ETV Bharat / state

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு பாஜக பிரமுகர் அடைக்கலம்!

author img

By

Published : Jun 21, 2021, 4:50 PM IST

பாலியல் வழக்கில் கைதாகியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு, தென் மாவட்ட பா.ஜ.க முக்கிய பிரமுகர் ஒருவர் அடைகலம் கொடுத்தது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

சென்னை: துணை நடிகை அளித்த புகாரின் பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தென்மாவட்டங்களில் பதுங்கல்

விசாரணையில் மணிகண்டன் தென்மாவட்டங்களில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னையிலிருந்து 2 தனிப்படை காவல்துறையினர் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் மணிகண்டன் திருநெல்வேலியில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

திருநெல்வேலி டூ பெங்களூரு

ஆனால் அதற்குள் அவர் திருநெல்வேலியில் இருந்து பெங்களூரு சென்று விட்டதாக தெரிய வந்தது. இதனை அடுத்து பெங்களூரு அருகே ஆனைக்கல் என்கிற பகுதியில் நேற்று(ஜூன் 20) காலை காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து சென்னை அழைத்து வந்து, அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பாஜக பிரமுகர் அடைக்கலம்

இந்த விசாரணையில் துணை நடிகையை தொழில் ரீதியாக மட்டுமே தெரியும் எனவும், பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்புணர்வில் ஈடுபடவில்லை எனவும் மணிகண்டன் தெரிவித்தார். மேலும் பணம் பறிக்கும் நோக்கில் நடிகை செயலபடுவதாக கூறிய அவர், தென் மாவட்டத்தை சேர்ந்த பாஜக முக்கிய பிரமுகர் ஒருவர் வீட்டில் பத்து நாட்கள் தங்கி இருந்ததாகவும் அங்கிருந்து உயர் நீதிமன்றத்தில் முன்பிணை மனு தாக்கல் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு செல்ல திட்டம்

முன்பிணை தள்ளுபடி செய்யப்பட உள்ளது என தெரிந்து கொண்டதால், அந்த பா.ஜ.க., பிரமுகர் உதவியுடன் பெங்களூருக்கு தப்பிச் சென்று தங்கியதாகவும் விசாரணையில் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிகண்டனை, வரும் ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு, பாஜக பிரமுகர் அடைக்கலம் கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: துணை நடிகை அளித்த புகாரின் பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தென்மாவட்டங்களில் பதுங்கல்

விசாரணையில் மணிகண்டன் தென்மாவட்டங்களில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னையிலிருந்து 2 தனிப்படை காவல்துறையினர் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் மணிகண்டன் திருநெல்வேலியில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

திருநெல்வேலி டூ பெங்களூரு

ஆனால் அதற்குள் அவர் திருநெல்வேலியில் இருந்து பெங்களூரு சென்று விட்டதாக தெரிய வந்தது. இதனை அடுத்து பெங்களூரு அருகே ஆனைக்கல் என்கிற பகுதியில் நேற்று(ஜூன் 20) காலை காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து சென்னை அழைத்து வந்து, அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பாஜக பிரமுகர் அடைக்கலம்

இந்த விசாரணையில் துணை நடிகையை தொழில் ரீதியாக மட்டுமே தெரியும் எனவும், பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்புணர்வில் ஈடுபடவில்லை எனவும் மணிகண்டன் தெரிவித்தார். மேலும் பணம் பறிக்கும் நோக்கில் நடிகை செயலபடுவதாக கூறிய அவர், தென் மாவட்டத்தை சேர்ந்த பாஜக முக்கிய பிரமுகர் ஒருவர் வீட்டில் பத்து நாட்கள் தங்கி இருந்ததாகவும் அங்கிருந்து உயர் நீதிமன்றத்தில் முன்பிணை மனு தாக்கல் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு செல்ல திட்டம்

முன்பிணை தள்ளுபடி செய்யப்பட உள்ளது என தெரிந்து கொண்டதால், அந்த பா.ஜ.க., பிரமுகர் உதவியுடன் பெங்களூருக்கு தப்பிச் சென்று தங்கியதாகவும் விசாரணையில் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிகண்டனை, வரும் ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு, பாஜக பிரமுகர் அடைக்கலம் கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.