ETV Bharat / state

சென்னையில் அனுமதியின்றி டிரோன்கள் பறக்கவிடுபவர்கள் மீது வழக்குப்பதிவு - எச்சரித்த காவல் துறை

author img

By

Published : Oct 27, 2022, 10:42 PM IST

சென்னையில் அனுமதியின்றி டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்றம், ரிசர்வ் வங்கி ஆகிய இடங்களை ஆளில்லா விமானம் மூலம் படம்பிடித்த கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Cases filed against those flying drones without permission in Chennai warned by Police Department
Cases filed against those flying drones without permission in Chennai warned by Police Department

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு மேலே இன்று மதியம் ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது. இது தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து உயர் நீதிமன்றத்தைச்சுற்றி போலீசார் சோதனை செய்தபோது இளைஞர் ஒருவர் ஆளில்லா விமானத்தைப் பறக்கவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை செய்தபொழுது, அந்த இளைஞர் கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த சார்லஸ் என்பதும், தனது உறவினர் திருமணத்திற்காக பெரம்பூருக்கு டிரோன் கேமராவை எடுத்து வந்ததாகவும், திருமணம் முடிந்து சென்னையில் உள்ள முக்கிய இடங்களை படம் பிடிக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது டிரோன் கேமராவில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்தபோது, ரிசர்வ் வங்கி, உயர் நீதிமன்றம், தலைமைச்செயலகத்தில் ஒரு பகுதி என தடை செய்யப்பட்ட இடங்களின் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு டிரோன் கேமரா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் தலைமைச்செயலகம், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், முக்கியப்பிரமுகர்களின் குடியிருப்புகள், தூதரகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் துறை அலுவலகங்கள், மத்திய, மாநில முக்கிய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சிறைச்சாலைகள், அரசு தொலைக்காட்சி நிறுவனம், பொதுமக்கள் அதிகளவில் கூடும் வழிபாட்டுத்தலங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் காடுகள் போன்ற இடங்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த சார்லஸ்
கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த சார்லஸ்
பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் திருமணம், கோயில் திருவிழா, சினிமா, குறும்படம் தயாரித்தல் போன்ற நிகழ்வுகளின்போதும் காவல் துறையில் உரிய அனுமதி பெற்ற பிறகு, டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிட்டு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. இனி, வரும் காலங்களில் உரிய அனுமதி இல்லாமல் தடை செய்யப்பட்டப் பகுதிகளில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: என்ஐஏவுக்கு தமிழ்நாடு காவல்துறை ஒத்துழைப்பு வழங்கும்: டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு மேலே இன்று மதியம் ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது. இது தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து உயர் நீதிமன்றத்தைச்சுற்றி போலீசார் சோதனை செய்தபோது இளைஞர் ஒருவர் ஆளில்லா விமானத்தைப் பறக்கவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை செய்தபொழுது, அந்த இளைஞர் கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த சார்லஸ் என்பதும், தனது உறவினர் திருமணத்திற்காக பெரம்பூருக்கு டிரோன் கேமராவை எடுத்து வந்ததாகவும், திருமணம் முடிந்து சென்னையில் உள்ள முக்கிய இடங்களை படம் பிடிக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது டிரோன் கேமராவில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்தபோது, ரிசர்வ் வங்கி, உயர் நீதிமன்றம், தலைமைச்செயலகத்தில் ஒரு பகுதி என தடை செய்யப்பட்ட இடங்களின் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு டிரோன் கேமரா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் தலைமைச்செயலகம், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், முக்கியப்பிரமுகர்களின் குடியிருப்புகள், தூதரகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் துறை அலுவலகங்கள், மத்திய, மாநில முக்கிய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சிறைச்சாலைகள், அரசு தொலைக்காட்சி நிறுவனம், பொதுமக்கள் அதிகளவில் கூடும் வழிபாட்டுத்தலங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் காடுகள் போன்ற இடங்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த சார்லஸ்
கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த சார்லஸ்
பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் திருமணம், கோயில் திருவிழா, சினிமா, குறும்படம் தயாரித்தல் போன்ற நிகழ்வுகளின்போதும் காவல் துறையில் உரிய அனுமதி பெற்ற பிறகு, டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிட்டு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. இனி, வரும் காலங்களில் உரிய அனுமதி இல்லாமல் தடை செய்யப்பட்டப் பகுதிகளில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: என்ஐஏவுக்கு தமிழ்நாடு காவல்துறை ஒத்துழைப்பு வழங்கும்: டிஜிபி சைலேந்திர பாபு

For All Latest Updates

TAGGED:

Drone
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.