ETV Bharat / state

திருமணம் நடக்கவிருந்த இளைஞர் விபத்தில் உயிரிழந்த சோகம்!

author img

By

Published : Sep 11, 2020, 10:58 AM IST

சென்னை: அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த இளைஞர் ஒருவர் திருவேற்காடு அருகே சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

death
death

சென்னையை அடுத்த மோரை, அருணாச்சலம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (25), இவரது நண்பன் பிரவீன் ராஜ் (21) ஆவர். இருவரும் பெயிண்டர் வேலை செய்துவந்தனர். நேற்று (செப்டம்பர் 10) மாலை வேலைக்குச் செல்வதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

அசோக்குமார் பின்னால் அமர்ந்திருக்க, இருசக்கர வாகனத்தை பிரவீன் ராஜ் ஓட்டிச் சென்றார். அவர்கள், சென்னீர்குப்பம் - ஆவடி சாலை, காடுவெட்டி அருகே சென்றுபோது சாலையில் குறுக்கே வந்த நாய் ஒன்றின் மீது இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் அசோக்குமார் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து ஆம்புலன்ஸ் உதவியுடன் அசோக்குமார் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். லேசான காயங்களுடன் பிரவீன்ராஜ் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.

தகவல் அறிந்து பூந்தமல்லி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று இறந்துபோன அசோக்குமார் உடலை உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அசோக்குமாருக்கு அவரது உறவினர் மகளுடன் இம்மாதம் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது பாட்டி இறந்துபோனதால், அதற்குரிய இறுதிச்சடங்குகள் அனைத்தும் முடித்துவிட்டு அடுத்த மாதம் திருமணம் நடத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

திருமணம் நடக்கவிருந்த இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவர் குடும்பத்தில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த மோரை, அருணாச்சலம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (25), இவரது நண்பன் பிரவீன் ராஜ் (21) ஆவர். இருவரும் பெயிண்டர் வேலை செய்துவந்தனர். நேற்று (செப்டம்பர் 10) மாலை வேலைக்குச் செல்வதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

அசோக்குமார் பின்னால் அமர்ந்திருக்க, இருசக்கர வாகனத்தை பிரவீன் ராஜ் ஓட்டிச் சென்றார். அவர்கள், சென்னீர்குப்பம் - ஆவடி சாலை, காடுவெட்டி அருகே சென்றுபோது சாலையில் குறுக்கே வந்த நாய் ஒன்றின் மீது இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் அசோக்குமார் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து ஆம்புலன்ஸ் உதவியுடன் அசோக்குமார் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். லேசான காயங்களுடன் பிரவீன்ராஜ் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.

தகவல் அறிந்து பூந்தமல்லி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று இறந்துபோன அசோக்குமார் உடலை உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அசோக்குமாருக்கு அவரது உறவினர் மகளுடன் இம்மாதம் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது பாட்டி இறந்துபோனதால், அதற்குரிய இறுதிச்சடங்குகள் அனைத்தும் முடித்துவிட்டு அடுத்த மாதம் திருமணம் நடத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

திருமணம் நடக்கவிருந்த இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவர் குடும்பத்தில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.