ETV Bharat / state

சீன அதிபர் வருகை - புதியப் பூங்கா, சுவர் ஓவியம் என அதிரடி காட்டும் சென்னை!

author img

By

Published : Oct 9, 2019, 10:28 PM IST

சென்னை: சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் தமிழ்நாடு வருகையால் சென்னை விமான நிலையம் புதுப்பொலிவுடன் தயாராகியுள்ளது.

chennai airport

சீன அதிபர் ஷி ஜின்பிங் மூன்று நாள் அரசு முறை பயணமாக வருகின்ற 11ஆம் தேதி சென்னை வருகிறார். சீன அதிபர் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து, மகாபலிபுரம் வரை செல்லும் பாதையில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்துக்கு வரும் 11ஆம் தேதி சீன அதிபர் ஷி ஜின்பிங் வந்து இறங்கும் போது விமான நிலையத்திலேயே அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நடனம், இசை உள்ளிட்ட வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சீன அதிபர் விமான நிலையத்தில் இருந்து சென்னை நகருக்குள் செல்வதற்கான 5, 6ஆவது நுழைவு வாயிலை பயன்படுத்தவும், அதற்கான வசதிகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அந்தப் பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. விமான நிலையச் சுவர்களில் இந்திய - சீன கலாசார ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. மீனம்பாக்கம் விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயில் அருகே சாலையோர புதியப் பூங்கா ஒன்று உருவாக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நெடுஞ்சாலைத்துறையினர் செய்து வருகின்றனர்.

புதுப்பொலிவுடன் தயாராகியுள்ள சென்னை விமான நிலையம்!

சீன அதிபர் விமானம் சென்னையில் தரையிறங்கும் தினமும், 13ஆம் தேதி அவர் புறப்படும் போதும் சுமார் 30 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு, வழியனுப்பும் நிகழ்ச்சிகள், சரக்கு விமானங்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் விமானத்திற்காக தடை விதிக்கப்பட்ட நேரத்தில் சென்னையில் இருந்து செல்ல வேண்டிய, வர வேண்டிய விமானங்களின் நேரங்களை மாற்றி அமைத்து பயணிகளுக்குத் தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாமல்லபுரம், சீனா, போதி தர்மர் - இந்த காரணிகளுக்குள் இருக்கும் பிணைப்பு என்ன?

சீன அதிபர் ஷி ஜின்பிங் மூன்று நாள் அரசு முறை பயணமாக வருகின்ற 11ஆம் தேதி சென்னை வருகிறார். சீன அதிபர் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து, மகாபலிபுரம் வரை செல்லும் பாதையில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்துக்கு வரும் 11ஆம் தேதி சீன அதிபர் ஷி ஜின்பிங் வந்து இறங்கும் போது விமான நிலையத்திலேயே அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நடனம், இசை உள்ளிட்ட வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சீன அதிபர் விமான நிலையத்தில் இருந்து சென்னை நகருக்குள் செல்வதற்கான 5, 6ஆவது நுழைவு வாயிலை பயன்படுத்தவும், அதற்கான வசதிகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அந்தப் பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. விமான நிலையச் சுவர்களில் இந்திய - சீன கலாசார ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. மீனம்பாக்கம் விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயில் அருகே சாலையோர புதியப் பூங்கா ஒன்று உருவாக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நெடுஞ்சாலைத்துறையினர் செய்து வருகின்றனர்.

புதுப்பொலிவுடன் தயாராகியுள்ள சென்னை விமான நிலையம்!

சீன அதிபர் விமானம் சென்னையில் தரையிறங்கும் தினமும், 13ஆம் தேதி அவர் புறப்படும் போதும் சுமார் 30 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு, வழியனுப்பும் நிகழ்ச்சிகள், சரக்கு விமானங்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் விமானத்திற்காக தடை விதிக்கப்பட்ட நேரத்தில் சென்னையில் இருந்து செல்ல வேண்டிய, வர வேண்டிய விமானங்களின் நேரங்களை மாற்றி அமைத்து பயணிகளுக்குத் தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாமல்லபுரம், சீனா, போதி தர்மர் - இந்த காரணிகளுக்குள் இருக்கும் பிணைப்பு என்ன?

Intro:சீனா அதிபர் தமிழக வருகையை ஒட்டி புதுப்பொலிவுடன் தயாராகும் சென்னை விமான நிலையம்Body:சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாள் அரசு முறை பயணமாக வருகிற 11ந் தேதி சென்னை வருகிறார். 11ந் தேதி பகல் 1.30 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்து சேருகிறார். அங்கு வரவேற்பு முடிந்ததும் பகல் 1.45 மணிக்கு கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஒட்டலுக்கு செல்கிறார். ஒட்டலில் ஒய்வு எடுக்கும் சீன அதிபர் மாலை 4 மணிக்கு மகாபலிபுரம் செல்கிறார். மாலை 5 மணிக்கு அர்ஜூனர் தபசு பகுதியை பார்வையிடுகிறார். மாலை 5.20 மணிக்கு ஐந்து ரதம் பகுதிக்கு சென்று சுற்றி பார்க்கிறார். மாலை 5.45 மணிக்கு கடற்கரை கோவிலுக்கு செல்கிறார். பின்னர் கலை நிகழ்ச்சிகளை பார்க்கிறார். முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். பின்னர் இரவு 9 மணிக்கு மகாபலிபுரத்தில் இருந்து கிண்டி வந்து ஒட்டலில் தங்குகிறார். 12ந் தேதி காலை 9 மணிக்கு மகாபலிபுரம் செல்கிறார். அங்கு இந்திய பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடக்கிறது. மகாபலிபுரத்தில் மதிய உணவுகளை முடித்துக் கொண்டு பகல் 1.15 மணிக்கு சென்னை புறப்பட்டு வருகிறார். சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சிகள் முடிந்து பகல் 2 மணிக்கு புறப்பட்டு செல்கிறார்.

மகாபலிபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபருடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் இந்தியா-சீனா இடையே நல்லுறவு குறித்தும் சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின்றன.


சீன அதிபர் வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து செல்லும் பாதைகள், மகாபலிபுரம் ஆகிய இடங்களில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
11-ந்தேதி சென்னை விமான நிலையத்துக்கு வந்து இறங்கும் போது விமான நிலையத்திலேயே அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியுடன் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். சீன அதிபர் விமானம் சென்னையில் தரையிறங்கும் தினமும் புறப்பட்டு செல்லும் தினமும் சுமார் 30 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு, வழியனுப்பு நிகழ்ச்சிகள் முடிந்து செல்லும் வரை பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


சீன அதிபர் விமானத்திற்காக தடை விதிக்கப்பட்ட நேரத்தில் சென்னையில் இருந்து செல்ல வேண்டிய மற்றும் வர வேண்டிய விமானங்களின் நேரங்களை மாற்றி அமைத்து பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சீன அதிபர் விமான நிலையத்தில் இருந்து சென்னை நகருக்குள் செல்வதற்கான 5 மற்றும் 6-வது நுழைவு வாயில் பயன்படுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அந்த பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் வர்ணம் தீட்டப்படுகிறது. விமான நிலைய சுவர்களில் இந்திய மற்றும் சீன கலாச்சார ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.
மீனம்பாக்கம் பழைய விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயில் அருகே சாலையோர புதிய பூங்கா ஒன்று உருவாக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகின்றனர்.

அதுப்போல் விமான நிலைய பகுதியில் இருந்து கிண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மெட்ரோ ரெயில்வே தூண்கள், மேம்பால சுவர்கள், பாதைகளில் எந்தவித போஸ்டரும் ஒட்டக் கூடாது.
அதை மீறுவோருக்கு ரூ.1000 அபராதம் அல்லது ஜெயில் தண்டனை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்து உள்ளது. இதற்காக ஆலந்தூர் மண்டல அதிகாரிகள் குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டு உள்ளனர்.


விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் குறித்து சீனாவில் இருந்து வந்துள்ள உயர்மட்ட அதிகாரிகள் குழு ஆய்வு செய்து கண்காணித்து வருகிறது. சீன அதிபர் வருவதற்கு முன் அந்நாட்டின் சிறப்பு பாதுகாப்பு படையினர் சென்னை வர உள்ளனர்.
சீன அதிபர் பயணம் செய்வதற்காக விசே‌ஷ பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்கள் மற்றும் சீன அதிபர் பயன்படுத்தும் பொருட்கள் சீனாவில் இருந்து 747- போயிங் விசே‌ஷ சரக்கு விமானத்தில் சென்னைக்கு 3 நாளில் கொண்டு வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீன அதிபரின் பாதுகாப்பு தொடர்பாக விமான நிலைய தொழில் பாதுகாப்பு படையினர், சென்னை மாநகர போலீசார், விமான நிலைய பாதுகாப்பு படை அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

உச்சக்கட்ட பாதுகாப்பாக இரு தலைவா்கள் தனி விமானங்கள் சென்னை விமானநிலையத்தில் தறையிறங்கும் போதும், அவா்கள் பயணிக்கும் போதும் மற்ற விமானங்களுக்கு சில கட்டுப்பாடுகளை மத்திய விமான கட்டுப்பாட்டு துறை அமுல்படுத்துகிறது.
அதைப்போல் அவா்கள் விமானமோ அல்லது ஹெலிகாப்டரோ சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்படும்போதும் வேறு விமானங்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் கிழக்கு கடற்கரை வழியாக வரும் மற்றும் செல்லும் சில விமானங்கள் வழித்தடம் மாற்றப்பட்டு ஶ்ரீபெரும்புத்தூா் வான் வழித்தடத்தில் செல்லும்படியாக மாற்றியமைக்கப்படுகிறது. இதனால் சென்னை விமான போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி போன்ற பகுதிகள் முழு கண்காணிப்பு வலைத்திற்குள் கொண்டு வரப்படுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.