ETV Bharat / state

ரேஷன் கடையில் மோடி படம் - ஒருமையில் திட்டிய ஏ.சி மீது பாஜகவினர் புகார் - மோடியின் புகைபடத்துடன் ஊர்வலமாக வந்த பாஜகவினர்

தாம்பரத்தில் உள்ள நியாய விலைக்கடையில் பிரதமரின் புகைப்படத்தை வைத்த பாஜகவினரை ஒருமையில் பேசியதாக தாம்பரம் துணை ஆணையர் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாக பாஜகவினர் தெரிவித்தனர்.

Etv Bharatரேஷன் கடையில் வைக்கப்பட்ட மோடி படம் - ஒருமையில் திட்டிய டிஜிபி மீது புகார்
Etv Bharatரேஷன் கடையில் வைக்கப்பட்ட மோடி படம் - ஒருமையில் திட்டிய டிஜிபி மீது புகார்
author img

By

Published : Nov 21, 2022, 7:58 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் நியாய விலைக்கடைகளில் பிரதமர் மோடி புகைப்படத்தை வைத்து வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவினர் மற்றும் பாஜகவினருக்கு மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மண்டலத்தலைவர் கணேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் ஊர்வலமாக வந்து, தாம்பரம் கடப்பேரி எம்.இ.எஸ் சாலையில் உள்ள நியாய விலைக்கடையின் உள்ளே புகைப்படத்தை வைத்தனர்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை நியாய விலைக்கடையில் வைப்பதற்காக தாம்பரம் காவல் நிலையத்தில் துணை ஆணையர் சிபி சக்கரவர்த்தியிடம் அனுமதி கேட்டபோது, தங்களை ஒருமையில் பேசி மிரட்டியதாகவும், இது குறித்து டிஜிபி அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ரேஷன் கடையில் மோடி படம் - ஒருமையில் திட்டிய ஏ.சி மீது பாஜகவினர் புகார்

இதையும் படிங்க:மங்களூரு ஆட்டோ வெடிப்பு வழக்கு - கர்நாடகா ஏடிஜிபி விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் நியாய விலைக்கடைகளில் பிரதமர் மோடி புகைப்படத்தை வைத்து வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவினர் மற்றும் பாஜகவினருக்கு மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மண்டலத்தலைவர் கணேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் ஊர்வலமாக வந்து, தாம்பரம் கடப்பேரி எம்.இ.எஸ் சாலையில் உள்ள நியாய விலைக்கடையின் உள்ளே புகைப்படத்தை வைத்தனர்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை நியாய விலைக்கடையில் வைப்பதற்காக தாம்பரம் காவல் நிலையத்தில் துணை ஆணையர் சிபி சக்கரவர்த்தியிடம் அனுமதி கேட்டபோது, தங்களை ஒருமையில் பேசி மிரட்டியதாகவும், இது குறித்து டிஜிபி அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ரேஷன் கடையில் மோடி படம் - ஒருமையில் திட்டிய ஏ.சி மீது பாஜகவினர் புகார்

இதையும் படிங்க:மங்களூரு ஆட்டோ வெடிப்பு வழக்கு - கர்நாடகா ஏடிஜிபி விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.