ETV Bharat / state

Chennai Metro Phase2: போக்குவரத்து நெரிசலை குறைக்க 5 இடங்களில் மேம்பாலங்கள்

author img

By

Published : Dec 30, 2022, 5:43 PM IST

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், அடையாறு, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், மஞ்சம்பாக்கம், காட்டுப்பாக்கம் ஆகிய 5 இடங்களில் மேம்பாலம் அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

CMRL
CMRL

சென்னை: சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் முதல் கட்டமாக விமான நிலையம் - விம்கோ நகர், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் ஆகிய இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 3 வழித்தடங்களில் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் அடையாறு, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், மஞ்சம்பாக்கம், காட்டுப்பாக்கம் ஆகிய 5 இடங்களில் மேம்பாலம் அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பசுமைவழிச் சாலையிலிருந்து அடையாறு ஆற்றின் கீழ் அமைக்கப்படும் சுரங்க ரயில் பாதை அடையாறு சந்திப்பு ரயில் நிலையத்தை அடையும். இந்த ரயில் நிலையம் தற்போது உள்ள அடையாறு பாலத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட இருக்கிறது. இந்தப் பணிக்கு இடையூறாக இருக்கும் அடையாறு பாலத்தின் மேல் இருந்து அடையாறு நோக்கிச் செல்லும் பாலத்தின் இடது பகுதியை இடித்து அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பணியின்போது, பசுமைவழிச் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக, அடையாறு சந்திப்பு அருகில் புதிய இரும்பு பாலம் ஒன்றைக் கட்ட முடிவு செய்துள்ளது.

இவை தவிர, கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி மெட்ரோ பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மஞ்சம்பாக்கம், காட்டுப்பாக்கம் ஆகிய இடங்களிலும், மாதவரம்-சோழிங்கநல்லூர் மெட்ரோ பணிகளுக்காக சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் ஆகிய இடங்களிலும் உயர்மட்டப் பாலம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 4 பாலங்கள் நிரந்தர கான்கிரீட் பாலங்களாக அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

சென்னை: சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் முதல் கட்டமாக விமான நிலையம் - விம்கோ நகர், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் ஆகிய இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 3 வழித்தடங்களில் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் அடையாறு, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், மஞ்சம்பாக்கம், காட்டுப்பாக்கம் ஆகிய 5 இடங்களில் மேம்பாலம் அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பசுமைவழிச் சாலையிலிருந்து அடையாறு ஆற்றின் கீழ் அமைக்கப்படும் சுரங்க ரயில் பாதை அடையாறு சந்திப்பு ரயில் நிலையத்தை அடையும். இந்த ரயில் நிலையம் தற்போது உள்ள அடையாறு பாலத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட இருக்கிறது. இந்தப் பணிக்கு இடையூறாக இருக்கும் அடையாறு பாலத்தின் மேல் இருந்து அடையாறு நோக்கிச் செல்லும் பாலத்தின் இடது பகுதியை இடித்து அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பணியின்போது, பசுமைவழிச் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக, அடையாறு சந்திப்பு அருகில் புதிய இரும்பு பாலம் ஒன்றைக் கட்ட முடிவு செய்துள்ளது.

இவை தவிர, கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி மெட்ரோ பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மஞ்சம்பாக்கம், காட்டுப்பாக்கம் ஆகிய இடங்களிலும், மாதவரம்-சோழிங்கநல்லூர் மெட்ரோ பணிகளுக்காக சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் ஆகிய இடங்களிலும் உயர்மட்டப் பாலம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 4 பாலங்கள் நிரந்தர கான்கிரீட் பாலங்களாக அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.