ETV Bharat / state

சடலத்துடன் வன்புணர்வு கொண்டவருக்கு நான்கு ஆயுள்: மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! - சென்னை மகளிர் நீதிமன்றம் செய்திகள்

சென்னை: நான்கு பெண்களை கொலைசெய்து, மூன்று பெண்களின் சடலங்களுடன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சமையல் கலைஞருக்கு நான்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

chennai illegai penetration case judgement news
author img

By

Published : Aug 28, 2019, 7:24 PM IST

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவர் கணவரைப் பிரிந்து தனது மூன்று மகள்களுடன் சென்னை ராயப்பேட்டையில் வாழ்ந்துவந்தார். இந்நிலையில், அவருக்கு சமையல் கலைஞர் உதயனுடன் திருமணத்தைத் தாண்டிய உறவு இருந்து வந்துள்ளது.

இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் பாண்டியம்மாளுடன் தங்கியிருந்த உதயன் கடந்த 2016ஆம் ஆண்டு அவருடைய மூன்று மகள்களிடமும் தவறாக நடக்க முயன்றதால் வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உதயன், பாண்டியம்மாளையும் அவரது மூன்று மகள்களையும் கொலை செய்துள்ளார். நால்வரும் உயிரிழந்த பின்னர், பாண்டியம்மாளின் மூன்று மகள்களின் சடலங்களுடனும் உதயன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் கொலை, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுதல் எனும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உதயன் கைது செய்யப்பட்டார். 2017ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வந்த இவ்வழக்கிற்கான விசாரணைகள் முடிவடைந்த நிலையில், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா குற்றம் சாட்டப்பட்ட உதயனுக்கு நான்கு ஆயுள் தண்டனையும், இருபது ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவர் கணவரைப் பிரிந்து தனது மூன்று மகள்களுடன் சென்னை ராயப்பேட்டையில் வாழ்ந்துவந்தார். இந்நிலையில், அவருக்கு சமையல் கலைஞர் உதயனுடன் திருமணத்தைத் தாண்டிய உறவு இருந்து வந்துள்ளது.

இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் பாண்டியம்மாளுடன் தங்கியிருந்த உதயன் கடந்த 2016ஆம் ஆண்டு அவருடைய மூன்று மகள்களிடமும் தவறாக நடக்க முயன்றதால் வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உதயன், பாண்டியம்மாளையும் அவரது மூன்று மகள்களையும் கொலை செய்துள்ளார். நால்வரும் உயிரிழந்த பின்னர், பாண்டியம்மாளின் மூன்று மகள்களின் சடலங்களுடனும் உதயன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் கொலை, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுதல் எனும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உதயன் கைது செய்யப்பட்டார். 2017ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வந்த இவ்வழக்கிற்கான விசாரணைகள் முடிவடைந்த நிலையில், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா குற்றம் சாட்டப்பட்ட உதயனுக்கு நான்கு ஆயுள் தண்டனையும், இருபது ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Intro:nullBody:கணவரை பிரிந்து வாழ்ந்து பெண்ணையும் அவரது 3 மகள்களையும் கொலை செய்த சபையில் கலைஞருக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையில் சேர்ந்த பாண்டியம்மாள், கணவரை பிரிந்து தனது 3 மகள்களுடன் வாழ்ந்து வந்த நிலையில் சமையல் கலைஞர் உதயனுடன் தொடர்பு ஏற்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் பாண்டியம்மாளுடன் தங்கியிருந்த உதயன், 2016 ம் ஆண்டு 3 மகள்களிடமும் தவறாக நடக்க முயன்றதால் வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்.

இதனால் பாண்டியம்மாள் மற்றும் 3 மகள்களை கொலை செய்த உதயன், உயிரிழந்த பின்னர் 3 மகள்களையும் பாலியில் வன்கொடுமை செய்தார்.

இது தொடர்பாக ராயப்பேட்டை காவல்நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உதயனை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, குற்றம் சாட்டப்பட்ட உதயனுக்கு 4 ஆயுள் தண்டனையை ஏக்காலத்துக்கு அனுபவிக்க வேண்டும் எனவும், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.