ETV Bharat / state

24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

author img

By

Published : Nov 11, 2020, 1:17 PM IST

சென்னை : தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில், "அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும். அவ்வப்போது ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மீனவர்களுக்கான எச்சரிக்கை: சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் வீசக்கூடும். எனவே அடுத்த இரண்டு நாள்களுக்கு மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என்றார்.

இதையும் படிங்க: திருச்சி விமான நிலையத்தில் 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில், "அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும். அவ்வப்போது ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மீனவர்களுக்கான எச்சரிக்கை: சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் வீசக்கூடும். எனவே அடுத்த இரண்டு நாள்களுக்கு மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என்றார்.

இதையும் படிங்க: திருச்சி விமான நிலையத்தில் 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.