ETV Bharat / state

தமிழ்நாட்டில் முதல் முறையாக மருத்துவ சுற்றுலா மாநாடு: தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்!

author img

By

Published : Apr 29, 2023, 5:26 PM IST

தமிழ்நாட்டில் முதல் முறையாக தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Medical Tourism Conference
மருத்துவ சுற்றுலா மாநாடு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகளின் சார்பில், முதல் முறையாக மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாட்டினை தொடங்கி வைத்தார்.

அதில், "TamilNadu – Where the world comes to heal" என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் தேசிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் அங்கீகார வாரியத்தின் (National Accreditation Board for Hospitals & Healthcare Providers - NABH) அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார். மேலும், இந்த மாநாட்டில் பல்வேறு மருத்துவமனைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து, 2023 - 24 ஆம் ஆண்டிற்கான சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கையில், "தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா பிரிவில் மருத்துவ சுற்றுலாவும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள பல்நோக்கு மற்றும் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகள், மருத்துவ சுற்றுலாவிற்கான தலமாக வளர்வதற்கு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளன.

மருத்துவ சுற்றுலாவிற்கான சிறந்த தலமாக தமிழ்நாட்டினை அடையாளப்படுத்த மருத்துவத்துறையில் தொழில் முனைவோர்களுடன் இணைந்து சர்வதேச மருத்துவ சுற்றுலா மாநாடு சென்னையில் நடத்தப்படும். இம்மாநாடு உடல் நலம் பேணும் வல்லுநர்களை ஒருங்கிணைக்கும் வகையில் கண்காட்சி அரங்கங்கள், கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் நடத்தவும் ஒரு சிறந்த தளமாக அமையும்" என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் திறமையான சுகாதார நிபுணர்கள், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நியாயமான விலையில் மருத்துவச் சேவைகளை அளிப்பதன் மூலம், சுகாதாரத் தேவைகளுக்கான நம்பகமான இடமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் சுகாதார பாதுகாப்பு உட்கட்டமைப்பானது, சிறந்த மருத்துவ நடைமுறைகளைக் கையாளுவதற்கு உதவிகரமாக விளங்குவதால் மருத்துவ சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.

தமிழ்நாடு சுற்றுலாத்துறையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும் இணைந்து தமிழ்நாட்டில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்திடவும், தமிழ்நாட்டை முன்னணி மருத்துவ சுற்றுலாத் தலமாக மாற்றவும் இம்மாநாடு முக்கிய பங்காற்றும்.

இம்மாநாட்டில் பங்களாதேஷ், நேபாளம், சவுதி அரேபியா, ஓமான், மியாமர், ஸ்ரீலங்கா, மொரிசியஸ், மாலத்தீவுகள், வியட்நாம், மேலும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் என 21 வெளிநாடுகளைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

இம்மாநாட்டில் தமிழ்நாட்டின் 120 தனியார் மருத்துமனைகளிலிருந்து பல்வேறு பிரிவுகளில் பிரபலமான மருத்துவர்கள், அயல்நாட்டு தூதரக அதிகாரிகள், பயண ஏற்பாட்டாளர்கள், ஓட்டல் நிர்வாகத்தினர், காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சித்தா, யோகா, ஆயுஷ் துறைகளின் மருத்துவர்கள், ஆரோக்கிய சுற்றுலா மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் என 350 நபர் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் மற்றும் பிற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், பல்வேறு உயர் சிறப்பு மருத்துவமனைகளின் நிர்வாகிகள் மற்றும் பல மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: விஸ்கோஸ், செயற்கை இழை பஞ்சு, நூல்களுக்கு அரசின் தரக் கட்டுப்பாட்டில் விலக்கு: மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகளின் சார்பில், முதல் முறையாக மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாட்டினை தொடங்கி வைத்தார்.

அதில், "TamilNadu – Where the world comes to heal" என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் தேசிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் அங்கீகார வாரியத்தின் (National Accreditation Board for Hospitals & Healthcare Providers - NABH) அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார். மேலும், இந்த மாநாட்டில் பல்வேறு மருத்துவமனைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து, 2023 - 24 ஆம் ஆண்டிற்கான சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கையில், "தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா பிரிவில் மருத்துவ சுற்றுலாவும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள பல்நோக்கு மற்றும் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகள், மருத்துவ சுற்றுலாவிற்கான தலமாக வளர்வதற்கு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளன.

மருத்துவ சுற்றுலாவிற்கான சிறந்த தலமாக தமிழ்நாட்டினை அடையாளப்படுத்த மருத்துவத்துறையில் தொழில் முனைவோர்களுடன் இணைந்து சர்வதேச மருத்துவ சுற்றுலா மாநாடு சென்னையில் நடத்தப்படும். இம்மாநாடு உடல் நலம் பேணும் வல்லுநர்களை ஒருங்கிணைக்கும் வகையில் கண்காட்சி அரங்கங்கள், கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் நடத்தவும் ஒரு சிறந்த தளமாக அமையும்" என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் திறமையான சுகாதார நிபுணர்கள், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நியாயமான விலையில் மருத்துவச் சேவைகளை அளிப்பதன் மூலம், சுகாதாரத் தேவைகளுக்கான நம்பகமான இடமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் சுகாதார பாதுகாப்பு உட்கட்டமைப்பானது, சிறந்த மருத்துவ நடைமுறைகளைக் கையாளுவதற்கு உதவிகரமாக விளங்குவதால் மருத்துவ சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.

தமிழ்நாடு சுற்றுலாத்துறையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும் இணைந்து தமிழ்நாட்டில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்திடவும், தமிழ்நாட்டை முன்னணி மருத்துவ சுற்றுலாத் தலமாக மாற்றவும் இம்மாநாடு முக்கிய பங்காற்றும்.

இம்மாநாட்டில் பங்களாதேஷ், நேபாளம், சவுதி அரேபியா, ஓமான், மியாமர், ஸ்ரீலங்கா, மொரிசியஸ், மாலத்தீவுகள், வியட்நாம், மேலும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் என 21 வெளிநாடுகளைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

இம்மாநாட்டில் தமிழ்நாட்டின் 120 தனியார் மருத்துமனைகளிலிருந்து பல்வேறு பிரிவுகளில் பிரபலமான மருத்துவர்கள், அயல்நாட்டு தூதரக அதிகாரிகள், பயண ஏற்பாட்டாளர்கள், ஓட்டல் நிர்வாகத்தினர், காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சித்தா, யோகா, ஆயுஷ் துறைகளின் மருத்துவர்கள், ஆரோக்கிய சுற்றுலா மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் என 350 நபர் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் மற்றும் பிற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், பல்வேறு உயர் சிறப்பு மருத்துவமனைகளின் நிர்வாகிகள் மற்றும் பல மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: விஸ்கோஸ், செயற்கை இழை பஞ்சு, நூல்களுக்கு அரசின் தரக் கட்டுப்பாட்டில் விலக்கு: மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.