சென்னை அடுத்த பழைய பல்லாவரம் பச்சையப்பன் காலனியில் வசிப்பவர் ஃபரிதா பேகம். இவர் கடந்த சனிக்கிழமை பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து இரவு 8 மணி அளவில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகைகளை பறித்து, மின்னல் வேகத்தில் தப்பினர்.
பின்னர் இது குறித்து அவர் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிதார். அப்புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சி கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோல், கடந்த சில நாள்களுக்கு முன்பு பழைய பல்லாவரத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரிடம் 10 சவரன் தங்க நகையை பறிக்க கொள்ளையர்கள் முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்!