ETV Bharat / state

மத்திய அமைச்சரிடம் மேடையில் கோரிக்கை வைத்த திமுக எம்எல்ஏ

சென்னை: பிரிட்டானியா, குர்குரே மற்றும் லேஸ் ஆகிய நிறுவனங்கள் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தி வருவதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் திமுக எம்எல்ஏ சுப்ரமணியன் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

author img

By

Published : Aug 29, 2019, 10:01 PM IST

sadananda gowda

சென்னை கிண்டியில் உள்ள சிப்காட் பயிற்சி மையத்தில் மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கவுடா மத்திய கல்வி நிறுவனத்தின் ஆண்கள் விடுதியை திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர், ”இன்னும் ஒரு சில ஆண்டுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஒரு ரூபாய்க்கு நாப்கின் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். தமிழ்நாட்டில் பிளாஸ்டிகை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க முடியாது. ஆனால் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க நிபுணர்களிடமிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், பொருளாதார மந்தநிலை சரி செய்ய நிதியமைச்சர் உற்பத்தி நிறுவனங்களுக்கு விதிகளை தளர்த்தி வரிகளை குறைத்துள்ளார். இது நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018ஆம் ஆண்டு 70 கோடி விவசாயிகளுக்கு உர மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு 80 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அதனையடுத்து பேசிய சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா. சுப்ரமணியன், ”பிரிட்டானியா, குர்குரே மற்றும் லேஸ் ஆகிய நிறுவனங்கள் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்திவருவதை உடனடியாக தடை செய்ய வேண்டும். நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடையை கொண்டு வர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

சென்னை கிண்டியில் உள்ள சிப்காட் பயிற்சி மையத்தில் மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கவுடா மத்திய கல்வி நிறுவனத்தின் ஆண்கள் விடுதியை திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர், ”இன்னும் ஒரு சில ஆண்டுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஒரு ரூபாய்க்கு நாப்கின் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். தமிழ்நாட்டில் பிளாஸ்டிகை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க முடியாது. ஆனால் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க நிபுணர்களிடமிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், பொருளாதார மந்தநிலை சரி செய்ய நிதியமைச்சர் உற்பத்தி நிறுவனங்களுக்கு விதிகளை தளர்த்தி வரிகளை குறைத்துள்ளார். இது நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018ஆம் ஆண்டு 70 கோடி விவசாயிகளுக்கு உர மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு 80 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அதனையடுத்து பேசிய சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா. சுப்ரமணியன், ”பிரிட்டானியா, குர்குரே மற்றும் லேஸ் ஆகிய நிறுவனங்கள் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்திவருவதை உடனடியாக தடை செய்ய வேண்டும். நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடையை கொண்டு வர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

Intro:மத்திய அமைச்சரிடம் மேடையில் கோரிக்கை வைத்த திமுக எம்எல்ஏ

சென்னை கிண்டியில் உள்ள சிப்பெட் பயிற்சி மையத்தில் மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கவுடா மத்திய கல்வி நிறுவனத்தின் ஆண்கள் விடுதி திறந்துவைத்தார் இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் கலந்து கொண்டனர்


Body:இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா வகையில் நாடு முழுவதும் புதிதாக 25 மாணவர் விடுதிகளை திறக்க உள்ளோம் ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடை செய்ய பிரதமர் மோடி உறுதியாக உள்ளார் எனவும்

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை வகைப்படுத்துவது தொடர்பாக ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கப்பட்ட குழு வரைவு அறிக்கை சமர்ப்பித்துள்ளது விரைவில் இறுதி அறிக்கை வெளியிடப்படும் என்றும்

தமிழ்நாட்டிற்கு எப்போதும் தனி முக்கியத்துவத்தை மத்திய அரசு அளித்து வருகிறது அதே நேரத்தில் இந்தியாவில் வேகமாக முன்னேறும் மாநிலங்களில் தமிழகம் முதன்மையாக உள்ளது எந்தத் துறை சார்பில் தமிழகத்தில் இருந்து வந்தாலும் உடனடியாக பரிசீலித்து வருகிறோம் என்றும் கூறினார்

பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் கூறுகையில் இன்றைய தினம் சிற் பெட்டில் ஆண்கள் விடுதி 191 அறைகளைக் கொண்ட திறந்து வைக்கப்பட்டுள்ளது ஒரு சில ஆண்டுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும்

நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஒரு ரூபாய்க்கு நாப்கின் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்தார் எனவும் தமிழகத்தில் பிளாஸ்டிக் முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தமிழகம் வளர்ச்சி பெற அனைத்து முயற்சிகள் எடுத்து வருவதாகவும் கூறினார்

மேலும் பிளாஸ்டிக் முழுமையாக ஒழிக்க முடியாது ஆனால் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிக்க நிபுணர்களிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது மேலும் பொருளாதார மந்தநிலை சரி செய்ய நிதியமைச்சர் உற்பத்தி நிறுவனங்களுக்கு விதிகளை தளர்த்தி வரிகளை குறைத்துள்ளார் இது நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும்

கடந்த ஆண்டு 70 கோடி விவசாயிகளுக்கு உர மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டது இந்த ஆண்டு 80 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறினார்

சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா சுப்ரமணியம் பேசுகையில் 20 மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது தடை செய்யப்பட்டு அபராதம் விதித்து உள்ளதாகவும் ஆனால் தமிழக அரசு 50 மைக்ரானுக்கு உட்பட பிளாஸ்டிக் மட்டும் தடை விதித்து இருக்கிறது எனவும் தனியார் பிஸ்கட் நிறுவனங்கள் பிரிட்டானியா குர்குரே மற்றும் லேஸ் ஆகியவை அன்றாட அவர்கள் பொருட்களின் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அதனை உடனே தடை செய்ய வேண்டும் எனவும்

நாடு முழுவதும் அமைச்சர் பிளாஸ்டிக் தடையை கொண்டு வர வேண்டுமென அமைச்சர் மேடையில் கோரிக்கை வைத்தார் திமுக சட்டமன்ற உறுப்பினர் மா சுப்ரமணியம்




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.