ETV Bharat / state

கார் மோதி வங்கி மேலாளர் பலி: போதையில் காரை ஓட்டிவந்தவர் கைது!

author img

By

Published : Jul 26, 2019, 2:19 PM IST

சென்னை: கார் மோதி வங்கி மேலாளர் ஒருவர் பலியான நிலையில், போதையில் காரை ஓட்டிய இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கார் மோதி வங்கி மேலாளர் பலி-போதையில் காரை ஓட்டி வந்தவர் கைது!

ராயப்பேட்டை முஹம்மத் தெருவைச் சேர்ந்தவர் முகமது அப்துல் கையூம். இவர் கொட்டிவாக்கத்தில் உள்ள எச்.டி.எஃப்.சி. வங்கியில் மேலாளராக பணியாற்றிவந்துள்ளார்.

இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை ராயப்பேட்டை ஜி.பி. சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக அதிவேகமாக வந்த லான்சர் கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது.

போதையில் காரை ஓட்டி வந்தவர் கைது!

இதில் அப்துல் கையூமிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் அப்துல் கையூமை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்துவிட்டு காரில் வந்தவர்களில் விஜயகுமார் என்பவரை பிடித்தனர். இதில் இரண்டு பேர் தப்பியோடியுள்ளனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாசாலை காவல் துறையினர் விஜயகுமாரை கைது செய்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், விஜயகுமாருடன் காரில் வந்த நபர்கள் சரவணன், திலீப் குமார் என்பதும் மேலும் காரை ஓட்டிய விஜயகுமார் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் தப்பியோடிய திலீப்குமார், சரவணனை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இந்த நிலையில் அப்துல் கையூம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ராயப்பேட்டை முஹம்மத் தெருவைச் சேர்ந்தவர் முகமது அப்துல் கையூம். இவர் கொட்டிவாக்கத்தில் உள்ள எச்.டி.எஃப்.சி. வங்கியில் மேலாளராக பணியாற்றிவந்துள்ளார்.

இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை ராயப்பேட்டை ஜி.பி. சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக அதிவேகமாக வந்த லான்சர் கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது.

போதையில் காரை ஓட்டி வந்தவர் கைது!

இதில் அப்துல் கையூமிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் அப்துல் கையூமை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்துவிட்டு காரில் வந்தவர்களில் விஜயகுமார் என்பவரை பிடித்தனர். இதில் இரண்டு பேர் தப்பியோடியுள்ளனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாசாலை காவல் துறையினர் விஜயகுமாரை கைது செய்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், விஜயகுமாருடன் காரில் வந்த நபர்கள் சரவணன், திலீப் குமார் என்பதும் மேலும் காரை ஓட்டிய விஜயகுமார் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் தப்பியோடிய திலீப்குமார், சரவணனை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இந்த நிலையில் அப்துல் கையூம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Intro:Body:*கார் மோதி வங்கி மேலாளர் பலி.மது போதையில் காரை ஓட்டி வந்தவர் கைது.*

ராயப்பேட்டை முஹம்மத் தெருவை சேர்ந்தவர் முகம்மது அப்துல் கையும். இவர் HDFC வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். சென்னை ராயப்பேட்டை ஜிபி ரோடு வழியாக உட் சாலை சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் முஹம்மத் அப்துல் கையூம் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த லான்சர் கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முகமது அப்துல் கையூம்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாசாலை போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் காரில் வந்த நபர்கள் விஜயகுமார், சரவணன், திலீப் குமார் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் குடிபோதையில் காரை ஓட்டி வந்ததும் தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்த விஜயகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய திலீப்குமார் மற்றும் சரவணை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முகமது அப்துல் கையூம் பரிதாபமாக உயிரிழந்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.