ETV Bharat / state

#WhoKilledShubashree: அதிமுக பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீயின் உடல் தகனம்

author img

By

Published : Sep 13, 2019, 6:33 PM IST

Updated : Sep 13, 2019, 6:54 PM IST

சென்னை: அதிமுகவினர் வைத்த பேனரால் பரிதாபமாக உயிரிழந்த சுபஸ்ரீயின் உடல் குரோம்பேட்டை மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

subasri

சென்னை பள்ளிக்கரணை அருகே சாலையில் அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் நேர்ந்த விபத்தில் சுபஸ்ரீ என்னும் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து பரங்கிமலை போக்குவரத்துப் புலனாய்வு போலீசார், 304அ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் மனோஜை முதல் குற்றவாளியாகவும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்த்துள்ளனர்.

அதேபோல், அனுமதியின்றி பேனர் வைத்ததாகப் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் மாநகராட்சி அலுவலர்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது சாலையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக மற்றொரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். பேனரை அச்சிட்ட எஸ்.கொளத்தூரில் உள்ள சண்முகம் கிராஃபிக்ஸ் என்னும் பேனர் கடைக்கு சென்னை மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர்.

சுபஸ்ரீயின் உடல் நல்லடக்கம்

இந்நிலையில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சுபஸ்ரீயின் உடற்கூராய்வு செய்யப்பட்டு காலை சுமார் 10.30 மனியளவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தத் துயர சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். பின்னர், அவரின் உடல் அவரது வீட்டிலிருந்து வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

சென்னை பள்ளிக்கரணை அருகே சாலையில் அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் நேர்ந்த விபத்தில் சுபஸ்ரீ என்னும் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து பரங்கிமலை போக்குவரத்துப் புலனாய்வு போலீசார், 304அ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் மனோஜை முதல் குற்றவாளியாகவும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்த்துள்ளனர்.

அதேபோல், அனுமதியின்றி பேனர் வைத்ததாகப் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் மாநகராட்சி அலுவலர்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது சாலையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக மற்றொரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். பேனரை அச்சிட்ட எஸ்.கொளத்தூரில் உள்ள சண்முகம் கிராஃபிக்ஸ் என்னும் பேனர் கடைக்கு சென்னை மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர்.

சுபஸ்ரீயின் உடல் நல்லடக்கம்

இந்நிலையில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சுபஸ்ரீயின் உடற்கூராய்வு செய்யப்பட்டு காலை சுமார் 10.30 மனியளவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தத் துயர சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். பின்னர், அவரின் உடல் அவரது வீட்டிலிருந்து வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Intro:பள்ளிகரனை விபத்தில் அதிமுக பிரமுகர் மீது வழக்கு, சுபஸ்ரீ உடல் பிரேத பரிசோதனை செய்யபட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு.
Body:பள்ளிகரனை விபத்தில் அதிமுக பிரமுகர் மீது வழக்கு, சுபஸ்ரீ உடல் பிரேத பரிசோதனை செய்யபட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு.

சென்னை பள்ளிகாரணையில் சாலையில் இருந்த பேனர் விழுந்து சுபஸ்ரீ எனும் இளம்பெண் உயிரிழந்ததை தொடர்ந்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் 304அ பிரிவில் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனர் மனோஜை முதல் குற்றவாளியாகவும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபலை இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்த்துள்ளனர்.
அதேபோல் மாநகராட்சி அதிகாரிகள் பள்ளிகரனை காவல் நிலையத்தில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக அளித்த
புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது சாலையில் அனுமதிதின்றி பேனர் வைத்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேபோல் பேனர் அச்சிடபட்ட எஸ்.கொளத்தூரில் உள்ள சன்முகம் கிராப்பிக்ஸ் எனும் பேனர் கடைக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.சென்னை மாநகராட்சி மண்டலம் 14 உதவி செயற்பொறியாளர் ரவிவர்மா தலைமையில் 10 பேர் கொண்ட குழு போலீசார் பாதுகாப்புடன் கடைக்கு சீல் வைத்தனர்.

மேலும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சுபஸ்ரீ உடல் பிரேத பரிசோதனை செய்யபட்டு காலை சுமார் 10.30 மனியளவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தகவல் அறிந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மருத்துவமனை குவிந்தனர்.

அவரின் உடல் குரோம்பேட்டையில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்வதற்காக அவரது வீட்டிலிருந்து வாகனம் மூலம் எடுத்துச்செல்கின்றனர் Conclusion:
Last Updated : Sep 13, 2019, 6:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.