ETV Bharat / state

மன்னிப்பு கேட்க வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்... 6 பேர் கைது!

author img

By

Published : Feb 11, 2020, 9:27 AM IST

சென்னை: மன்னிப்பு கேட்க வந்தவரை வீட்டில் கட்டி வைத்து உதைத்து மொட்டை போட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

at-chennai-6-persons-got-arrested-for-allegedly-shaving-one-persons-head
மன்னிப்பு கேட்க வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்... 6 பேர் கைது!

சென்னை நம்மாழ்வார்பேட்டை கே.எச் சாலையைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (20). இவர் கடந்த 4ஆம் தேதியன்று குடிபோதையில் தேவராஜ் என்ற நபரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் அன்று மாலை தனது தாய், மனைவியுடன் தேவராஜ் வீட்டிற்கு வசந்தகுமார் மன்னிப்பு கேட்க சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த தேவராஜின் நண்பர்கள் சிலர் அவரை பிடித்து கட்டிபோட்டுள்ளனர்.

பின்னர் வசந்தகுமாரை தாக்கிவிட்டு அவர் தலையை மொட்டை அடித்து காலில் சூடு வைத்து கொடுமைபடுத்தி உள்ளனர். மேலும் இதைப்பற்றி வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் அந்த கும்பல் மிரட்டி உள்ளது.

இந்த சம்பவம் பற்றி தலைமை செயலக காலனி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது நடந்த சம்பவம் தொடர்பாக வசந்தகுமார் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் வசந்த குமாரை கொடுமைப்படுத்திய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் - வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர்

சென்னை நம்மாழ்வார்பேட்டை கே.எச் சாலையைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (20). இவர் கடந்த 4ஆம் தேதியன்று குடிபோதையில் தேவராஜ் என்ற நபரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் அன்று மாலை தனது தாய், மனைவியுடன் தேவராஜ் வீட்டிற்கு வசந்தகுமார் மன்னிப்பு கேட்க சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த தேவராஜின் நண்பர்கள் சிலர் அவரை பிடித்து கட்டிபோட்டுள்ளனர்.

பின்னர் வசந்தகுமாரை தாக்கிவிட்டு அவர் தலையை மொட்டை அடித்து காலில் சூடு வைத்து கொடுமைபடுத்தி உள்ளனர். மேலும் இதைப்பற்றி வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் அந்த கும்பல் மிரட்டி உள்ளது.

இந்த சம்பவம் பற்றி தலைமை செயலக காலனி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது நடந்த சம்பவம் தொடர்பாக வசந்தகுமார் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் வசந்த குமாரை கொடுமைப்படுத்திய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் - வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர்

Intro:Body:மன்னிப்பு கேட்க வந்தவரை வீட்டில் கட்டி வைத்து உதைத்து மொட்டை போட்ட 6பேர் கொண்ட கும்பல் கைது.

சென்னை நம்மாழ்வார்பேட்டை கே.எச் சாலையை சேர்ந்தவர் வசந்தகுமார்( 20).இவர் கடந்த 4ஆம் தேதியன்று குடிபோதையில் தேவராஜ் என்ற நபரிடம் தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.

பின்னர் அன்று மாலை தனது தாய் மற்றும் மனைவியுடன் தேவராஜ் என்பவரின் வீட்டிற்கு வசந்தகுமார் மன்னிப்பு கேட்க சென்றுள்ளார்.அப்போது அங்கு மறைந்திருந்த தேவராஜின் நண்பர்கள் சிலர் வசந்த குமாரை பிடித்து கட்டிபோட்டுள்ளனர்.பின்னர் தாக்கிவிட்டு வசந்தகுமாரின் தலையை மொட்டை அடித்துவிட்டு காலில் சூடு வைத்து கொடுமைபடுத்தி உள்ளனர். மேலும் இதை பற்றி வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் அந்த கும்பல் மிரட்டி உள்ளது.

பின்னர் இந்த சம்பவம் பற்றி தலைமை செயலக காலனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தனர்.அப்போது நடந்த சம்பவம் தொடர்பாக வசந்த குமார் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் வசந்த குமாரை கொடுமைப்படுத்திய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.