ETV Bharat / state

10 மற்றும் 11 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ல் வெளியீடு!

author img

By

Published : May 15, 2023, 4:30 PM IST

10,11-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வரும் 19-ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

10 மற்றும் 11 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 19-ல் வெளியீடு!
10 மற்றும் 11 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 19-ல் வெளியீடு!

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 11ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 2022-23ஆம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு மார்ச் 14ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. பள்ளிகளில் படித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 பேர் எழுத விண்ணப்பித்தனர்.

இவர்களில் தமிழ்நாட்டு பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 60 ஆயிரத்து 908 மாணவர்கள், 4 லட்சத்து 12 ஆயிரத்து 779 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் 3224 மையங்களில் தேர்வினை எழுதினர்.

புதுச்சேரி பள்ளிகளில் படித்த 6 ஆயிரத்து 799 மாணவர்கள் மற்றும் 7,577 மாணவிகள் என 14 ஆயிரத்து 376 பேர், 40 தேர்வு மையங்களில் தேர்வினை எழுதினர். தனித் தேர்வர்களாக 2 ஆயிரத்து 356 மாணவர்களும், 2 ஆயிரத்து 979 மாணவிகளும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும் என 5 ஆயிரத்து 338 பேர் 135 மையங்களில் எழுதினர்.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், 2022-23ஆம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்றது. பள்ளிகளில் படிக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் உள்ள 12,352 பள்ளிகளில் படித்த 4 லட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்கள், 4 லட்சத்து 55 ஆயிரத்து 960 மாணவிகள் தமிழ்நாட்டில் 3976 மையங்களில் தேர்வினை எழுதினர்.

புதுச்சேரியில் உள்ள 287 பள்ளிகளில் படித்த 7 ஆயிரத்து 911 மாணவர்கள், 7ஆயிரத்து 655 மாணவிகள் என 15 ஆயிரத்து 566 பேர் 49 தேர்வு மையங்களில் எழுதினர். தனித்தேர்வர்களாக 26 ஆயிரத்து 352 மாணவர்களும், 14 ஆயிரத்து 441 மாணவிகளும், 5 மூன்றாம் பாலினத்தவர்களும் என 37 ஆயிரத்து 798 பேர் 182 மையங்களில் எழுதினர்.

இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில், அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2022-2023ம் ஆண்டில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தின் முதல் தளத்தில் வெளியிடப்பட உள்ளது.

மேலும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் 19-ஆம் தேதி காலை 10 மணிக்கும், 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிபெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்பித்த செல்போன் எண்ணிற்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்” எனவும் அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் கடல் பகுதிகளை கண்காணிக்க டிஜிபி உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 11ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 2022-23ஆம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு மார்ச் 14ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. பள்ளிகளில் படித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 பேர் எழுத விண்ணப்பித்தனர்.

இவர்களில் தமிழ்நாட்டு பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 60 ஆயிரத்து 908 மாணவர்கள், 4 லட்சத்து 12 ஆயிரத்து 779 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் 3224 மையங்களில் தேர்வினை எழுதினர்.

புதுச்சேரி பள்ளிகளில் படித்த 6 ஆயிரத்து 799 மாணவர்கள் மற்றும் 7,577 மாணவிகள் என 14 ஆயிரத்து 376 பேர், 40 தேர்வு மையங்களில் தேர்வினை எழுதினர். தனித் தேர்வர்களாக 2 ஆயிரத்து 356 மாணவர்களும், 2 ஆயிரத்து 979 மாணவிகளும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும் என 5 ஆயிரத்து 338 பேர் 135 மையங்களில் எழுதினர்.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், 2022-23ஆம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்றது. பள்ளிகளில் படிக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் உள்ள 12,352 பள்ளிகளில் படித்த 4 லட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்கள், 4 லட்சத்து 55 ஆயிரத்து 960 மாணவிகள் தமிழ்நாட்டில் 3976 மையங்களில் தேர்வினை எழுதினர்.

புதுச்சேரியில் உள்ள 287 பள்ளிகளில் படித்த 7 ஆயிரத்து 911 மாணவர்கள், 7ஆயிரத்து 655 மாணவிகள் என 15 ஆயிரத்து 566 பேர் 49 தேர்வு மையங்களில் எழுதினர். தனித்தேர்வர்களாக 26 ஆயிரத்து 352 மாணவர்களும், 14 ஆயிரத்து 441 மாணவிகளும், 5 மூன்றாம் பாலினத்தவர்களும் என 37 ஆயிரத்து 798 பேர் 182 மையங்களில் எழுதினர்.

இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில், அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2022-2023ம் ஆண்டில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தின் முதல் தளத்தில் வெளியிடப்பட உள்ளது.

மேலும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் 19-ஆம் தேதி காலை 10 மணிக்கும், 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிபெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்பித்த செல்போன் எண்ணிற்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்” எனவும் அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் கடல் பகுதிகளை கண்காணிக்க டிஜிபி உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.