ETV Bharat / state

'ஏடீஸ் கொசுக்களை அழித்து டெங்குவை விரட்டுவோம்...!' - Awareness stop produce dengue Aedes mosquitoes Formation

சென்னை: டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடீஸ் கொசுக்களின் உற்பத்தியை தடுக்க மூன்று துறைகள் சேர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளதாக சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி பேட்டியளித்துள்ளார்.

dengue awareness
author img

By

Published : Sep 23, 2019, 2:06 PM IST

இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் தற்போது மழை பெய்துவரும் நிலையில், டெங்கு காய்ச்சலை உருவாக்கக்கூடிய ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாக அதிக வாய்ப்புள்ளது. எனவே வீட்டின் அருகிலுள்ள உபயோகமற்ற டயர்கள், தேங்காய் ஓடு, தேவையற்ற நெகிழிப் பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் கொசு புழு உற்பத்தியாகாமல் இருப்பதற்கு, வீடுகளிலுள்ள தண்ணீர் சேமிக்கும் குடங்கள், பாத்திரங்கள், தொட்டிகள் போன்றவற்றை நன்றாக மூடிவைக்க வேண்டும். குடிநீர் தொட்டியை வாரம் ஒருமுறை பிளிச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும், காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் தாங்களாகவே மருந்தகங்களுக்குச் சென்று மருந்தை வாங்கி சாப்பிடக் கூடாது. எனவே இதில் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் காய்ச்சல் வந்தால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ சென்று சிகிச்சைப் பெற வேண்டும். இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முன்கூட்டியே ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி

ஏடீஸ் கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்கும் நோக்குடன் சுகாதாரத் துறையும் உள்ளாட்சித் துறையும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவர்களை வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தத் திட்டமிட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் - பொதுமக்கள் பீதி

டெங்கு பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள காவலர்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம்

இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் தற்போது மழை பெய்துவரும் நிலையில், டெங்கு காய்ச்சலை உருவாக்கக்கூடிய ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாக அதிக வாய்ப்புள்ளது. எனவே வீட்டின் அருகிலுள்ள உபயோகமற்ற டயர்கள், தேங்காய் ஓடு, தேவையற்ற நெகிழிப் பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் கொசு புழு உற்பத்தியாகாமல் இருப்பதற்கு, வீடுகளிலுள்ள தண்ணீர் சேமிக்கும் குடங்கள், பாத்திரங்கள், தொட்டிகள் போன்றவற்றை நன்றாக மூடிவைக்க வேண்டும். குடிநீர் தொட்டியை வாரம் ஒருமுறை பிளிச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும், காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் தாங்களாகவே மருந்தகங்களுக்குச் சென்று மருந்தை வாங்கி சாப்பிடக் கூடாது. எனவே இதில் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் காய்ச்சல் வந்தால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ சென்று சிகிச்சைப் பெற வேண்டும். இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முன்கூட்டியே ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி

ஏடீஸ் கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்கும் நோக்குடன் சுகாதாரத் துறையும் உள்ளாட்சித் துறையும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவர்களை வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தத் திட்டமிட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் - பொதுமக்கள் பீதி

டெங்கு பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள காவலர்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம்

Intro:டெங்கு காய்ச்சல் அண்டை மாநிலத்தில் இருந்து பரவுகிறது


Body:டெங்கு காய்ச்சல் அண்டை மாநிலத்தில் இருந்து பரவுகிறது
பொது சுகாதார துறை இயக்குனர் பேட்டி
சென்னை,
டெங்கு காய்ச்சல் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் அதிகளவில் பரவி வருகின்றன பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்தார்.
பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஈ டிவி பாரதத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் உட்பட மழைக்காலத்தில் பரவக்கூடிய தொற்று நோய்கள், காய்ச்சல் ஆகியவற்றை கட்டுப்படுத்த அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


தற்போது தமிழகம் முழுவதும் நன்றாக மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சலை உருவாக்கக்கூடிய ஏடிஎஸ் கொசுக்களை உற்பத்தியாக அதிக வாய்ப்புள்ளது. எனவே வீட்டின் அருகிலுள்ள உபயோகமற்ற டயர்கள், தேங்காய் ஒடு, தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் கொசு புழு உற்பத்தி ஆகாமல் இருப்பதற்கு தங்கள் வீட்டில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.
தங்கள் வீடுகளில் உள்ள தண்ணீரை நன்றாக மூடி வைக்க வேண்டும். குடிநீர் தொட்டியை வாரம் ஒருமுறை பிளிச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி ஆகாத வகையில் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறையுடன் இணைந்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பள்ளி, கல்லூரிகள் ,தொழிற்சாலைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளோம்.

காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் மருந்தகங்களுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது. காய்ச்சல் வந்தால் பொது மக்கள் அலட்சியமாக இல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக இருபத்தி நாலு மணி நேரமும் செயல்படும் வகையில் தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. பரிசோதனை செய்ய தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. அனைத்து காய்ச்சல்களும் அபாயகரமான காய்ச்சல் அல்ல. இருந்தாலும் பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சர்வதேச சுகாதார விதிகளின்படி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் வந்தால் உடம்பில் நீர்ச்சத்து குறையும். எனவே அப்போது இளநீர், ஓ .ஆர் .எஸ். பவுடர், ரசம் போன்ற நீர் ஆகாரமான உணவுகள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை ஐந்து நாட்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும். ஆறு, ஏழு ,எட்டு நாட்களில் தட்டை அணுக்கள் குறைபாடு ஏற்பட்டு ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளை அடுத்த மூன்று நாட்கள் தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் வைத்திருந்தால் எந்த வித பிரச்சினையும் வராது.
பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல், தன் சுத்தம், வெளியில் சென்று வந்தால் கைகளை கழுவுதல், குடிநீரில் குளோரின் கலந்து குடிப்பது, தண்ணீரை காய்ச்சி குடிப்பது போன்றவற்றை கடைபிடித்தால் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களை வராமல் தடுக்க முடியும்.
டெங்கு காய்ச்சல் தற்போது அண்டை மாநிலங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் பரவிவருகிறது. டெங்கு காய்ச்சல் குறித்து 24 மணிநேரமும் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மையத்திற்கு தகவல் வந்தவுடன், சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர்களை அந்தப் பகுதிக்கு அனுப்பி தேவையான மருத்துவ வசதி , தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.
மேலும் இதுபோன்ற காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக நடமாடும் மருத்துவ குழுக்களும் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.