ETV Bharat / state

பி. ஆர்க் பட்டப்படிப்பு கலந்தாய்வு ஆகஸ்ட் 6இல் தொடக்கம்

author img

By

Published : Aug 2, 2019, 1:20 PM IST

சென்னை: பி.ஆர்க் பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நேரடி கலந்தாய்வு வரும் ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

புருஷோத்தமன் செய்தியாளர்கள் சந்திப்பு

இது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலர் புருஷோத்தமன் கூறியதாவது, "பி.ஆர்க் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூலை மாதம் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்தப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்த 2,170 மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் 1,827 மாணவர்கள் நேரடி கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பி.ஆர்க் பொறியியல் பட்டப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு சென்னை தரமணியில் நடைபெறும். ஆகஸ்ட் 6ஆம் தேதி காலையில் சிறப்புப் பிரிவினருக்கும் அதனைத் தொடர்ந்து மதியம் 2 மணி முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது" என்று கூறினார்.

புருஷோத்தமன் செய்தியாளர்கள் சந்திப்பு

அதேபோல் எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர டான்செட் தேர்வு எழுதிய மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

இது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலர் புருஷோத்தமன் கூறியதாவது, "பி.ஆர்க் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூலை மாதம் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்தப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்த 2,170 மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் 1,827 மாணவர்கள் நேரடி கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பி.ஆர்க் பொறியியல் பட்டப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு சென்னை தரமணியில் நடைபெறும். ஆகஸ்ட் 6ஆம் தேதி காலையில் சிறப்புப் பிரிவினருக்கும் அதனைத் தொடர்ந்து மதியம் 2 மணி முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது" என்று கூறினார்.

புருஷோத்தமன் செய்தியாளர்கள் சந்திப்பு

அதேபோல் எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர டான்செட் தேர்வு எழுதிய மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

Intro:பிஆர்க் பட்டப்படிப்பு கலந்தாய்வுBody:சென்னை,
பி ஆர்க் பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நேரடி கலந்தாய்வு வரும் ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகின்றன தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் கூறியதாவது, பி ஆர்க் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூலை மாதம் 15ஆம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்தப் படிப்பில் சேருவதற்கு 2170 மாணவர்கள் விண்ணப்பித்தனர் . அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் 1827 மாணவர்கள் நேரடி கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பி ஆர்க் பொறியியல் பட்டப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக்கில் நேரடியாக நடைபெறும்.

ஆகஸ்ட் 6-ம் தேதி காலையில் சிறப்பு பிரிவினரான மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து மதியம் 2 மணி முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. முதல் நாள் கலந்தாய்வில் தர வரிசை அடிப்படையில் 400 மாணவர்களும், 7 ந் தேதி கலந்தாய்விற்கு 1000 மாணவர்களும், 8 ந் தேதி கலந்தாய்விற்கு 427 மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
கலந்தாய்வு மையக் கற்கும் மாணவர்கள் இரண்டு மணி நேரம் முன்னதாக வருகை புரிய வேண்டும் .
அதேபோல் எம்பிஏ எம்சிஏ படிப்பில் சேர்வதற்கு டான்செட் தேர்வு எழுதிய மாணவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.
பிஆர்க் படிப்பிற்கான கலந்தாய்வு துவங்குவதற்கு முன்னரே 123 இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.