ETV Bharat / state

'கிழக்கு கடற்கரைச் சாலைக்கு கலைஞர் கருணாநிதி சாலை எனப் பெயர் சூட்டப்படும்' - முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : May 1, 2022, 10:59 PM IST

சென்னை முதல் மாமல்லபுரம் வரையிலான கிழக்கு கடற்கரைச்சாலைக்கு ' முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி சாலை’ எனப் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் பேச்சு
முதலமைச்சர் பேச்சு

சென்னை: நெடுஞ்சாலைத் துறையின் பவள விழாவை முன்னிட்டு சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் பவளவிழா நினைவுத்தூணை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பல்வேறு மேம்பாலப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 46 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள மத்திய கைலாஷ் மேம்பாலம் , 199 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்க 37 கோடி ரூபாய் மதிப்பில் கண்ணாடி இழை நடைமேம்பாலம் ஆகியவற்றிற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

மேலும் சென்னையில் ஆழ்வார்பேட்டை , தேனாம்பேட்டை பகுதியை அண்ணா சாலையில் இணைக்கும் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு , பாண்டிபஜார் சாலை , செனடாப் சாலை சந்திப்பு , நந்தனம் சந்திப்பு , சிஐடி நகர் 3வது மற்றும் முதல் பிரதான சாலை சந்திப்பு , சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை சந்திப்பில் 4 வழித்தடங்களில் 485 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ள மேம்பாலங்களின் கிராபிக்ஸ் காணொலிகள் ஒளிபரப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசியதாவது, “நான் மனதில் நினைப்பதை சொல்லாமலேயே, எனது கண் ஜாடையிலேயே தெரிந்துகொண்டு செயலாற்றுவதில் முன்னிலையில் எ.வ. வேலு இருக்கிறார் என கலைஞரே பாராட்டியவர். எ.வ. என்றால் எதிலும் வல்லவர் என்று அர்த்தம். அடிக்கல் நாட்டப்பட்ட மேம்பாலப் பணிகள் 2 ஆண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். சாலை சரியில்லை என்றால் வாகனத்தில் செல்வோர் முதலில் திட்டுவது அரசாங்கத்தைத்தான். அரசுக்கு நல்ல பெயரும், அவப்பெயரும் நெடுஞ்சாலைத்துறை மூலமே கிடைக்கும்.

நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா
நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா

தமிழ்நாடு இந்தளவிற்கு வளர்ச்சி பெற நெடுஞ்சாலைத்துறையே காரணம். உலகத்தரம் வாய்ந்ததாக கிண்டி நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையம் மாற வேண்டும். முதலமைச்சரானவுடன் 5 சாலைகளின் நெரிசலைக் குறைக்கும் விதமாக அண்ணா மேம்பாலத்தைக் கட்டினார் கருணாநிதி. கிராமங்களை நகரங்களுடன் இணைக்க கிராமப்புற சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகளை கருணாநிதி உருவாக்கினார். தமிழ்நாட்டில் 1000க்கும் மேல் மக்கள் தொகை கொண்ட அனைத்து கிராமங்களிலும் இணைப்புச் சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சாலை போடுவதற்கு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருப்பதால், திட்டத்தை நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதை சரிசெய்ய 184 பணி இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சாலைப்பாதுகாப்புத்திட்டம் சிறப்பாக இருப்பதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சென்னையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத்திட்டம் மூலம் மாவட்ட தலைமை மற்றும் வட்டத் தலைமையிடங்களை இணைக்கும் விதமாக 2ஆயிரத்து 200 கி.மீ., தூரத்திற்கு மாநில நெடுஞ்சாலையில் 10 ஆண்டில் , போக்குவரத்துச் செறிவைப் பொருத்து 4 வழிச் சாலைகள் அமைக்கப்படவுள்ளன. ஆயிரத்து 281 தரைப்பாலங்கள், 2ஆயிரத்து 400 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டு உயர்மட்ட பாலங்களாக மாற்றப்படவுள்ளன.

நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா
நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா

முதற்கட்டமாக 640 தரைப்பாலங்கள், 610 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்படவுள்ளன. இரண்டாம் கட்டமாக 430 தரைப்பாலங்கள் ஆயிரத்து 100 கோடிக்கு மேல் செலவில் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்படவுள்ளன. 2026க்குள் தரைப்பாலங்களே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உருவாகும். சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலை 'முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி சாலை' எனப் பெயர் மாற்றப்பட உள்ளது” என அறிவித்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, “திமுகவின் ஆட்சியில் 1971ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைத்துறையின் வெள்ளி விழாவும் , 1991ஆம் ஆண்டில் பொன் விழா கருணாநிதி தலைமையிலும் நடைபெற்றது. 2022ஆம் ஆண்டில் ஸ்டாலின் தலைமையில் பவள விழா நடைபெறுகிறது. துறையின் நூற்றாண்டு விழாவும் ஸ்டாலின் தலைமையிலேயே நடைபெற வேண்டும். நாட்டின் பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கும் துறையாக நெடுஞ்சாலைத்துறை இருக்கிறது.

கடந்த ஓராண்டு செயல்பாட்டின் மூலம் , இந்தியாவிலேயே முதலமைச்சர்களுக்கெல்லாம் முதலமைச்சராக இருக்கிறார். எங்கள் துறை மூலம் முதலமைச்சரின் ஆட்சிக் கட்டிலுக்கு முடிந்தளவு சிறப்பு சேர்ப்போம். குறுக்கு வழி பிடிப்பதில்லை சாலைகளுக்கு , நேர் வழியிலே செல்லும் நெடுஞ்சாலை. தேசமெங்கும் உள்ள சாலைகளுக்கு பிடித்த நிறம் திராவிட கறுப்பு நிறம்தான். மனித ஒப்பனை பிறரை கவர்வதற்கு , சாலைகளின் ஒப்பனை பிறரைப் பாதுகாப்பதற்கு , 10 மாதம் நம்மை தாய் சுமந்தாலும் , நியாயப்படி பார்த்தால் நம்மை நெடுங்காலம் சுமப்பது நெடுஞ்சாலைதான்” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “மக்கள் நல்வாழ்வுத்துறைக்காக துணை சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி வரை கட்டித்தருவது நெடுஞ்சாலைத்துறை. நீலகிரி மாவட்டத்தில் யானைகள் கடந்து செல்லும் விதமாக தனி சாலை ஒரு இடத்தில் அமைக்கப்படவுள்ளது. நெடுஞ்சாலைத்துறையின் நூற்றாண்டு விழாவிலும் முதலமைச்சர் பங்கேற்பார்” என்றார்.

முதலமைச்சரின் பேச்சு

இதனைத் தொடர்ந்து பேசிய தலைமைச் செயலாளர் இறையன்பு, “கடலை கட்டாந்தரையாக்கி ஜாவா , சுமத்ரா , கடாரம் என பல இடங்களுக்கும் சென்றோர் சோழர்கள். நொபுரு கரோஷிமா அகில உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன தலைவராக இருந்து ராஜேந்திர சோழனின் கடற்பயணம் குறித்து தொகுத்துள்ளார். சாலைகளால் மனித சமூகம் செம்மையடைகிறது.

தரமான சாலைகள் வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றப் பல பணிகளை நெடுஞ்சாலைத்துறை முன்னெடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் அனைத்து சாலைகளிலும், மேல் பரப்பை சுரண்டி விட்டுத்தான் புதிய சாலையை அமைக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்’’ என்றார்.

இதையும் படிங்க: 'சஞ்சீவி மலையை சுமந்த அனுமனைப்போல, மோடி இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமக்கத் தயார்' - அண்ணாமலை பேச்சு

சென்னை: நெடுஞ்சாலைத் துறையின் பவள விழாவை முன்னிட்டு சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் பவளவிழா நினைவுத்தூணை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பல்வேறு மேம்பாலப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 46 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள மத்திய கைலாஷ் மேம்பாலம் , 199 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்க 37 கோடி ரூபாய் மதிப்பில் கண்ணாடி இழை நடைமேம்பாலம் ஆகியவற்றிற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

மேலும் சென்னையில் ஆழ்வார்பேட்டை , தேனாம்பேட்டை பகுதியை அண்ணா சாலையில் இணைக்கும் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு , பாண்டிபஜார் சாலை , செனடாப் சாலை சந்திப்பு , நந்தனம் சந்திப்பு , சிஐடி நகர் 3வது மற்றும் முதல் பிரதான சாலை சந்திப்பு , சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை சந்திப்பில் 4 வழித்தடங்களில் 485 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ள மேம்பாலங்களின் கிராபிக்ஸ் காணொலிகள் ஒளிபரப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசியதாவது, “நான் மனதில் நினைப்பதை சொல்லாமலேயே, எனது கண் ஜாடையிலேயே தெரிந்துகொண்டு செயலாற்றுவதில் முன்னிலையில் எ.வ. வேலு இருக்கிறார் என கலைஞரே பாராட்டியவர். எ.வ. என்றால் எதிலும் வல்லவர் என்று அர்த்தம். அடிக்கல் நாட்டப்பட்ட மேம்பாலப் பணிகள் 2 ஆண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். சாலை சரியில்லை என்றால் வாகனத்தில் செல்வோர் முதலில் திட்டுவது அரசாங்கத்தைத்தான். அரசுக்கு நல்ல பெயரும், அவப்பெயரும் நெடுஞ்சாலைத்துறை மூலமே கிடைக்கும்.

நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா
நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா

தமிழ்நாடு இந்தளவிற்கு வளர்ச்சி பெற நெடுஞ்சாலைத்துறையே காரணம். உலகத்தரம் வாய்ந்ததாக கிண்டி நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையம் மாற வேண்டும். முதலமைச்சரானவுடன் 5 சாலைகளின் நெரிசலைக் குறைக்கும் விதமாக அண்ணா மேம்பாலத்தைக் கட்டினார் கருணாநிதி. கிராமங்களை நகரங்களுடன் இணைக்க கிராமப்புற சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகளை கருணாநிதி உருவாக்கினார். தமிழ்நாட்டில் 1000க்கும் மேல் மக்கள் தொகை கொண்ட அனைத்து கிராமங்களிலும் இணைப்புச் சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சாலை போடுவதற்கு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருப்பதால், திட்டத்தை நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதை சரிசெய்ய 184 பணி இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சாலைப்பாதுகாப்புத்திட்டம் சிறப்பாக இருப்பதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சென்னையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத்திட்டம் மூலம் மாவட்ட தலைமை மற்றும் வட்டத் தலைமையிடங்களை இணைக்கும் விதமாக 2ஆயிரத்து 200 கி.மீ., தூரத்திற்கு மாநில நெடுஞ்சாலையில் 10 ஆண்டில் , போக்குவரத்துச் செறிவைப் பொருத்து 4 வழிச் சாலைகள் அமைக்கப்படவுள்ளன. ஆயிரத்து 281 தரைப்பாலங்கள், 2ஆயிரத்து 400 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டு உயர்மட்ட பாலங்களாக மாற்றப்படவுள்ளன.

நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா
நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா

முதற்கட்டமாக 640 தரைப்பாலங்கள், 610 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்படவுள்ளன. இரண்டாம் கட்டமாக 430 தரைப்பாலங்கள் ஆயிரத்து 100 கோடிக்கு மேல் செலவில் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்படவுள்ளன. 2026க்குள் தரைப்பாலங்களே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உருவாகும். சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலை 'முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி சாலை' எனப் பெயர் மாற்றப்பட உள்ளது” என அறிவித்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, “திமுகவின் ஆட்சியில் 1971ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைத்துறையின் வெள்ளி விழாவும் , 1991ஆம் ஆண்டில் பொன் விழா கருணாநிதி தலைமையிலும் நடைபெற்றது. 2022ஆம் ஆண்டில் ஸ்டாலின் தலைமையில் பவள விழா நடைபெறுகிறது. துறையின் நூற்றாண்டு விழாவும் ஸ்டாலின் தலைமையிலேயே நடைபெற வேண்டும். நாட்டின் பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கும் துறையாக நெடுஞ்சாலைத்துறை இருக்கிறது.

கடந்த ஓராண்டு செயல்பாட்டின் மூலம் , இந்தியாவிலேயே முதலமைச்சர்களுக்கெல்லாம் முதலமைச்சராக இருக்கிறார். எங்கள் துறை மூலம் முதலமைச்சரின் ஆட்சிக் கட்டிலுக்கு முடிந்தளவு சிறப்பு சேர்ப்போம். குறுக்கு வழி பிடிப்பதில்லை சாலைகளுக்கு , நேர் வழியிலே செல்லும் நெடுஞ்சாலை. தேசமெங்கும் உள்ள சாலைகளுக்கு பிடித்த நிறம் திராவிட கறுப்பு நிறம்தான். மனித ஒப்பனை பிறரை கவர்வதற்கு , சாலைகளின் ஒப்பனை பிறரைப் பாதுகாப்பதற்கு , 10 மாதம் நம்மை தாய் சுமந்தாலும் , நியாயப்படி பார்த்தால் நம்மை நெடுங்காலம் சுமப்பது நெடுஞ்சாலைதான்” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “மக்கள் நல்வாழ்வுத்துறைக்காக துணை சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி வரை கட்டித்தருவது நெடுஞ்சாலைத்துறை. நீலகிரி மாவட்டத்தில் யானைகள் கடந்து செல்லும் விதமாக தனி சாலை ஒரு இடத்தில் அமைக்கப்படவுள்ளது. நெடுஞ்சாலைத்துறையின் நூற்றாண்டு விழாவிலும் முதலமைச்சர் பங்கேற்பார்” என்றார்.

முதலமைச்சரின் பேச்சு

இதனைத் தொடர்ந்து பேசிய தலைமைச் செயலாளர் இறையன்பு, “கடலை கட்டாந்தரையாக்கி ஜாவா , சுமத்ரா , கடாரம் என பல இடங்களுக்கும் சென்றோர் சோழர்கள். நொபுரு கரோஷிமா அகில உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன தலைவராக இருந்து ராஜேந்திர சோழனின் கடற்பயணம் குறித்து தொகுத்துள்ளார். சாலைகளால் மனித சமூகம் செம்மையடைகிறது.

தரமான சாலைகள் வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றப் பல பணிகளை நெடுஞ்சாலைத்துறை முன்னெடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் அனைத்து சாலைகளிலும், மேல் பரப்பை சுரண்டி விட்டுத்தான் புதிய சாலையை அமைக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்’’ என்றார்.

இதையும் படிங்க: 'சஞ்சீவி மலையை சுமந்த அனுமனைப்போல, மோடி இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமக்கத் தயார்' - அண்ணாமலை பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.