சென்னை: மிக்ஜாம் புயல் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், தமிழக அரசு பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
-
வரலாறு காணாத மழையைக் கொட்டித் தீர்க்கும் இந்த #CycloneMichuang பேரிடரிலிருந்து மீள, அரசுடன் அனைத்து அரசியல்கட்சிகளும், தன்னார்வலர்களும் கைகோத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) December 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த, 13 அமைச்சர்களை நியமித்துள்ளேன். கூடுதலான பணியாளர்கள் களப்பணியில்… pic.twitter.com/vbv9fXUQ5w
">வரலாறு காணாத மழையைக் கொட்டித் தீர்க்கும் இந்த #CycloneMichuang பேரிடரிலிருந்து மீள, அரசுடன் அனைத்து அரசியல்கட்சிகளும், தன்னார்வலர்களும் கைகோத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) December 4, 2023
நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த, 13 அமைச்சர்களை நியமித்துள்ளேன். கூடுதலான பணியாளர்கள் களப்பணியில்… pic.twitter.com/vbv9fXUQ5wவரலாறு காணாத மழையைக் கொட்டித் தீர்க்கும் இந்த #CycloneMichuang பேரிடரிலிருந்து மீள, அரசுடன் அனைத்து அரசியல்கட்சிகளும், தன்னார்வலர்களும் கைகோத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) December 4, 2023
நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த, 13 அமைச்சர்களை நியமித்துள்ளேன். கூடுதலான பணியாளர்கள் களப்பணியில்… pic.twitter.com/vbv9fXUQ5w
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று (டிச.04) மற்றும் நாளை (டிச.05) ஆகிய இரண்டு நாட்களுக்கு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் மேற்பார்வையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சீரமைப்புப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொறு மண்டலத்திற்கும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு இந்திய ஆட்சி பணி அலுவலர் நியமிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் களத்தில் பணியாற்றி வருகின்றனர். சென்னை பெருநகர மாநகராட்சியைப் பொறுத்தவரையில், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களப்பணியாற்றி வருகின்றனர்.
மேலும், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையிலிருந்து நிலைமையைக் கண்காணித்து உரிய மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறனர். அதேபோல், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பெருமழையின் காரணமாக மின் கசிவுகள், மின் கம்பிகள் அறுந்து விழுதல் மற்றும் மின்சாரம் தொடர்பான எந்த விபத்துக்களையும் தவிர்த்திடும் பொருட்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களை முழுமையாக ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்திடுமாறு, களத்திலேயே இருந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கென சென்னையில் மட்டும் மின் வாரியத்தைச் சேர்ந்த 600 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 1,317 மின் வாரியப் பணியாளர்களும், செங்கல்பட்டிற்கு 2,194 பணியாளர்களும், காஞ்சிபுரத்திற்கு 650 பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மொத்தம் 3,831 பணியாளர்களோடு மிக்ஜாம் புயல் பாதிப்பினை எதிர்கொள்ள மேற்படி 8 மாவட்டங்களில் மொத்தம் 8592 மின் வாரியப் பணியாளர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்டு வருவதற்காக 350 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு அவை தேவையான பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வரப்படுகிறார்கள். மழைக்காலங்களில் ஏற்படக் கூடிய நோய்த் தொற்று அபாயத்தை தவிர்க்கவும், தேவையான இடங்களில் மக்களுக்கு சிகிச்சைகள் வழங்கவும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 4320 மருத்துவர்கள் மருத்துவப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புயல் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணிகளை நாளை முதல் விரைவு படுத்த, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து 1000 தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சாலைகளில் மரங்கள் விழுந்து, அதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தவிர்த்திட 1,238 மரம் அறுக்கும் இயந்திரங்கள் இம்மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் சென்னையில் மட்டும் 337 இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது மிக கவனமாக கண்காணிக்கப்பட்டுகிறது.