ETV Bharat / state

நக்கீரன் கோபாலிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை

author img

By

Published : Apr 1, 2019, 5:17 PM IST

சென்னை: பொள்ளாச்சி பாலியல் துன்புறத்தல் தொடர்பான வழக்கில் நக்கீரன் கோபாலிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று விசாரணை மேற்கொள்கின்றனர்.

நக்கீரன் கோபால்

கோவை மாவட்டம்,பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களை ஏமாற்றி வாலிபர்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக நக்கீரன் இணையதளத்தில் நக்கீரன் கோபால் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார்.

பின்பு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இதில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் நக்கீரன் கோபால் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகி இணையதளத்தில் வெளியிட்ட வீடியோ உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பினர்.

இதனை தொடர்ந்து நக்கீரன் கோபாலின் வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நக்கீரன் கோபாலிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் , 'சென்னையில் இருக்கும் பத்திரிகை ஆசிரியரை கோவைக்கு அழைப்பதன் காரணம் என்ன? உண்மையிலேயே விசாரணை ஆவணங்கள் தேவைப்படும் பட்சத்தில் சென்னையிலேயே விசாரித்திருக்கலாமே?' என்று கூறி சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் 1ஆம் தேதி அன்று அவரை விசாரிக்கலாம் என்று தீர்ப்பு அளித்தனர். அதன் அடிப்படையில் இன்று விசாரணைக்கு ஆஜராகினர்.

கோவை மாவட்டம்,பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களை ஏமாற்றி வாலிபர்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக நக்கீரன் இணையதளத்தில் நக்கீரன் கோபால் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார்.

பின்பு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இதில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் நக்கீரன் கோபால் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகி இணையதளத்தில் வெளியிட்ட வீடியோ உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பினர்.

இதனை தொடர்ந்து நக்கீரன் கோபாலின் வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நக்கீரன் கோபாலிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் , 'சென்னையில் இருக்கும் பத்திரிகை ஆசிரியரை கோவைக்கு அழைப்பதன் காரணம் என்ன? உண்மையிலேயே விசாரணை ஆவணங்கள் தேவைப்படும் பட்சத்தில் சென்னையிலேயே விசாரித்திருக்கலாமே?' என்று கூறி சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் 1ஆம் தேதி அன்று அவரை விசாரிக்கலாம் என்று தீர்ப்பு அளித்தனர். அதன் அடிப்படையில் இன்று விசாரணைக்கு ஆஜராகினர்.

பொள்ளாச்சி வழக்கு தொடர்பாக நக்கீரன்கோபாலிடம் இன்று சி.பி.சி.ஐ.டி. விசாரணை

பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பாக நக்கீரன் இணையதளத்தில் நக்கீரன் கோபால் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார்.பின்பு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்.இதனை தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் நக்கீரன் கோபால் மீது வழக்கு தொடரப்பட்டது.இப்புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தனர்.அந்த வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பி வந்தனர். இதனை தொடர்ந்து நக்கீரன் கோபாலின் வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதனையடுத்து, நக்கீரன்கோபால் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில், 'சென்னையில் இருக்கும் பத்திரிகை ஆசிரியரை கோவைக்கு அழைப்பதன் காரணம் என்ன? உண்மையிலேயே விசாரணை ஆவணங்கள் தேவைப்படும் பட்சத்தில் சென்னையிலேயே விசாரித்திருக்கலாமே?' என்று கூறி சென்னையில்  உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் 1ஆம் தேதி அன்று அவரை விசாரிக்கலாம் என்று தீர்ப்பு அளித்தனர். அதன் அடிப்படையில் இன்று விசாரணைக்கு ஆஜராகினர்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.