ETV Bharat / state

இந்தியா-இலங்கை இடையே பேச்சுவார்த்தை நடத்தக் கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் - தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்தியா-இலங்கை இடையே மீனவர்கள் கைதுசெய்யப்படுவதைத் தடுக்கும்வகையில் கூட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
author img

By

Published : Feb 13, 2022, 7:11 PM IST

சென்னை: இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்படுவதும் தாக்கப்படுவதுமான நிகழ்வுகள் தொடர்ந்துவரும் நிலையில், இன்று (பிப்ரவரி 13) மேலும் ஒரு நிகழ்வாக 12 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளது குறித்து உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், "இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்படுவதும் தாக்கப்படுவதுமான நிலையில், அது குறித்து இந்தியப் பிரதமர் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இன்று மற்றுமொரு நிகழ்வாகத் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பன்னிரெண்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இத்தகைய அச்சமூட்டும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வது தமிழ்நாட்டு மக்களுக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்துகிறது.

41 மீனவர்கள் இலங்கை வசம்

நேற்று (பிப்ரவரி 12) IND-TN-10-MM-612, IND-TN-10-MM-328 ஆகிய பதிவெண்களைத் தாங்கிய இரண்டு இயந்திர மீன்பிடிப் படகுகளில் மீனவர்கள் ராமேஸ்வரம் தளத்திலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்ற நிலையில், இன்று அதிகாலையில் இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டு தலைமன்னாருக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களில் இவ்வாறு நடந்துள்ள மூன்றாவது சம்பவம் இது. தற்போது வரை, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 41 பேரும் ஆறு மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையின் வசம் உள்ளன.

இதுபோன்று மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைதுசெய்யப்படுவதும் துன்புறுத்தப்படுவதுமான நிகழ்வுகள் தமிழ்நாட்டின் மீனவர் சமூகத்திடையே, குறிப்பாக பாக் வளைகுடாப் பகுதியில் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன் மீனவர்களின் வாழ்வாதாரங்களை மோசமாகப் பாதித்துள்ளது.

எரிச்சலூட்டும் சிக்கலுக்கு நிலையான தீர்வு தேவை

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளின் மூலம் நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் இந்த எரிச்சலூட்டும் சிக்கலுக்கு நிலையான தீர்வைக் காண வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அதன் தொடக்கமாக இருதரப்புப் பேச்சுவார்த்தைகளைக் கூட்டுவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கோவிட் தீவிரம் குறைந்துள்ள தற்போதைய நிலையில், கூட்டுச் செயற்குழுக் கூட்டம் (JWG) மூலம் பேச்சுவார்த்தைகளை உடனடியாக மீண்டும் தொடங்க வலியுறுத்த வேண்டும்.

மேலும், அப்பகுதியில் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கும் வழிவகைச் செய்திட வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த 41 இந்திய மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை உயர்த்தி உத்தரவு

சென்னை: இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்படுவதும் தாக்கப்படுவதுமான நிகழ்வுகள் தொடர்ந்துவரும் நிலையில், இன்று (பிப்ரவரி 13) மேலும் ஒரு நிகழ்வாக 12 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளது குறித்து உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், "இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்படுவதும் தாக்கப்படுவதுமான நிலையில், அது குறித்து இந்தியப் பிரதமர் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இன்று மற்றுமொரு நிகழ்வாகத் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பன்னிரெண்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இத்தகைய அச்சமூட்டும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வது தமிழ்நாட்டு மக்களுக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்துகிறது.

41 மீனவர்கள் இலங்கை வசம்

நேற்று (பிப்ரவரி 12) IND-TN-10-MM-612, IND-TN-10-MM-328 ஆகிய பதிவெண்களைத் தாங்கிய இரண்டு இயந்திர மீன்பிடிப் படகுகளில் மீனவர்கள் ராமேஸ்வரம் தளத்திலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்ற நிலையில், இன்று அதிகாலையில் இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டு தலைமன்னாருக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களில் இவ்வாறு நடந்துள்ள மூன்றாவது சம்பவம் இது. தற்போது வரை, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 41 பேரும் ஆறு மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையின் வசம் உள்ளன.

இதுபோன்று மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைதுசெய்யப்படுவதும் துன்புறுத்தப்படுவதுமான நிகழ்வுகள் தமிழ்நாட்டின் மீனவர் சமூகத்திடையே, குறிப்பாக பாக் வளைகுடாப் பகுதியில் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன் மீனவர்களின் வாழ்வாதாரங்களை மோசமாகப் பாதித்துள்ளது.

எரிச்சலூட்டும் சிக்கலுக்கு நிலையான தீர்வு தேவை

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளின் மூலம் நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் இந்த எரிச்சலூட்டும் சிக்கலுக்கு நிலையான தீர்வைக் காண வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அதன் தொடக்கமாக இருதரப்புப் பேச்சுவார்த்தைகளைக் கூட்டுவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கோவிட் தீவிரம் குறைந்துள்ள தற்போதைய நிலையில், கூட்டுச் செயற்குழுக் கூட்டம் (JWG) மூலம் பேச்சுவார்த்தைகளை உடனடியாக மீண்டும் தொடங்க வலியுறுத்த வேண்டும்.

மேலும், அப்பகுதியில் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கும் வழிவகைச் செய்திட வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த 41 இந்திய மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை உயர்த்தி உத்தரவு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.