ETV Bharat / state

மனைவியை தவறாக பேசியதால் கொலை செய்தேன் - கொலையாளி வாக்குமூலம்!

author img

By

Published : Mar 11, 2020, 12:22 PM IST

சென்னை: மனைவியை தவறாக பேசியதால் வாலிபரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தவரை அவரது இரு நண்பர்களுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

chennai police arrested 3 accuist in murder case
சென்னை வாலிபர் கொலையில் 3 கொலையாளிகள் கைது

சென்னை மதுரவாயல், ஆலப்பாக்கம், ராஜூவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (35), இவர் நேற்று மதுரவாயல், பலராமன் தெருவில் உள்ள காலி இடத்தில் தலையில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து காவல்துறையினர், மதுரவாயல் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்து வந்தனர்.

விசாரணையில், அதே பகுதியில் ஒரு அறையில் தங்கியிருந்த பிரசாந்த்(28), சதிஸ்(27), குமார்(48), ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்தபோது முனுசாமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

வழக்கு குறித்து கூறிய காவல் துறையினர், கொலை செய்யப்பட்ட முனுசாமி கமுதி, சின்னமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நான்கு மாதங்களாக மதுரவாயலில் தங்கி இறைச்சி கடையில் வேலை செய்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கட்டட பிளம்பிங். எலக்ட்ரிகல் வேலை செய்யும் பிரசாந்த் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பிரசாந்தின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் பிரசாந்த் முனுசாமி தங்கி இருக்கும் வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் தங்கி வந்துள்ளார். சம்பவத்தன்று முனுசாமி, பிரசாந்த், சதீஷ், குமார் ஆகிய 4 பேரும் காலை முதல் இரவு வரை மது அருந்தியுள்ளனர். அப்போது பிரசாந்திடம் அவரது மனைவி குறித்து முனுசாமி தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த் அங்கிருந்த கட்டையை எடுத்து முனுசாமியை அடித்துள்ளார். மேலும் அவரின் நண்பர்களும் அவரைத் தாக்கி அங்கிருந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

சென்னை மதுரவாயல், ஆலப்பாக்கம், ராஜூவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (35), இவர் நேற்று மதுரவாயல், பலராமன் தெருவில் உள்ள காலி இடத்தில் தலையில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து காவல்துறையினர், மதுரவாயல் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்து வந்தனர்.

விசாரணையில், அதே பகுதியில் ஒரு அறையில் தங்கியிருந்த பிரசாந்த்(28), சதிஸ்(27), குமார்(48), ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்தபோது முனுசாமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

வழக்கு குறித்து கூறிய காவல் துறையினர், கொலை செய்யப்பட்ட முனுசாமி கமுதி, சின்னமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நான்கு மாதங்களாக மதுரவாயலில் தங்கி இறைச்சி கடையில் வேலை செய்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கட்டட பிளம்பிங். எலக்ட்ரிகல் வேலை செய்யும் பிரசாந்த் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பிரசாந்தின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் பிரசாந்த் முனுசாமி தங்கி இருக்கும் வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் தங்கி வந்துள்ளார். சம்பவத்தன்று முனுசாமி, பிரசாந்த், சதீஷ், குமார் ஆகிய 4 பேரும் காலை முதல் இரவு வரை மது அருந்தியுள்ளனர். அப்போது பிரசாந்திடம் அவரது மனைவி குறித்து முனுசாமி தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த் அங்கிருந்த கட்டையை எடுத்து முனுசாமியை அடித்துள்ளார். மேலும் அவரின் நண்பர்களும் அவரைத் தாக்கி அங்கிருந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.