சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் துறைமுகத்தில் உள்ள மருத்துவமனையில் உதவியாளராக வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில் நேற்று (செப்.17) இரவு வேலைகளை முடித்துவிட்டு சுமார் எட்டு மணி அளவில் பார்த்தசாரதி சாமி தெருவில் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது பின்னாலிருந்து வந்த இளைஞர் ஒருவர் அவரின் கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்க நகையை பறித்துவிட்டு தப்பி ஓடினார். சிறிது தூரம் ஓடிய அந்த இளைஞன் மற்றொரு நபரிடம் சென்று கொடுத்துவிட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி, ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.
தனியாக சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - 6 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவல்துறை
சென்னை: திருவல்லிக்கேணியில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த திருடனை புகார் அளித்த ஆறு மணி நேரத்தில் ஐஸ் ஹவுஸ் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
![தனியாக சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - 6 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவல்துறை chennai திருவல்லிக்கேணி thiruvallikeni ஐஸ் அவுஸ் காவல்துறை ice house police department சென்னை சங்கிலி பறிப்பு chain snatch 6 hours 6 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவல்துறை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8844578-thumbnail-3x2-crime.jpg?imwidth=3840)
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் துறைமுகத்தில் உள்ள மருத்துவமனையில் உதவியாளராக வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில் நேற்று (செப்.17) இரவு வேலைகளை முடித்துவிட்டு சுமார் எட்டு மணி அளவில் பார்த்தசாரதி சாமி தெருவில் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது பின்னாலிருந்து வந்த இளைஞர் ஒருவர் அவரின் கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்க நகையை பறித்துவிட்டு தப்பி ஓடினார். சிறிது தூரம் ஓடிய அந்த இளைஞன் மற்றொரு நபரிடம் சென்று கொடுத்துவிட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி, ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.
இதையும் படிங்க: அரிவாளால் வெட்டி வழிப்பறி - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்