சென்னை விமான நிலையத்தில் சா்வதேச முனையம் மற்றும் உள்நாட்டு முனையம் இடையே பயணிகள் வசதிக்காக பேட்டரி வாகனங்கள் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு வந்தன. இதனால் உள்நாட்டு விமானங்களில் வந்து சர்வதேச விமானத்திற்கு போக வேண்டிய பயணிகள் சுமாா் ஒரு கி.மீ.தூரத்தில் உள்ள சா்வதேச முனையத்திற்கு செல்வதற்கும் சர்வதேச விமானங்களில் வந்து உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கும் இந்த பேட்டரி வாகனங்கள் பெரிதும் பயன்பட்டு வந்தன.
இந்த பேட்ரி வாகனங்களில் பயணிகள் மட்டுமின்றி அவா்களின் லக்கேஜ்களும் எடுத்து செல்லப்பட்டன. இந்த வாகனங்களை நாள் ஒன்றுக்கு 3,000 முதல் 5,000 வரையிலான டிரான்சிஸ்ட் பயணிகள் பயன்படுத்தினர். இந்த வாகனங்களை ஷட்டில் காா் இந்தியா என்ற தனியாா் தொண்டு நிறுவனம் இயக்கி வந்தது. அந்த பேட்டரி வாகனங்களில் தனியாா் காா்ப்பரேட் நிறுவனங்கள் விளம்பரம் செய்தனா்.
அந்த விளம்பரதாரர்களின் ஸ்பான்சா் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் உதவியுடன் பயணிகளுக்கான இந்த சேவைகள் நடந்தன. தரை தளத்தில் உள்ள பயணிகள் வருகை பகுதி மற்றும் இரண்டாம் தளத்தில் உள்ள பயணிகள் புறப்பாடு பகுதிகளில் 24 மணி நேரமும் இந்த இலவச சேவை தொடா்ந்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக விமான நிலையத்தின் தரை தளத்தில் உள்ள வருகைப் பகுதியில் இலவச பேட்டரி வாகன சேவைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இரண்டாம் தளத்தில் உள்ள புறப்பாடு பகுதியில் மட்டும் பேட்டரி வாகனங்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. இவை பயணிகளுக்கு போதுமானதாக இல்லாததால், வயதான பெண்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். லக்கேஜ்களை சுமந்து கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு முனையத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஏர்போா்ட் அத்தாரிட்டி தனியாா் தொண்டு நிறுவனமிடையே ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக தனியாா் பேட்டரி வாகனங்கள் விமான நிலையத்தில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனோடு ஏா்போா்ட் அத்தாரிட்டி ஓரிரு பேட்டரி வாகனங்களை வைத்து புறப்பாடு பகுதியில் மட்டும் இயக்குவதாகக் கூறப்படுகிறது. இவர்களிடையே ஏற்பட்ட பிரச்னையால் அப்பாவி பயணிகள் அவதிப்படுகின்றனா்.