ETV Bharat / state

பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை - ஓபிஎஸ்க்கு அமைச்சர் பதில்

author img

By

Published : Aug 3, 2021, 5:37 PM IST

பேருந்து கட்டணம் குறித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் குற்றச்சாட்டுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலளித்துள்ளார்.

பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை -  ஓபிஎஸ்க்கு அமைச்சர் பதில்
பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை - ஓபிஎஸ்க்கு அமைச்சர் பதில்

சென்னை: சில பகுதிகளில் பெண்களுக்கான இலவச பேருந்தில் ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிமுக ஒருக்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று பதிலளித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. எந்த வழித்தடத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஓ. பன்னீர்செல்வம் அரசியல் லாபத்திற்காக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை

பேருந்தில் சிசிடிவி கேமரா

அரசு பேருந்துகளில் மகளிர் பயணம் செய்வது 60 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதுவரை 47 ஆயிரத்து 846 திருநங்கைகள், நான்கு லட்சத்து 43 ஆயிரத்து 163 மாற்றுத்திறனாளிகள், அவர்களுடைய உதவியாளர்களாக 36 ஆயிரத்து 51 நபர்கள் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர்.

நிர்பயா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நகரப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா வருகிற நவம்பர் மாதம் முதல் பொருத்தப்படும். அதனைத் தொடர்ந்து அனைத்து பேருந்துகளிலும் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை, சென்னை நகரங்களில் 100 மின்சார பேருந்துகள் சோதனை முறையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருமாவளவன் சந்திப்பு சர்ச்சை

விசிக தலைவர் திருமாவளவன் என்னை சந்தித்ததை தேவையில்லாமல் அரசியலாக்குகிறார்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள். என் அருகில் அமர்ந்து பேச வேண்டும் என்பதற்காகவே பிளாஸ்டிக் சேர் பயன்படுத்தினார். அவரது உடல் மொழியை தவறாக புரிந்து கொண்டு அவதூறு பரப்புகிறார்கள் " என்று கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்

சென்னை: சில பகுதிகளில் பெண்களுக்கான இலவச பேருந்தில் ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிமுக ஒருக்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று பதிலளித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. எந்த வழித்தடத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஓ. பன்னீர்செல்வம் அரசியல் லாபத்திற்காக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை

பேருந்தில் சிசிடிவி கேமரா

அரசு பேருந்துகளில் மகளிர் பயணம் செய்வது 60 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதுவரை 47 ஆயிரத்து 846 திருநங்கைகள், நான்கு லட்சத்து 43 ஆயிரத்து 163 மாற்றுத்திறனாளிகள், அவர்களுடைய உதவியாளர்களாக 36 ஆயிரத்து 51 நபர்கள் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர்.

நிர்பயா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நகரப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா வருகிற நவம்பர் மாதம் முதல் பொருத்தப்படும். அதனைத் தொடர்ந்து அனைத்து பேருந்துகளிலும் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை, சென்னை நகரங்களில் 100 மின்சார பேருந்துகள் சோதனை முறையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருமாவளவன் சந்திப்பு சர்ச்சை

விசிக தலைவர் திருமாவளவன் என்னை சந்தித்ததை தேவையில்லாமல் அரசியலாக்குகிறார்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள். என் அருகில் அமர்ந்து பேச வேண்டும் என்பதற்காகவே பிளாஸ்டிக் சேர் பயன்படுத்தினார். அவரது உடல் மொழியை தவறாக புரிந்து கொண்டு அவதூறு பரப்புகிறார்கள் " என்று கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.