ETV Bharat / state

கதறி அழும் உதவிப் பேராசிரியை -ஐந்து நபர்கள் மீது வழக்குப்பதிவு

author img

By

Published : Sep 24, 2019, 4:58 PM IST

சென்னை: தனியார் மருத்துவக்கல்லூரியில் உதவிப் பேராசிரியை அடித்து துன்புறுத்தப்பட்ட வழக்கில், கல்லூரி பொது மேலாளர், துணை முதல்வர் உட்பட கல்லூரியில் பணிபுரிந்து வந்த ஐந்து நபர்கள் மீது ஐந்து பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

assistant professor

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே அமைந்துள்ளது தாகூர் பல் மருத்துவக் கல்லூரி. இக்கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்த இளம்பெண், சக பணியாளர்கள் தனக்கு பாலியல் தொல்லை தந்து தற்கொலைக்கு தூண்டுவதாக முகநூலில் பதிவிட்டார். இந்த வீடியோ சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கல்லூரி பொது மேலாளர், துணை முதல்வர் உள்ளிட்ட ஐந்து நபர்கள் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துகின்றனர். அறையில் பூட்டிவைத்து கடந்த இரண்டு வாரங்களாக தனக்கு உணவும், தண்ணீரும் தரவில்லை. இதனால் உடலளவில் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று பேசியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட உதவிப் பேராசிரியை, தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரது புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் லட்சுமிகாந்தன், கல்லூரி பொதுமேலாளர் சசிகுமார், செந்தில்குமார், துணை முதல்வர் வெங்கடகிருஷ்ணன், துப்புரவு பணியாளர் முனியம்மாள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே அமைந்துள்ளது தாகூர் பல் மருத்துவக் கல்லூரி. இக்கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்த இளம்பெண், சக பணியாளர்கள் தனக்கு பாலியல் தொல்லை தந்து தற்கொலைக்கு தூண்டுவதாக முகநூலில் பதிவிட்டார். இந்த வீடியோ சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கல்லூரி பொது மேலாளர், துணை முதல்வர் உள்ளிட்ட ஐந்து நபர்கள் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துகின்றனர். அறையில் பூட்டிவைத்து கடந்த இரண்டு வாரங்களாக தனக்கு உணவும், தண்ணீரும் தரவில்லை. இதனால் உடலளவில் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று பேசியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட உதவிப் பேராசிரியை, தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரது புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் லட்சுமிகாந்தன், கல்லூரி பொதுமேலாளர் சசிகுமார், செந்தில்குமார், துணை முதல்வர் வெங்கடகிருஷ்ணன், துப்புரவு பணியாளர் முனியம்மாள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:Body:*தனியார் கல்லூரி உதவி பேராசிரியரை அடித்து துன்புறுத்தி பாலியல்/துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தனியார் மருத்துவ கல்லூரி பொது மேலாளர், துணை முதல்வர் உட்பட கல்லூரியில் பணிபுரிந்து வந்த ஐந்து நபர்கள் மீது ஐந்து பிரிவின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு*


காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் அமைந்துள்ள பிரபல தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பப்பீலா என்கின்ற இளம்பெண் உதவி பேராசிரியராக கடந்த ஒன்றரை வருடங்களாக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் இவர் அந்த கல்லூரியில் இருக்கக்கூடிய பொது மேலாளர் உதவி முதல்வர் உட்பட சிலர் மீது பகிரங்கமான ஒரு குற்றச்சாட்டை முகநூல் வாயிலாக வீடியோவாக பதிவு செய்திருந்தார் அந்த வீடியோவில் அவர் கூறியதாவது 


காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் பகுதி அடுத்த தனியார் மருத்துவ கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வரருவதாகவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கல்லூரி விடுதியில் தங்கி கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார் ஆபீஸ் அட்மின் லட்சுமிகாந்தன் மற்றும் செந்தில் என்பவர்களால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் துன்புறுத்தப்படுவதாக வெங்கட் ராமையா என்பவர் தன்னைப் பற்றி மிகவும் கீழ்தரமாக சித்தரித்து அனைவரிடமும் கூறி வருகிறார் என்றும் அக்கல்லூரியின் துணை முதல்வர் வெங்கடகிருஷ்ணன் என்னை பணி நீக்கம் செய்தால் உனது வாழ்க்கை சீரழிந்து விடும் என மிரட்டுகிறார் மேலும் அக்கல்லூரியில் பணிபுரிந்துவரும் ஊழியர் கிருஷ்ணேஷ்வரி என்பவர் பேராசிரியர்கள் இருக்கும் அறைக்குள் செல்லும் பொழுது என்னை மிகவும் கீழ்த்தரமாக பேசி மாணவர்கள் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தி அந்த அறையிலிருந்து என்னை வெளியேற்றினார் இக்கல்லூரியில் மனிதத்தன்மையற்ற முறையில் மிகவும் கீழ்த் தரமாகவும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டு தற்போது கல்லூரி வளாகத்தில் வைத்து ஒரு அறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் கடந்த இரண்டு வாரங்களாக உணவு இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் கடந்த இரண்டு நாட்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தி விட்டதால் மிகவும் அவதிப்பட்டு வருவதாக முகநூலில் பதிவிட்டுள்ளார் மேலும் தன்னை மிரட்டுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் என்னை யாராவது காப்பாற்ற வேண்டும் அதேபோல் எனக்கு உரிய நீதியும் கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் மேலும் தன்னை தற்கொலை செய்து கொள்ள வற்புறுத்தி வருகிறார்கள் என குற்றம்சாட்டி இருக்கிறார் 


இதுகுறித்து பப்பீலா காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் 
நிர்வாகத் துறையில் பணிபுரியும் லட்சுமிகாந்தன் என்பவர் தன்னை பார்க்கும்போதெல்லாம் ஆபாசமாக பேசி வந்ததாகவும் பொது மேலாளராக உள்ள சசிகுமார் என்பவர் தனது அறைக்கு வந்து தன் உடை மாற்றிக் கொண்டிருக்கும் போது செல்போனில் படம் பிடித்ததாகவும் துப்புரவு பணியாளர் முனியம்மாள் தனது அறையில் செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்றதாகவும் .
நிர்வாகத்துறையில் உள்ள செந்தில் தன்னை தலையில் அடித்து மிரட்டியதாகவும் துணை முதல்வர் கல்லூரி நிர்வாகம் அளிக்கும் பணி விடுப்பு ஆணையை பெற்றுக்கொள்ளுமாறு கூறியதாகவும் அதற்கு தான் மறுத்தபோது தன்னிடம் இருந்த செல்போனை பிடுங்கி எனது எதிர்காலத்தை பாழாக்கி விடுவேன் 
என மிரட்டியதாகவும் கொடுத்த புகார் மனு மீது தாழம்பூர் காவல் நிலையத்தில்
கல்லூரி நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் லட்சுமிகாந்தன், கல்லூரி பொதுமேலாளர் சசிகுமார், Finance Dept. செந்தில்குமார்,துணை முதல்வர் வெங்கடகிருஷ்ணன்,துப்புரவு பணியாளர் முனியம்மாள் ஆகியோர் மீது Cr. No. 332/2019
u/Sec. 354 (A) (1) (i), 
354 (B), 379, 506(i) IPC 
r/w 4 of WH Act. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.