ETV Bharat / state

சண்முக சுப்பிரமணியனுக்கு முதலமைச்சர் வாழ்த்து! - நாசா பாராட்டு

சென்னை:  விக்ரம் லேண்டர் பாகங்களைக் கண்டுபிடித்த சண்முக சுப்பிரமணியனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

CM Appreciates Techie Shanmugam Subramaniyam
CM Appreciates Techie Shanmugam Subramaniyam
author img

By

Published : Dec 4, 2019, 3:14 PM IST

இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவின் தென்துருவத்தை ஆராய சந்திரயான்-2 விண்கலம் ஏவியது. நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக தொழில்நுநுட்ப கோளாறு காரணமாக விக்ரம் லேண்டருடன் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இஸ்ரோவும், அமெரிக்காவின் நாசாவும் ஈடுபட்டன. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்ரமணியம் நிலவில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் நிலவின் மேல்பரப்பில் இருப்பதாக நாசாவுக்கு தெரிவித்திருந்தார். அதை நாசாவும் உறுதிப்படுத்தி சண்முக சுப்பிரமணியத்தைப் பாராட்டியது.

விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து கிட்டத்தட்ட 3 மாதங்களான நிலையில், அதன் பாகங்களை தமிழ்நாடு இன்ஜினியர் சண்முக சுப்பிரமணியன் கண்டுபிடித்தது பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

இந்நிலையில் சண்முக சுப்பிரமணியன் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதையும் படிங்க: விக்ரம் லேண்டரைக் கண்டுபிடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழன்!

இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவின் தென்துருவத்தை ஆராய சந்திரயான்-2 விண்கலம் ஏவியது. நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக தொழில்நுநுட்ப கோளாறு காரணமாக விக்ரம் லேண்டருடன் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இஸ்ரோவும், அமெரிக்காவின் நாசாவும் ஈடுபட்டன. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்ரமணியம் நிலவில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் நிலவின் மேல்பரப்பில் இருப்பதாக நாசாவுக்கு தெரிவித்திருந்தார். அதை நாசாவும் உறுதிப்படுத்தி சண்முக சுப்பிரமணியத்தைப் பாராட்டியது.

விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து கிட்டத்தட்ட 3 மாதங்களான நிலையில், அதன் பாகங்களை தமிழ்நாடு இன்ஜினியர் சண்முக சுப்பிரமணியன் கண்டுபிடித்தது பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

இந்நிலையில் சண்முக சுப்பிரமணியன் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதையும் படிங்க: விக்ரம் லேண்டரைக் கண்டுபிடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழன்!

Intro:Body: விக்ரம் லேண்டர் பாகங்களை கண்டுபிடித்த சண்முக சுப்பிரமணியனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக நிலவின் தென்துருவத்தை ஆராய சந்திரயான்-2 விண்கலம் ஏவியது நிலவில் தரையிறங்க அதற்கு முன்பாக செயற்கைக்கோளான தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது அந்த செயற்கை கோளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் ஈடுபட்டு அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த பொறியாளர் சண்முகம் சுப்ரமணியம் நிலவில் விக்ரம் லேண்டர் இன் உடைந்த பாகங்கள் இருப்பதாக நாசாவுக்கு தெரிவித்திருந்தார். அதை நாசாவும் உறுதிப்படுத்தி சண்முகம் சுப்பிரமணியத்தை பாராட்டியுள்ளது.

விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆன நிலையில் அதன் சிதைந்த பாகங்களை தமிழக என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் கண்டுபிடித்திருப்பது அவருக்கு பாராட்டுகளை அள்ளிக்குவித்து வருகிறது.

இந்த நிலையில் சண்முக சுப்பிரமணியன் இன்று தமிழக முதலமைச்சரை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

உடன் தமிழக தொழில்துறை முதன்மைச் செயலர் முருகானந்தம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக சேர்மேன் ககர்லா உஷா இருந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.