ETV Bharat / state

பாட்டியைக் கொன்று நகையை கொள்ளையடித்த பேரன் உள்ளிட்ட இருவர் கைது! - chennai youngster murderd grandma

சென்னை: ஆவடி அருகே பணம் கொடுக்க மறுத்த பாட்டியை  கொன்ற பேரனையும் அவரது நண்பரையும் காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

chennai-at-avadi-youngster-arrested-for-murdering-his-grandma-for-jewels
பாட்டியைக் கொன்று நகையை கொள்ளையடித்த பேரன் கைது!
author img

By

Published : Feb 12, 2020, 11:00 AM IST

சென்னை ஆவடி அடுத்த கண்ணப்பாளையம், ஒத்தவாடை தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான பார்த்தசாரதி

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி மல்லிகா (56) தனது கணவரின் ஓய்வூதிய பணத்தில் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி மதியம் அதே பகுதியில் வசிக்கும் மல்லிகாவின் தங்கை இந்திராவின் மகள் மீனாட்சி அவரைக் காண வந்துள்ளார். அப்போது மல்லிகா வீட்டு சமையலறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அவரது காது, மூக்கில் இருந்து தங்க நகைகள் காணமல் போயிருந்தன. மேலும் பீரோவில் இருந்த நகை, பணமும் திருடு போயிருந்தன.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், மல்லிகாவை கொலை செய்தது அவரது சகோதரியின் பேரன் கொளத்தூர், ரெட்டேரியைச் சேர்ந்த கோகுல் (19). அவரது கூட்டாளியான அயனாவரத்தைச் சேர்ந்த 17வயது சிறுவன் ஆகியோர் என தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து இருவரையும் பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை ஆவடி காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் உயிரிழந்த மல்லிகாவின் மூத்த சகோதரி பத்மா என்பவரின் மகள் வயிற்று பேரனான கோகுல் கொளத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கோகுல் தங்களின் குடும்ப செலவுக்காக அவ்வப்பபோது பாட்டி மல்லிகாவிடம் பணம் பெற்று செல்வது வழக்கம். கடந்த சில நாள்களுக்கு முன்பு கோகுல் குடும்பத்தினர் வேறு ஒரு வாடகை வீட்டிற்கு குடிபோக இருந்ததால் அதற்கான அட்வான்ஸ் தொகையான ரூ.20 ஆயிரத்தை பாட்டி மல்லிகாவிடம் கேட்டதற்கு அவர் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

பாட்டியைக் கொன்று நகையை கொள்ளையடித்த பேரன் கைது!

இதனால் பாட்டி மல்லிகாவை கொன்று நகைகளை கொள்ளை அடிக்க முடிவு செய்து அவரின் நண்பர் உதவியோடு கடந்த 6ஆம் தேதி இரவு மல்லிகா வீட்டின் பின்புறமாக வீட்டுக்குள் நுழைந்து அவரைத் தாக்கி கொலை செய்து அவரது காது, மூக்கில் இருந்த நகைகளை இருவருமாக எடுத்துள்ளனர்.

மேலும் பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் 2 ஆயிரத்து 500 ரூபாய் பணம் ஆகியவற்றையும் கொள்ளையடித்து சென்றனர். அதனையடுத்து காவல்துறையினர் கோகுல் மறைத்து வைத்திருந்த சுமார் ஏழு சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் கைது சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் குற்றவாளி சரண்

சென்னை ஆவடி அடுத்த கண்ணப்பாளையம், ஒத்தவாடை தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான பார்த்தசாரதி

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி மல்லிகா (56) தனது கணவரின் ஓய்வூதிய பணத்தில் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி மதியம் அதே பகுதியில் வசிக்கும் மல்லிகாவின் தங்கை இந்திராவின் மகள் மீனாட்சி அவரைக் காண வந்துள்ளார். அப்போது மல்லிகா வீட்டு சமையலறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அவரது காது, மூக்கில் இருந்து தங்க நகைகள் காணமல் போயிருந்தன. மேலும் பீரோவில் இருந்த நகை, பணமும் திருடு போயிருந்தன.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், மல்லிகாவை கொலை செய்தது அவரது சகோதரியின் பேரன் கொளத்தூர், ரெட்டேரியைச் சேர்ந்த கோகுல் (19). அவரது கூட்டாளியான அயனாவரத்தைச் சேர்ந்த 17வயது சிறுவன் ஆகியோர் என தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து இருவரையும் பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை ஆவடி காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் உயிரிழந்த மல்லிகாவின் மூத்த சகோதரி பத்மா என்பவரின் மகள் வயிற்று பேரனான கோகுல் கொளத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கோகுல் தங்களின் குடும்ப செலவுக்காக அவ்வப்பபோது பாட்டி மல்லிகாவிடம் பணம் பெற்று செல்வது வழக்கம். கடந்த சில நாள்களுக்கு முன்பு கோகுல் குடும்பத்தினர் வேறு ஒரு வாடகை வீட்டிற்கு குடிபோக இருந்ததால் அதற்கான அட்வான்ஸ் தொகையான ரூ.20 ஆயிரத்தை பாட்டி மல்லிகாவிடம் கேட்டதற்கு அவர் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

பாட்டியைக் கொன்று நகையை கொள்ளையடித்த பேரன் கைது!

இதனால் பாட்டி மல்லிகாவை கொன்று நகைகளை கொள்ளை அடிக்க முடிவு செய்து அவரின் நண்பர் உதவியோடு கடந்த 6ஆம் தேதி இரவு மல்லிகா வீட்டின் பின்புறமாக வீட்டுக்குள் நுழைந்து அவரைத் தாக்கி கொலை செய்து அவரது காது, மூக்கில் இருந்த நகைகளை இருவருமாக எடுத்துள்ளனர்.

மேலும் பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் 2 ஆயிரத்து 500 ரூபாய் பணம் ஆகியவற்றையும் கொள்ளையடித்து சென்றனர். அதனையடுத்து காவல்துறையினர் கோகுல் மறைத்து வைத்திருந்த சுமார் ஏழு சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் கைது சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் குற்றவாளி சரண்

Intro:Body:ஆவடி அருகே பணம் கொடுக்க மறுத்த பாட்டியை  கொன்ற பேரன் மற்றும் அவரது நண்பரை ஆவடி காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.




ஆவடி அடுத்த கண்ணப்பாளையம், ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் கடந்த 2ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி மல்லிகா (56). இவர் தனது கணவரின் ஓய்வூதிய பணத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கடந்த 7ந்தேதி மதியம் மல்லிகா வீட்டிற்கு அதே பகுதியில் வசிக்கும் அவரது தங்கை இந்திரா மகள் மீனாட்சி வந்துள்ளார். அப்போது அவர் வீட்டு சமையலறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், அவரது காது, மூக்கில் இருந்து தங்க நகைகள் மாயமாகி இருந்தன. இதோடு மட்டுமல்லாமல், பீரோவில் இருந்த நகை மற்றும் பணமும் திருடு போய் இருந்தன. புகாரின் அடிப்படையில் ஆவடி போலீசார் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், மல்லிகாவை கொலை செய்தது அவரது  பேரன் கொளத்தூர், ரெட்டேரியை சேர்ந்த கோகுல் (19) மற்றும் அவரது கூட்டாளியான  அயனாவரத்தை சேர்ந்த 17வயது சிறுவன் ஆகியோர் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையில்  தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த கோகுல், சிறுவன் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், அவர்களை போலீசார் ஆவடி காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கொலை செய்யப்பட்ட மல்லிகாவிற்கு பத்மா என்ற அக்கா உள்ளார். இவரது  மகள் விஜயா கொளத்தூரில் வசித்து வருகிறார். இவரது கணவர் ரமேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மகன் கோகுல் கூலி வேலை செய்து வருகிறார். இவர் அடிக்கடி வந்து பாட்டி மல்லிகாவிடம்  குடும்ப செலவுக்காக பணத்தை வாங்கி செல்வாராம். இதற்கிடையில் கோகுல் குடும்பத்தினர் வசிக்கும் வாடகை வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு மாறவேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது. இந்த வீட்டிற்கு அட்வான்ஸ் பணமாக ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டியது இருந்துள்ளது. இதனையடுத்து, அவர் பணம் இல்லாமல் தவித்து உள்ளார். இதற்கிடையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோகுல் மல்லிகாவை சந்தித்து பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து கோகுலை விரட்டி அனுப்பி உள்ளார். இதனால் அவர் பாட்டி மல்லிகா மீது ஆத்திரத்தில் இருந்து உள்ளார். மேலும், பணம் கொடுக்க மறுத்த அவரை கொன்று நகைகளை கொள்ளை அடிக்க முடிவு செய்தார். இதற்கு, கோகுல், தனக்கு நெருக்கமான நண்பரான சிறுவனின் உதவியையும் நாடினார். அதற்கு, அவரும் ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்து உள்ளார். இந்நிலையில் கடந்த 6ந்தேதி இரவு கோகுல், தனது நண்பரான சிறுவனுடன் வில்லிவாக்கத்தில் இருந்து மின்சார ரயில் மூலமாக ஆவடி வந்து இறங்கி உள்ளார். பின்னர், அவர்கள் இருவரும் அங்கிருந்து ஷேர்ஆட்டோ மூலமாக கன்னப்பாளையத்திற்கு இரவு 10மணி அளவில் வந்துள்ளார். இதன்பிறகு, அவர்கள் இருவரும் வீட்டு பின்புறமாக மல்லிகா வீட்டுக்குள் முகத்தில் கர்சீப் கட்டியபடி நுழைந்து உள்ளனர். அதன் பிறகு, அங்கிருந்த மல்லிகாவின் வாயை சிறுவன் பொத்தி உள்ளார். அப்போது கோகுல் அவரது காலை பிடித்து இழுத்து கீழே தள்ளியுள்ளார். இதில் மல்லிகா பின் பக்க தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து இறந்தார். பின்னர், அவரது காது, மூக்கில் இருந்த நகைகளை இருவரும் சேர்ந்து அறுத்து எடுத்துள்ளனர். மேலும், அவர்கள் இருவரும் பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும்  ரூ.2,500/- பணம் ஆகியவற்றையும் திருடி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் கோகுல் மறைத்து வைத்திருந்த சுமார் 7சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் கோகுல், சிறுவன் இருவரையும் கைது சிறையில் அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.