ETV Bharat / state

ஈடிவி பாரத் அறிமுகம்: செய்தியாளர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்!

author img

By

Published : Mar 22, 2019, 6:05 PM IST

Updated : Mar 22, 2019, 9:06 PM IST

சென்னை: ஈடிவி பாரத் செயலி அறிமுகம் செய்யப்பட்டதையொட்டி, சென்னையில் உள்ள 'ஈடிவி பாரத்' அலுவலகத்தில் செய்தியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

ஈடிவி பராத்

உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், செய்திகளையும் பொது சமூகம் தெரிந்து கொள்ளும் வகையில் அவற்றை மிக எளிதாக வழங்குகிறது ஈடிவி பாரத். பயனாளர்கள் எங்கே இருந்தாலும், அவர்களின் பார்வைக்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் விதமாக 'ஒரே தேசம்; ஒரே செயலி' என்ற அடிப்படையில், 29 மாநிலங்களுக்கான செய்திகளையும், தகவல்களையும் 13 இந்திய மொழிகளில் வழங்குகிறது ஈடிவி பாரத்.

இத்தனை சிறப்பு அம்சத்தை தன்னகத்தே கொண்டுள்ள நமது ஈடிவி பாரத்தின் செயலியை மக்களின் பயன்பாட்டிற்காக நேற்று காலை 11.16 மணிக்கு ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன்படி ஈடிவி பாரத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் மொழிக்கான மொபைல் செயலியை பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

ஈடிவி பாரத்தின் ஆங்கிலம்-ஹிந்தி ஆகிய மொழிகளுக்கான மொபைல் செயலியை துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார்.

ஈடிவி பாரத்தின் தெலங்கானா மாநிலத்திற்கான தெலுங்கு மொபைல் செயலியை ராமோஜி குழுமத் தலைவர் ராமோஜி ராவும், மற்ற மாநிலங்களின் செயலியை அம்மாநில முதலமைச்சர் அல்லது பிரபலங்கள் தொடங்கி வைத்தனர்.

சென்னையில் உள்ள ஈடிவி பாரத் தமிழின் அலுவலகத்திலும் நமது செயலியின் தொடக்கத்தை செய்தியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடி வரவேற்றனர்.

ஈடிவி பாரத் சென்னை அலுவலகம்

உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், செய்திகளையும் பொது சமூகம் தெரிந்து கொள்ளும் வகையில் அவற்றை மிக எளிதாக வழங்குகிறது ஈடிவி பாரத். பயனாளர்கள் எங்கே இருந்தாலும், அவர்களின் பார்வைக்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் விதமாக 'ஒரே தேசம்; ஒரே செயலி' என்ற அடிப்படையில், 29 மாநிலங்களுக்கான செய்திகளையும், தகவல்களையும் 13 இந்திய மொழிகளில் வழங்குகிறது ஈடிவி பாரத்.

இத்தனை சிறப்பு அம்சத்தை தன்னகத்தே கொண்டுள்ள நமது ஈடிவி பாரத்தின் செயலியை மக்களின் பயன்பாட்டிற்காக நேற்று காலை 11.16 மணிக்கு ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன்படி ஈடிவி பாரத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் மொழிக்கான மொபைல் செயலியை பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

ஈடிவி பாரத்தின் ஆங்கிலம்-ஹிந்தி ஆகிய மொழிகளுக்கான மொபைல் செயலியை துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார்.

ஈடிவி பாரத்தின் தெலங்கானா மாநிலத்திற்கான தெலுங்கு மொபைல் செயலியை ராமோஜி குழுமத் தலைவர் ராமோஜி ராவும், மற்ற மாநிலங்களின் செயலியை அம்மாநில முதலமைச்சர் அல்லது பிரபலங்கள் தொடங்கி வைத்தனர்.

சென்னையில் உள்ள ஈடிவி பாரத் தமிழின் அலுவலகத்திலும் நமது செயலியின் தொடக்கத்தை செய்தியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடி வரவேற்றனர்.

ஈடிவி பாரத் சென்னை அலுவலகம்
Intro:Body:Conclusion:
Last Updated : Mar 22, 2019, 9:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.