ETV Bharat / state

மது பாட்டிலை காணாததால் ஆத்திரம்; அக்காவைக் குத்திக் கொன்ற தம்பி!

author img

By

Published : Jan 25, 2020, 12:24 PM IST

சென்னை: வீட்டில் வைத்திருந்த மதுபாட்டிலை காணவில்லை என்று அக்காவை கொடூரமாகக் கத்தியால் குத்தி கொலை செய்த தம்பியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுவிற்காக அக்காவை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த தம்பி கைது.
மதுவிற்காக அக்காவை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த தம்பி கைது.

சென்னை வளசரவாக்கம் வேலன் நகரைச் சேர்ந்தவர் தாரகேஸ்வரி (54). இவரின் கணவர் 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் இலங்கையிலிருந்து தன் தாய், மூன்று குழந்தைகளுடன் வந்து சென்னையில் குடியேறினார்.

இந்தநிலையில் இலங்கையில் வசித்துவரும் தாரகேஸ்வரியின் சகோதரர் குகதாசன் (54), வருடந்தோறும் சபரிமலைக்குச் சென்றுவிட்டு தனது சகோதரி வீட்டில் வந்து ஒரு மாதம் தங்கி செல்வது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் வந்து தங்கியிருந்த நிலையில், வீட்டில் தான் வைத்திருந்த மது பாட்டிலை காணவில்லை என்று குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

பின்னர் உச்சபட்ச கோபமடைந்த குகதாசன், வீட்டில் இருந்த கத்தியினை எடுத்து தனது அக்கா தாரகேஸ்வரியை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனைத் தடுக்க முயன்ற தாய் வேதநாயகி மற்றும் தாரகேஸ்வரியின் மகன் ஆதிசேஷன் என்பவரையும் கத்தியால் குத்தியுள்ளார். இவர்கள் அனைவரும் கூச்சலிடும் சத்தத்தினைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் குகதாசனிடம் இருந்து மீட்டனர்.

hமதுவிற்காக அக்காவை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த தம்பி கைது.
மதுவிற்காக அக்காவை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி
மேலும், இந்த சம்பவத்தில் தாரகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், குகதாசனை கைது செய்துவிட்டு, தாரகேஸ்வரியின் உடலினை மீட்டு உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்தனர்.

சென்னை வளசரவாக்கம் வேலன் நகரைச் சேர்ந்தவர் தாரகேஸ்வரி (54). இவரின் கணவர் 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் இலங்கையிலிருந்து தன் தாய், மூன்று குழந்தைகளுடன் வந்து சென்னையில் குடியேறினார்.

இந்தநிலையில் இலங்கையில் வசித்துவரும் தாரகேஸ்வரியின் சகோதரர் குகதாசன் (54), வருடந்தோறும் சபரிமலைக்குச் சென்றுவிட்டு தனது சகோதரி வீட்டில் வந்து ஒரு மாதம் தங்கி செல்வது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் வந்து தங்கியிருந்த நிலையில், வீட்டில் தான் வைத்திருந்த மது பாட்டிலை காணவில்லை என்று குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

பின்னர் உச்சபட்ச கோபமடைந்த குகதாசன், வீட்டில் இருந்த கத்தியினை எடுத்து தனது அக்கா தாரகேஸ்வரியை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனைத் தடுக்க முயன்ற தாய் வேதநாயகி மற்றும் தாரகேஸ்வரியின் மகன் ஆதிசேஷன் என்பவரையும் கத்தியால் குத்தியுள்ளார். இவர்கள் அனைவரும் கூச்சலிடும் சத்தத்தினைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் குகதாசனிடம் இருந்து மீட்டனர்.

hமதுவிற்காக அக்காவை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த தம்பி கைது.
மதுவிற்காக அக்காவை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி
மேலும், இந்த சம்பவத்தில் தாரகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், குகதாசனை கைது செய்துவிட்டு, தாரகேஸ்வரியின் உடலினை மீட்டு உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்தனர்.
Intro:Body:வீட்டில் வைத்திருந்த மதுபாட்டிலை காணவில்லை என்று அக்காவை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி கைது.


சென்னை வளசரவாக்கம் வேலன் நகரை சேர்ந்தவர் தாரகேஸ்வரி(54).இவரது கணவர் இறந்ததால் கடந்த 15 வருடங்களாக இலங்கையிலிருந்து வந்து சென்னையில் வாழ்ந்து வருகின்றார். இவருக்கு 3 குழந்தைகள் மற்றும் இவருடன் தாய் வேதநாயகி வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையில் உள்ள இவரது தம்பி குகதாசன்(49).இவர் சபரிமலைக்கு சென்று விட்டு வருடந்தோறும் தனது அக்கா தாரகேஸ்வரி வீட்டில் வந்து 1மாதம் தங்கி செல்வது வழக்கம்.இதே போல் இந்த வருடமும் வந்து தங்கியுள்ளார்.இவருக்கு அதிகளவில் மது அருந்தும் பழக்கம் உள்ளதால் வீட்டிலேயே மதுபாட்டில்கள் வாங்கி வைத்து கொண்டு மது அருந்தி வந்தார்.இந்த நிலையில் நேற்று வீட்டில் வைத்த மதுபாட்டிலை காணவில்லை என்று வீட்டில் உள்ள எல்லோரிடமும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.பின்னர் இதனால் கோபமடைந்த குகதாசன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அக்கா தாரகேஸ்வரியை குத்தியுள்ளார்.பின்னர் இதனை தடுக்க முயன்ற தாய் வேதநாயகி மற்றும் தாரகேஸ்வரியின் மகன் ஆதிசேஷன் என்பவரையும் வெட்டியுள்ளார்.பின்னர் இதனால் கூச்சலிடவே அருகிலிருந்த பொதுமக்கள் குகதாசனை பிடித்தனர்.மேலும் கத்தியால் குத்தியதில் தாரகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் வெட்டுப்பட்ட இரண்டு பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து குகதாசனை கைது செய்தனர்.மேலும் இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.