ETV Bharat / state

பாலியல் புகார்: ஐபிஎஸ் அலுவலரிடம் 3 மணி நேரம் விசாரணை

author img

By

Published : Mar 16, 2021, 6:14 PM IST

சென்னை: பாலியல் புகார் அளிக்கவிடாமல் பெண் எஸ்பியைத் தடுத்து நிறுத்திய, இடைநீக்கம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அலுவலரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

Cbcid
சிபிசிஐடி

முதலமைச்சர் சுற்றுப் பயணத்தின்போது பாதுகாப்பிற்காக வந்த சிறப்பு டிஜிபி, காரில் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பெண் காவல் கண்காணிப்பாளர் ஒருவர் உள் துறையைக் கவனிக்கும் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகரிடமும், காவல் துறைத் தலைவர் (டிஜிபி) ஜே.கே. திரிபாதியிடமும் புகார் அளித்தார்.

இதுமட்டுமின்றி அவர் சிறப்பு டிஜிபி மீது புகாரளிக்கச் சென்றபோது, அவரை செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளராக இருந்த ஐபிஎஸ் அலுவலர் தடுத்து நிறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இது காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறப்பு டிஜிபி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டார். மேலும், 10-க்கும் மேற்பட்ட பெண் ஐபிஎஸ் அலுவலர்கள் காவல் துறைத் தலைவரைச் சந்தித்து சிறப்பு டிஜிபியை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கைவைத்தனர்.

தொடர்ந்து, இவ்வழக்கை விசாரிக்கப் பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அடங்கிய ஆறு பேர் கொண்ட குழுவைத் தமிழ்நாடு அரசு நியமித்தது. உடனடியாகச் சிறப்பு டிஜிபியை கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும், செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளராக இருந்த ஐபிஎஸ் அலுவலர் முதலில் பணியிட மாற்றம் செய்த நிலையில், பின்னர் இடைநீக்கம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் பெண் காவல் கண்காணிப்பாளர் பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்யவும் உத்தரவு பிறப்பித்தார். தற்போது, சிபிசிஐடி தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றது. பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபியை, சிபிசிஐடி காவல் துறை நேரில் அழைத்து சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், பாலியல் புகார் அளிக்கவிடாமல் பெண் காவல் கண்காணிப்பாளரை சுங்கச்சாவடி அருகே தடுத்து நிறுத்திய இடைநீக்கம்செய்யப்பட்ட ஐபிஎஸ் அலுவலரை, இன்று (மார்ச் 16) சிபிசிஐடி காவல் துறை விசாரணை நடத்தியுள்ளது.

குறிப்பாக சுங்கச்சாவடியில் என்ன நடந்தது என்பது குறித்து சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் சில காவல் கண்காணிப்பாளர்கள் செல்போன் மூலம் மிரட்டியதாகப் புகாரில் தெரிவித்துள்ளதால் அவர்களை அழைத்தும் விசாரணை நடத்தவும் சிபிசிஐடி முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 100% ரயில் போக்குவரத்திற்கு உத்தரவிட முடியாது - உயர் நீதிமன்றம்

முதலமைச்சர் சுற்றுப் பயணத்தின்போது பாதுகாப்பிற்காக வந்த சிறப்பு டிஜிபி, காரில் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பெண் காவல் கண்காணிப்பாளர் ஒருவர் உள் துறையைக் கவனிக்கும் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகரிடமும், காவல் துறைத் தலைவர் (டிஜிபி) ஜே.கே. திரிபாதியிடமும் புகார் அளித்தார்.

இதுமட்டுமின்றி அவர் சிறப்பு டிஜிபி மீது புகாரளிக்கச் சென்றபோது, அவரை செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளராக இருந்த ஐபிஎஸ் அலுவலர் தடுத்து நிறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இது காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறப்பு டிஜிபி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டார். மேலும், 10-க்கும் மேற்பட்ட பெண் ஐபிஎஸ் அலுவலர்கள் காவல் துறைத் தலைவரைச் சந்தித்து சிறப்பு டிஜிபியை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கைவைத்தனர்.

தொடர்ந்து, இவ்வழக்கை விசாரிக்கப் பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அடங்கிய ஆறு பேர் கொண்ட குழுவைத் தமிழ்நாடு அரசு நியமித்தது. உடனடியாகச் சிறப்பு டிஜிபியை கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும், செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளராக இருந்த ஐபிஎஸ் அலுவலர் முதலில் பணியிட மாற்றம் செய்த நிலையில், பின்னர் இடைநீக்கம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் பெண் காவல் கண்காணிப்பாளர் பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்யவும் உத்தரவு பிறப்பித்தார். தற்போது, சிபிசிஐடி தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றது. பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபியை, சிபிசிஐடி காவல் துறை நேரில் அழைத்து சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், பாலியல் புகார் அளிக்கவிடாமல் பெண் காவல் கண்காணிப்பாளரை சுங்கச்சாவடி அருகே தடுத்து நிறுத்திய இடைநீக்கம்செய்யப்பட்ட ஐபிஎஸ் அலுவலரை, இன்று (மார்ச் 16) சிபிசிஐடி காவல் துறை விசாரணை நடத்தியுள்ளது.

குறிப்பாக சுங்கச்சாவடியில் என்ன நடந்தது என்பது குறித்து சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் சில காவல் கண்காணிப்பாளர்கள் செல்போன் மூலம் மிரட்டியதாகப் புகாரில் தெரிவித்துள்ளதால் அவர்களை அழைத்தும் விசாரணை நடத்தவும் சிபிசிஐடி முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 100% ரயில் போக்குவரத்திற்கு உத்தரவிட முடியாது - உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.