ETV Bharat / state

வேலை வாங்கித் தருவதாக  மோசடி - டேங்க் பேக்டரி அலுவலர் கைது

author img

By

Published : Jun 26, 2021, 7:11 PM IST

ஆவடி டேங்க் பேக்டரியில், வேலை வாங்கித் தருவதாக கூறி 90 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்த பேக்டரி கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.90 லட்சம் பணம் மோசடி -  டேங்க் பேக்டரி அலுவலர் கைது
வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.90 லட்சம் பணம் மோசடி - டேங்க் பேக்டரி அலுவலர் கைது

சென்னை: கங்கா தெருவைச் சேர்ந்தவர் உத்தமராஜ் , ஓய்வு பெற்ற ஆவடி டேங்க் பேக்டரி ஊழியர். கடந்த ஆண்டு இவருக்கும் ஆவடி டேங்க் பேக்டரியில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் ரமேஷ்பாபு என்பவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. அப்போது, ரமேஷ்பாபு ஆவடி டேங்க் பேக்டரி, தென்னக ரயில்வே துறையில் உயர் அலுவலர்களைத் தனக்கு தெரியும் என்றும் உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக உத்தமராஜிடம் அவர் கூறியுள்ளார். இதனை நம்பிய உத்தமராஜ் உறவினர்கள், நண்பர்கள் உள்பட எட்டு பேரிடம் ரூ. 15 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை வாங்கி ரமேஷ்பாபுவிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், ஒரு வருடத்திற்கு மேலாகியும் பணம் கொடுத்தவர்களுக்கு வேலையும் கிடைக்கவில்லை, பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இது பற்றி கேட்ட உத்தமராஜிக்கு, ரமேஷ்பாபு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து உத்தமராஜ் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆவடி உதவி காவல் ஆணையர் சத்தியமூர்த்தி ரமேஷ்பாபுவிடம் விசாரணை நடத்தியதில், வேலை வாங்கி தருவதாக 18 பேரிடம் தலா ரூ. 2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை என மொத்தம் ரூ.90 லட்சத்துக்கு மேல் பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ரமேஷ்பாபுவை இன்று கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல் - தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க செய்வோம் - கமல்ஹாசன்

சென்னை: கங்கா தெருவைச் சேர்ந்தவர் உத்தமராஜ் , ஓய்வு பெற்ற ஆவடி டேங்க் பேக்டரி ஊழியர். கடந்த ஆண்டு இவருக்கும் ஆவடி டேங்க் பேக்டரியில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் ரமேஷ்பாபு என்பவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. அப்போது, ரமேஷ்பாபு ஆவடி டேங்க் பேக்டரி, தென்னக ரயில்வே துறையில் உயர் அலுவலர்களைத் தனக்கு தெரியும் என்றும் உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக உத்தமராஜிடம் அவர் கூறியுள்ளார். இதனை நம்பிய உத்தமராஜ் உறவினர்கள், நண்பர்கள் உள்பட எட்டு பேரிடம் ரூ. 15 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை வாங்கி ரமேஷ்பாபுவிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், ஒரு வருடத்திற்கு மேலாகியும் பணம் கொடுத்தவர்களுக்கு வேலையும் கிடைக்கவில்லை, பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இது பற்றி கேட்ட உத்தமராஜிக்கு, ரமேஷ்பாபு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து உத்தமராஜ் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆவடி உதவி காவல் ஆணையர் சத்தியமூர்த்தி ரமேஷ்பாபுவிடம் விசாரணை நடத்தியதில், வேலை வாங்கி தருவதாக 18 பேரிடம் தலா ரூ. 2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை என மொத்தம் ரூ.90 லட்சத்துக்கு மேல் பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ரமேஷ்பாபுவை இன்று கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல் - தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க செய்வோம் - கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.