ETV Bharat / state

போதை மாத்திரை கேட்டு இளைஞர் கடத்தல்

author img

By

Published : Dec 5, 2019, 3:11 PM IST

சென்னை:கிண்டியில் போதை மாத்திரை கேட்டு இளைஞரை கடத்திய ஐந்து பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

kidnap
kidnap

சென்னை பரங்கிமலையை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜாராம்(61). இவர் தனது மகன் காமேஷ் (23) உடன், இரு சக்கர வாகனத்தில் அம்பாள் நகர் வழியாக நேற்று இரவு கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காவல் துறையினர் வேடத்தில் வந்த ஐந்து பேர், போதை மாத்திரை கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளது என்று காமேஷை மட்டும் அழைத்து சென்றுள்ளனர். ஏற்கெனவே போதை மாத்திரை கடத்தல் வழக்கில் கைதாகி, ஒரு மாதம் சிறையில் இருந்ததால், காமேஷை அவர்களுடன் ராஜாராம் அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், வீடு திரும்பிய ராஜாராமின் செல்ஃபோன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், 'உங்களுடைய மகன் காமேஷை கடத்தி விட்டோம். 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் விட்டு விடுகிறோம்' என்று மிரட்டி விட்டு செல்ஃபோனை துண்டித்தனர்.

இதையடுத்து, தன்னுடைய மகனை அழைத்து சென்றது காவல் துறையினர் இல்லை என்பதை அறிந்த ராஜாராம், இது குறித்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

விசாரணையில், காமேஷ் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், அவரிடம் இருந்து போதை மாத்திரையை பெறுவதற்காகவே அவர் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையில், கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிய காமேஷ் வீடு திரும்பினார். அவரிடம், கடத்திய கும்பல் யார்? ஏதற்காக கடத்தப்பட்டார் உள்ளிட்ட கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா வழக்கில் கைது - பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றி கொடுமை செய்த போலீசார்!

சென்னை பரங்கிமலையை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜாராம்(61). இவர் தனது மகன் காமேஷ் (23) உடன், இரு சக்கர வாகனத்தில் அம்பாள் நகர் வழியாக நேற்று இரவு கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காவல் துறையினர் வேடத்தில் வந்த ஐந்து பேர், போதை மாத்திரை கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளது என்று காமேஷை மட்டும் அழைத்து சென்றுள்ளனர். ஏற்கெனவே போதை மாத்திரை கடத்தல் வழக்கில் கைதாகி, ஒரு மாதம் சிறையில் இருந்ததால், காமேஷை அவர்களுடன் ராஜாராம் அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், வீடு திரும்பிய ராஜாராமின் செல்ஃபோன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், 'உங்களுடைய மகன் காமேஷை கடத்தி விட்டோம். 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் விட்டு விடுகிறோம்' என்று மிரட்டி விட்டு செல்ஃபோனை துண்டித்தனர்.

இதையடுத்து, தன்னுடைய மகனை அழைத்து சென்றது காவல் துறையினர் இல்லை என்பதை அறிந்த ராஜாராம், இது குறித்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

விசாரணையில், காமேஷ் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், அவரிடம் இருந்து போதை மாத்திரையை பெறுவதற்காகவே அவர் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையில், கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிய காமேஷ் வீடு திரும்பினார். அவரிடம், கடத்திய கும்பல் யார்? ஏதற்காக கடத்தப்பட்டார் உள்ளிட்ட கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா வழக்கில் கைது - பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றி கொடுமை செய்த போலீசார்!

Intro:Body:கிண்டியில் போதை மாத்திரை கேட்டு வாலிபரை கடத்திய 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலிசார் வலைவீச்சு..

சென்னை பரங்கி மலை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம்(61).இவருக்கு காமேஷ் (23) என்ற மகன் உள்ளார்.இந்த நிலையில் நேற்று இரண்டு பேரும் இரு சக்கர வாகனத்தில் அம்பாள் நகர் வழியாக கடைக்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போது அங்கு காரில் வந்த 5பேர் கொண்ட மர்ம கும்பல் தாங்கள் காவலர்கள் என கூறி காமேஷிடம் போதை மாத்திரை எங்கே என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

பின்னர் காமேஷை அவர்கள் வந்த காரில் கடத்தி சென்றனர்.மேலும் ஏற்கெனவே காமேஷிற்கு போதை மாத்திரை விற்கும் பழக்கம் இருப்பதாகவும்,ஒரு முறை சிறைக்கு சென்று வந்ததால் அவரது தந்தை ராஜாராம் சென்றுவிட்டார்.


பின்னர் சிறிது நேரம் கழித்து ராஜாராம் செல்போனிற்கு தொடர்பு கொண்ட மர்ம கும்பல் மகன் காமேஷை விட வேண்டுமென்றால் 10ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டி துண்டித்து உள்ளார்.இது தொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் ராஜாராம் புகார் அளித்தார். பின்னர் காமேஷ் அன்று இரவே வீட்டிற்கு வந்துள்ளார். இது தொடர்பாக போலிசார் காமேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.