ETV Bharat / state

சிண்டிகேட் வங்கி ஊழியர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு - CBI files complaint against Syndicate Bank employees

சென்னை: சிண்டிகேட் வங்கி ஊழியர்கள் மீது 30 கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

சிண்டிகேட் வங்கி ஊழியர்கள் மீது சிபிஐ மோசடி வழக்குப் பதிவு
சிண்டிகேட் வங்கி ஊழியர்கள் மீது சிபிஐ மோசடி வழக்குப் பதிவு
author img

By

Published : Dec 19, 2019, 7:50 PM IST

இந்தியா முழுவதும் வங்கிகளில் கடன் பெற்றுத் தருவதில் மோசடி செய்வதாக சிபிஐயில் வழக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதன் தொடர்ச்சியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள சிண்டிகேட் வங்கி ஊழியர்கள் மீது 30 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

சிண்டிகேட் வங்கி மண்டல அலுவலகத்தின் துணை பொது மேலாளர் ராமலிங்கம், சிபிஐயிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், "சென்னை அண்ணா சாலையில் செயல்படும் சினாகோ நிறுவனம், அண்ணாசாலை கிளை சிண்டிகேட் வங்கி மூலமாக 30 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளது. மேலும், இந்நிறுவனம் பாலாஜி அசோசியேட், கற்பக விநாயகா போன்ற நிறுவனங்களுக்கு கடன் வாங்கித் தருவதில் சிண்டிகேட் வங்கி ஊழியர்களை பயன்படுத்தி உள்ளது. ஆகவே, சினாகோ நிறுவன இயக்குனர்கள் நான்கு பேர் மீதும், அண்ணாசாலை கிளை சிண்டிகேட் வங்கி ஊழியர்கள் ராஜேஷ் சிங், கெளரி சங்கர், சம்பத் குமார் ஆகிய மேலாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, சினாகோ நிறுவன இயக்குனர்கள், சிண்டிகேட் வங்கி ஊழியர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நில மோசடி வழக்கில் திமுக சட்டமன்ற உறுப்பினர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்!

இந்தியா முழுவதும் வங்கிகளில் கடன் பெற்றுத் தருவதில் மோசடி செய்வதாக சிபிஐயில் வழக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதன் தொடர்ச்சியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள சிண்டிகேட் வங்கி ஊழியர்கள் மீது 30 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

சிண்டிகேட் வங்கி மண்டல அலுவலகத்தின் துணை பொது மேலாளர் ராமலிங்கம், சிபிஐயிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், "சென்னை அண்ணா சாலையில் செயல்படும் சினாகோ நிறுவனம், அண்ணாசாலை கிளை சிண்டிகேட் வங்கி மூலமாக 30 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளது. மேலும், இந்நிறுவனம் பாலாஜி அசோசியேட், கற்பக விநாயகா போன்ற நிறுவனங்களுக்கு கடன் வாங்கித் தருவதில் சிண்டிகேட் வங்கி ஊழியர்களை பயன்படுத்தி உள்ளது. ஆகவே, சினாகோ நிறுவன இயக்குனர்கள் நான்கு பேர் மீதும், அண்ணாசாலை கிளை சிண்டிகேட் வங்கி ஊழியர்கள் ராஜேஷ் சிங், கெளரி சங்கர், சம்பத் குமார் ஆகிய மேலாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, சினாகோ நிறுவன இயக்குனர்கள், சிண்டிகேட் வங்கி ஊழியர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நில மோசடி வழக்கில் திமுக சட்டமன்ற உறுப்பினர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்!

Intro:Body:சென்னை சிண்டிகேட் வங்கி ஊழியர்கள் மீது 30 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது

நாடு முழுவதும் வங்கிகளில் கடன் பெற்றுத் தருவதில் மோசடி செய்வதாக சிபிஐ வழக்குகள் குவிந்த வண்ணம் இருந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சிண்டிகேட் வங்கி மண்டல அலுவலகத்தின் துணை பொது மேலாளர் ராமலிங்கம் புகார் ஒன்றை சி.பி.ஐ யிடம் அளித்திருந்தார்.அதில்
சென்னைஅண்ணா சாலையில் செயல்படும் சீனாகோ நிறுவனம் , நிலக்கரி கனிமவள விநியோகத்தை செய்து வருகிறது. அண்ணாசாலையில் உள்ள சிண்டிகேட் வங்கி மூலமாக 30 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.இந்த தனியார் நிறுவனம் மூலம் பாலாஜி அசோசியேட் மற்றும் கற்பக விநாயகா நிறுவனத்திற்கு கடன் வாங்கித் தருவதில் வங்கி ஊழியர்களை உடந்தையாக கொண்டு விதிமுறைகளை மீறி கடன் பெற்றது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சினாகோ நிறுவன இயக்குனர்கள் 4 பேரு மீதும்,அண்ணாசாலை கிளை சிண்டிகேட் வங்கி ஊழியர்கள் ராஜேஷ் சிங்,கெளரி சங்கர்,சம்பத் குமார் ஆகிய மேலாளர்கள் மீது சி.பி.ஐ மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக வழக்கு பதிவு செய்துள்ளது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.