ETV Bharat / state

முதியவர் கொலை - உணவக ஊழியர் கைது!

சென்னை: முதியவரை கொலை செய்த வழக்கில் உணவக ஊழியரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

killer
author img

By

Published : Jul 24, 2019, 10:21 PM IST

சென்னை போரூர் அடுத்த மதனந்தபுரம் குறிஞ்சி தெருவில் வசித்து வந்தவர் பாஸ்கரன்(78). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டு, அழுகிய நிலையில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பவம் நடப்பதற்கு முன்பும், பின்பும் பாஸ்கரனிடம் யாரெல்லாம் செல்போனில் பேசினார்கள் என ஆய்வு செய்தனர். அப்போது, அதே பகுதியில் உள்ள உணவகத்தில் ஊழியராக பணியாற்றும் மன்சூர் அகமதுவிடம், பாஸ்கரன் பலமுறை பேசியிருப்பது தெரியவந்தது.

போரூர் காவல்துறையினர்

மேலும் மனைவி, மகன்களை பிரிந்து பாஸ்கரன் வீட்டில் தனியாக வசித்து வந்ததால், மன்சூர் அகமது வேலை செய்யும் உணவகத்தில் சாப்பிடுவார். இதனால் மன்சூர் அகமதுவுக்கு, பாஸ்கரனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மன்சூர் அகமது புதிதாக வீடு கட்டியதால் கடன் பிரச்னையில் சிக்கி தவித்து வருவதாக பாஸ்கரனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு பாஸ்கரன் எனக்கு பணம் வந்தவுடன் உனக்கு தருகிறேன், நீ கடனை அடைத்துக் கொள் என்று கூறி வந்துள்ளார்.

சம்பவத்தன்று பணம் வந்து வாங்கி செல் என்று பாஸ்கரன் கூறியதையடுத்து, மன்சூர் அகமது சென்றார். அப்போது மன்சூர் அகமதுவிடம், பாஸ்கரன் ஓரினச்சேர்க்கைக்கு ஈடுபடுமாறு வற்புறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மன்சூர் அகமது, பாத்ரூம் சென்று வருவதாகக் கூறி வெளியே இருந்த செங்கல்லை எடுத்து பாஸ்கரன் தலையில் அடித்துள்ளார். பின்பு கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு நகைக்காக கொலை நடந்தது போல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர் அணிந்திருந்த 3 பவுன் நகை, இருசக்கர வாகனத்தை எடுத்துகொண்டு வீட்டை வெளியில் பூட்டிவிட்டு சென்றிருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை போரூர் அடுத்த மதனந்தபுரம் குறிஞ்சி தெருவில் வசித்து வந்தவர் பாஸ்கரன்(78). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டு, அழுகிய நிலையில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பவம் நடப்பதற்கு முன்பும், பின்பும் பாஸ்கரனிடம் யாரெல்லாம் செல்போனில் பேசினார்கள் என ஆய்வு செய்தனர். அப்போது, அதே பகுதியில் உள்ள உணவகத்தில் ஊழியராக பணியாற்றும் மன்சூர் அகமதுவிடம், பாஸ்கரன் பலமுறை பேசியிருப்பது தெரியவந்தது.

போரூர் காவல்துறையினர்

மேலும் மனைவி, மகன்களை பிரிந்து பாஸ்கரன் வீட்டில் தனியாக வசித்து வந்ததால், மன்சூர் அகமது வேலை செய்யும் உணவகத்தில் சாப்பிடுவார். இதனால் மன்சூர் அகமதுவுக்கு, பாஸ்கரனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மன்சூர் அகமது புதிதாக வீடு கட்டியதால் கடன் பிரச்னையில் சிக்கி தவித்து வருவதாக பாஸ்கரனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு பாஸ்கரன் எனக்கு பணம் வந்தவுடன் உனக்கு தருகிறேன், நீ கடனை அடைத்துக் கொள் என்று கூறி வந்துள்ளார்.

சம்பவத்தன்று பணம் வந்து வாங்கி செல் என்று பாஸ்கரன் கூறியதையடுத்து, மன்சூர் அகமது சென்றார். அப்போது மன்சூர் அகமதுவிடம், பாஸ்கரன் ஓரினச்சேர்க்கைக்கு ஈடுபடுமாறு வற்புறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மன்சூர் அகமது, பாத்ரூம் சென்று வருவதாகக் கூறி வெளியே இருந்த செங்கல்லை எடுத்து பாஸ்கரன் தலையில் அடித்துள்ளார். பின்பு கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு நகைக்காக கொலை நடந்தது போல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர் அணிந்திருந்த 3 பவுன் நகை, இருசக்கர வாகனத்தை எடுத்துகொண்டு வீட்டை வெளியில் பூட்டிவிட்டு சென்றிருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Intro:போரூர் அருகே முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஓட்டல் ஊழியர் கைது. பணம் தருவதாக ஏமாற்றி ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததால் கொலை செய்தது அம்பலம்.
Body:போரூர் அடுத்த மதனந்தபுரம் வி.என்.டி. அவென்யூ, குறிஞ்சி தெருவில் வசித்து வந்தவர் பாஸ்கரன்(78),  தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர் இவர் தனது மனைவி, மகன்களை பிரிந்து இந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. மேலும் 3 பவுன் நகைகள்,  மொபெட்  ஆகியவை திருடப்பட்டிருந்தது இதுகுறித்து மாங்காடு போலீசார் கொலையாளிகள் யார் என தேடி வந்தபோது அதே பகுதியில் ஓட்டலில் வேலை செய்து வந்த திருமுல்லைவாயலை சேர்ந்த மன்சூர் அகமது(35), என்பவர் பாஸ்கரனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

பாஸ்கரன் கொலை செய்யப்பட்ட பிறகு கொலையாளிகள் யார்? எதற்காக கொலை நடந்தது என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்ததாகவும்,  இந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமரா ஏதும் இல்லாததால் சம்பவம் நடப்பதற்கு முன்பும், சம்பவம் நடந்த பிறகும் பாஸ்கரன் யாரிடமெல்லாம் செல்போனில் பேசினார். அவரிடம் யாரெல்லாம் செல்போனில் பேசினார்கள் என செல்போன் டவர் லொகேசனை ஆய்வு செய்தபோது அதே பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்த மன்சூர் அகமதுவிடம், பாஸ்கரன் அதிகமாக பேசி இருப்பது தெரியவந்தது. மேலும் மனைவி, மகன்களை பிரிந்து பாஸ்கரன் வீட்டில் தனியாக வசித்து வந்ததால் மன்சூர் அகமது வேலை செய்யும் ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவார் சில நேரங்களில் நடந்து செல்ல முடியாத காரணத்தால் வீட்டிற்கே சாப்பாட்டை பாஸ்கரன் எடுத்து வர சொல்லுவார் மன்சூர் அகமதுவும் சாப்பாட்டை வீட்டிற்கு எடுத்து செல்வார் இதனால் மன்சூர் அகமதுவுக்கு, பாஸ்கரனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மன்சூர் அகமது திருமுல்லைவாயலில் புதிதாக வீடு கட்டியதால் கடன் பிரச்சினையில் சிக்கி தவித்து வருவதாக பாஸ்கரனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு பாஸ்கரனும் தனக்கு மனைவி, மகன்கள் யாரும் தன்னுடன் இல்லாமல் தனியாக வசித்து வருவதாகவும் எனக்கு பணம் வந்தவுடன் உனக்கு தருகிறேன் நீ கடனை அடைத்துக் கொள் என்று கூறி வந்துள்ளார். இதனை நம்பிய மன்சூர் அகமது பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்தார்.Conclusion:சம்பவத்தன்று பணம் உள்ளது வந்து வாங்கி செல் என்று பாஸ்கரன் கூறியதையடுத்து மன்சூர் அகமது சென்றார். அப்போது மன்சூர் அகமதுவிடம், பாஸ்கரன் ஓரினச்சேர்க்கைக்கு ஈடுபடுமாறு வற்புறுத்தி உள்ளார். அப்படி இருந்தால்தான் பணம் தருவேன் என தெரிவித்ததையடுத்து ஆத்திரமடைந்த மன்சூர் அகமது பாத்ரூம் சென்று விட்டு வருவதாக கூறி வெளியே சென்று செங்கல்லை எடுத்து வந்து பாஸ்கரன் தலையில் ஓங்கி அடித்தார் இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய பாஸ்கரன் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு நகைக்காக கொலை நடந்தது போல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் அணிந்திருந்த 3 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு அவர் மொபெட் சாவி வைக்கும் இடம் தெரியும் என்பதால் சாவியை எடுத்துகொண்டு வீட்டை வெளியில் பூட்டிவிட்டு அவர் வைத்திருந்த மொபட்டை எடுத்துச் சென்று இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மன்சூர் அகமதுவிடமிடமிருந்து 2 பவுன் நகைகள், மொபெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.