ETV Bharat / state

Chennai Metro Rail: ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் மெட்ரோ ரயில் பயணிகள்!

author img

By

Published : Jul 3, 2023, 3:19 PM IST

சென்னை மெட்ரோ இரயில்களில் நடப்பாண்டில் கடந்த 5 மாதங்களை விட ஜூன் மாதத்தில் மட்டும் 1.38 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 869 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும், மே மாதத்தில் 72,68,007 பயணிகளும் மற்றும் ஜூன் மாதத்தில் 74,06,876 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக கடந்த 28 ஆம் தேதி 2,95,509 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 25,15,727 பயணிகளும், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 44,81,995 பயணிகளும், டோக்கன்களை பயன்படுத்தி 3,98,131 பயணிகளும், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 5,085 பயணிகளும் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 5,938 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி, மெட்ரோ இரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. இதுமட்டும் இன்றி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது.

மேலும், மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை சுத்தமாவும். சுகாதாரமாகவும் பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விவசாயப்பணிகள் செய்ய ரூ.7 கோடி செலவில் ஹெலிகாப்டர் வாங்கும் விவசாயி!

சென்னை: மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 869 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும், மே மாதத்தில் 72,68,007 பயணிகளும் மற்றும் ஜூன் மாதத்தில் 74,06,876 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக கடந்த 28 ஆம் தேதி 2,95,509 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 25,15,727 பயணிகளும், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 44,81,995 பயணிகளும், டோக்கன்களை பயன்படுத்தி 3,98,131 பயணிகளும், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 5,085 பயணிகளும் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 5,938 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி, மெட்ரோ இரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. இதுமட்டும் இன்றி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது.

மேலும், மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை சுத்தமாவும். சுகாதாரமாகவும் பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விவசாயப்பணிகள் செய்ய ரூ.7 கோடி செலவில் ஹெலிகாப்டர் வாங்கும் விவசாயி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.