ETV Bharat / state

'சுய தனிமைப்படுத்தல் சிறை வாசம் அல்ல'- தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி

author img

By

Published : Mar 27, 2020, 4:29 PM IST

சென்னை: சுய தனிமைப்படுத்தல் சிறை வாசம் அல்ல, கரோனாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான நடவடிக்கை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி ஏ.பி சாஹி
தலைமை நீதிபதி ஏ.பி சாஹி

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி எழுதியுள்ள கடிதத்தில், “அமைதியான ஆரோக்கியமான வாழ்க்கையை போராடி மீட்க வேண்டும் என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கூறியதையும், நாடு உனக்கு என்ன செய்தது என கேட்காமல், நாட்டுக்காக நீ என்ன செய்தாய் என கேட்க வேண்டும் என்கிற அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி கூறியதையும் மேற்கோள் காட்டிய தலைமை நீதிபதி, கரோனா அச்சுறத்தலில் இருந்து மீண்டு வருவதற்கு உறுதியேற்போம்.

கனவில் கூட காண முடியாத சவாலான நிலையை எதிர்கொண்டு இருக்கிறோம். இதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். மேலும், இன்றுபோல நாளையும் அச்சமூட்டும் வகையில் சூழல் மாற வாய்ப்புள்ளதால், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துகொள்ளும் பணியில் இறங்க வேண்டும். சமூக இடைவெளியை போதிப்பதோடு, அனைவரும் உண்மையாக கடைபிடிக்க வேண்டும்.

மத்திய அரசின் சுய தனிமைப்படுத்தல் உத்தரவு, சிறை வாசம் என்றோ, கூண்டில் அடைக்கப்படுவதாகவோ கருதாமல், கரோனாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான நடவடிக்கை என எண்ண வேண்டும். விடியும்போது நமக்கு வெற்றி தருவதாக அமையட்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி எழுதியுள்ள கடிதத்தில், “அமைதியான ஆரோக்கியமான வாழ்க்கையை போராடி மீட்க வேண்டும் என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கூறியதையும், நாடு உனக்கு என்ன செய்தது என கேட்காமல், நாட்டுக்காக நீ என்ன செய்தாய் என கேட்க வேண்டும் என்கிற அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி கூறியதையும் மேற்கோள் காட்டிய தலைமை நீதிபதி, கரோனா அச்சுறத்தலில் இருந்து மீண்டு வருவதற்கு உறுதியேற்போம்.

கனவில் கூட காண முடியாத சவாலான நிலையை எதிர்கொண்டு இருக்கிறோம். இதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். மேலும், இன்றுபோல நாளையும் அச்சமூட்டும் வகையில் சூழல் மாற வாய்ப்புள்ளதால், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துகொள்ளும் பணியில் இறங்க வேண்டும். சமூக இடைவெளியை போதிப்பதோடு, அனைவரும் உண்மையாக கடைபிடிக்க வேண்டும்.

மத்திய அரசின் சுய தனிமைப்படுத்தல் உத்தரவு, சிறை வாசம் என்றோ, கூண்டில் அடைக்கப்படுவதாகவோ கருதாமல், கரோனாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான நடவடிக்கை என எண்ண வேண்டும். விடியும்போது நமக்கு வெற்றி தருவதாக அமையட்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: கரோனோ அறிகுறி: பெண் தப்பி ஓட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.