ETV Bharat / state

எல்.ஐ.சி.யை தனியாரிடம் கொடுத்து நாட்டை சீரழிக்கிறது பாஜக - கே.எஸ். அழகிரி

author img

By

Published : Feb 3, 2020, 7:22 AM IST

சென்னை: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை (எல்.ஐ.சி.) தனியாரிடம் கொடுத்து பாஜக அரசு நாட்டை சீரழித்துவருவதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.

கே எஸ் அழகிரி பேட்டி, KS Azhagiri press meet avadi
கே எஸ் அழகிரி பேட்டி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக, தோழமைக் கட்சிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கையெழுத்து இயக்கங்கள் தொடங்கிவைத்தனர்.

அந்தவகையில் ஆவடி மார்க்கெட் பகுதியில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு. நாசர், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் நடந்துசென்று பொதுமக்கள், வியாபாரிகளிடம் கையெழுத்துப் பெற்றனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி, மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது இந்தியாவிற்கே சாபக்கேடு நடந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்.ஐ.சி.) பிரீமியம் தொகையைக் கொண்டு கிராமப்புற வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது, இப்போது பாஜக அரசு தனியாரிடம் கொடுத்து நாட்டை சீரழித்துவருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

கே.எஸ். அழகிரி பேட்டி

மேலும் இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் நம் நாட்டின் ஆலயங்கள் என்று ஜவஹர்லால் நேரு கூறினார். அதனை பாஜக அரசு சிதைத்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க : பட்ஜெட் 2020-21: ரியல் எஸ்டேட் வரவேற்புக்குரியதா, ஏமாற்றக்கூடியதா?

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக, தோழமைக் கட்சிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கையெழுத்து இயக்கங்கள் தொடங்கிவைத்தனர்.

அந்தவகையில் ஆவடி மார்க்கெட் பகுதியில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு. நாசர், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் நடந்துசென்று பொதுமக்கள், வியாபாரிகளிடம் கையெழுத்துப் பெற்றனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி, மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது இந்தியாவிற்கே சாபக்கேடு நடந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்.ஐ.சி.) பிரீமியம் தொகையைக் கொண்டு கிராமப்புற வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது, இப்போது பாஜக அரசு தனியாரிடம் கொடுத்து நாட்டை சீரழித்துவருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

கே.எஸ். அழகிரி பேட்டி

மேலும் இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் நம் நாட்டின் ஆலயங்கள் என்று ஜவஹர்லால் நேரு கூறினார். அதனை பாஜக அரசு சிதைத்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க : பட்ஜெட் 2020-21: ரியல் எஸ்டேட் வரவேற்புக்குரியதா, ஏமாற்றக்கூடியதா?

Intro:ஆவடியில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடங்கியதுBody:ஆவடியில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது.

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மற்றும் தோழமை கட்சிகள் கையெழுத்து இயக்கத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதலே துவங்கி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஆவடி மார்கெட் பகுதியில்
காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் தி.மு.க.மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர். திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் நடந்து சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கையெழுத்து பெற்றனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
கே.எஸ்.அழகிரி கூறியதாவது,
மத்திய பட்ஜெட் தாங்களின் போது இந்தியாவிற்கே சாபக்கேடு நடந்துள்ளதாக தெரிவித்தார்.
ஆயுள் காப்பீட்டு கழகத்தில் ( LIC) மூலமாக அதன் பிரிமீயம் தொகையை கொண்டு கிராமப்புற வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது. இப்போது பா.ஜ.க.அரசு தனியாரிடம் கொடுத்து நாட்டை சீரழித்து வருவதாக அழகிரி குற்றம்சாட்டினார். மேலும் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் நம் நாட்டின் ஆலையங்கள் என்று ஜவஹர்லால் நேரு கூறினார். அதனை பா.ஜ.க.அரசு சிதைத்து விட்டதாக குற்றம்சாட்டினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.