரி இன்று (செப்.1) புகார் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் சிறுபான்மை மக்கள் நலக் கட்சி தேசியத் தலைவர் சாம் ஏசுதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகிறார்கள் எனக்கூறி, உண்மைக்குப் புறம்பான கருத்துகளை "ருத்ர தாண்டவம்" திரைப்படம் மூலம் மக்கள் மனதில் பதியவைக்க இயக்குநர் மோகன் ஜி முயற்சிக்கிறார்.

தொடர்ந்து அமைதியான முறையில் சாதி, மத, பேதமின்றி தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் கிறிஸ்தவ மக்களை தனிமைப்படுத்தி, அச்சுறுத்தும் படமாக இந்தத் திரைப்படம் அமைந்துள்ளது. இதன் மூலம் மதக் கலவரங்கள் வெடிக்க வாய்ப்புள்ளது.

குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

இத்தகைய திரைப்படங்களால் ஒற்றுமையை குலைக்க நினைக்கும் இயக்குநர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து கைது செய்யவேண்டும்.

அத்துடன் "ருத்ர தாண்டவம்" திரைப்படத்தைத் தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்திப் புகார் அளித்துள்ளோம். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்' என்றார்.

இதையும் படிங்க: மூத்த நடிகை சயிரா பானு மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: ஆதிக்க சமூகத்தினருக்குச் சார்பாக எடுக்கப்பட்ட திரைப்படம் என விமர்சிக்கப்பட்ட "திரௌபதி" திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்றவர், இயக்குநர் மோகன் ஜி. இவர் தற்போது அதே பெரும்பாலான படக்குழுவினருடன் 'ருத்ர தாண்டவம்' எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி 'ருத்ர தாண்டவம்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, பல்வேறு தரப்பிலும் விமர்சிக்கப்பட்டது.

மதக்கலவரங்கள் வெடிக்க வாய்ப்பு

இந்நிலையில் காவல் துறைத் தலைவர் அலுவலகத்தில் சிறுபான்மை மக்கள் நலக் கட்சி சார்பில், "ருத்ர தாண்டவம்" திரைப்படத்தை தடை செய்யக்கோரி இன்று (செப்.1) புகார் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் சிறுபான்மை மக்கள் நலக் கட்சி தேசியத் தலைவர் சாம் ஏசுதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகிறார்கள் எனக்கூறி, உண்மைக்குப் புறம்பான கருத்துகளை "ருத்ர தாண்டவம்" திரைப்படம் மூலம் மக்கள் மனதில் பதியவைக்க இயக்குநர் மோகன் ஜி முயற்சிக்கிறார்.

தொடர்ந்து அமைதியான முறையில் சாதி, மத, பேதமின்றி தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் கிறிஸ்தவ மக்களை தனிமைப்படுத்தி, அச்சுறுத்தும் படமாக இந்தத் திரைப்படம் அமைந்துள்ளது. இதன் மூலம் மதக் கலவரங்கள் வெடிக்க வாய்ப்புள்ளது.

குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

இத்தகைய திரைப்படங்களால் ஒற்றுமையை குலைக்க நினைக்கும் இயக்குநர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து கைது செய்யவேண்டும்.

அத்துடன் "ருத்ர தாண்டவம்" திரைப்படத்தைத் தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்திப் புகார் அளித்துள்ளோம். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்' என்றார்.

இதையும் படிங்க: மூத்த நடிகை சயிரா பானு மருத்துவமனையில் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.