தமிழ்நாட்டில் மால்கள், வணிக வளாகங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த விஜயகோபால் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மால்கள், வணிக வளாகங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களுக்கான கட்டணங்களை நிர்ணயித்து அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அதை மீறி சட்டவிரோதமாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மனுவில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வாகன நிறுத்துமிடங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என ஆந்திரா, குஜராத் உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளதை மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். வாகன நிறுத்துமிடத்துக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் மால்கள், வணிக வளாகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; அதிக கட்டண வசூல் குறித்து புகார் அளிப்பதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் சஞ்ஜீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம் எனக் கூறி, மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சாதி சான்றிதழ்